திருவிழா
கூட்டத்தில்
தொலைந்த
குழந்தையாய்
அழுது நிற்கிறேன்
என் இதயத்தை
உன்னிடம்
தொலைத்துவிட்டு….
தொலைந்தது
தொலைந்ததாக
உன்னிடமே
இருக்கட்டும்....
ஆனால் திருப்பிக்
கொடுத்துவிடு
உன்னுடையதை…..
பிரிதலின்
நிமிடத்தில்
பிரியத்தை
உரைத்து
ப்ரளயத்தை
அமைதியாக
உண்டாக்கியவன் தானே நீ….
எனக்கு சத்தம்
போட்டு
அழவேண்டும்
மௌனமாக
சிரிக்க வேண்டும்
"எனைத் தழுவிய
உன் பிரியத்தையும்"
"எனைத் தள்ளிய
உன் பிரிதலையும்" நினைத்து……
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
No comments:
Post a Comment