Followers

திருக்குறள்

Monday, March 28, 2011

த‌ன்னையே என‌க்காக‌ மெழுகாக்கிய‌வ‌ள்….அம்மா

நீ
என் த‌லையில்
கை வைத்து தேய்த்த‌ போது
ம‌றைந்த‌ த‌லைவ‌லியில்.
கோப‌ம் வ‌ந்த‌து அப்பா மீது
அவ‌ர் அழைத்துச் சென்றுப்போட்ட‌
ஊசியை நினைத்து..

முந்திய‌ உயிரணுவில்
என்னை க‌ருவாக்கிய‌வ‌ள் !
பிந்திய‌ என் வாழ் நிலையை
ந‌ல்முறையில் உறுவாக்கிய‌வ‌ள் !
த‌ன்னையே என‌க்காக‌ மெழுகாக்கிய‌வ‌ள்….
 
என் மூச்சைப் பேச்சாக்கி
நான் உச்ச‌ரித்த‌
முத‌ல் வார்த்தை அம்மா…
பிற‌ர் என்னை போற்றிய‌போது
பூரித்த‌வ‌ள்.
பிற‌ர் என்னை தூற்றிய‌போது
போற்றிய‌வ‌ள்…
 
நான் அழுத‌ போது
உன் ப‌சியை ம‌ற‌ந்தாய் !
என் உற‌க்க‌த்திற்காக‌
உன் உற‌க்க‌ம் தொலைத்தாய் !
என் வாழ்க்கைக்காக‌
உன் வ‌ச‌ந்த‌த்தை இழ‌ந்தாய் !
ஆனால் ‍-  நான் ம‌ட்டும்
வாழுகின்றேன் தாயே உன்னை
எங்கேயோ தொலைத்துவிட்டு…
 
செல்ல‌ம்
உங்க‌ பேரு சொல்லு
என்றுக் கேட்டு
அன்று
அவ‌ள் சொல்லி த‌ந்த‌
நாக‌ரிக‌ம் தான்….
இன்று
முத‌லில்
என்னை அறிமுக‌ப‌டுத்திக்கொண்டு
பிற‌ர் அறிமுக‌ம் கோர‌முடிகிற‌து…

என்னுட‌ன் சேர்ந்து தான்
நீயும் பிற‌க்கின்றாய் என்று
எத்த‌னைப் பேருக்கு புரிகிற‌து…

உல‌க‌ பேர‌ழ‌கியென்று
யாரையோ தேர்ந்தெடுத்து
காட்டும்போது ‍ என‌க்கு
கோப‌ம் தான் வ‌ருகிற‌து! - அம்மா

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, March 21, 2011

திருப்பிக் கொடுத்துவிடு.

Indian Girls
 
ஒவ்வொரு முறையும்
மறக்கத்தான் நினைக்கிறேன்
கன்னங்களில் வழியும் கண்ணீரை
துடைத்த பின்…

காதலை எந்த
வடிவில் கண்டாலும்
மறுபடியும் கண்ணீர்
வருவதை ஏன் என்னால்
தடுக்க முடிவதில்லை?

நீ வாழ தொடங்கிவிட்டாய்
உன் வாழ்க்கையை..
அதில் தவறேதும் இல்லை
என் வாழ்க்கையையை
ஏன் என்னிடம் தர மறுக்கிறாய்?

எடுத்துக்கொள் என்று
இயல்பாக சொல்கிறாய்.
வர மாட்டேன் என
அடம்பிடிக்கும் இதயத்தை
சிலுவையிலா அறைய முடியும்?

அதுவும் சரிதான்.
நேற்று என் இதயத்தை
சிறையில் வைத்தாய்
இன்று சிலுவையில்....

எப்போதும் இல்லாமல்
விழித்திரை இப்போதெல்லாம்
அதிகநேரம் வேலை செய்கிறது.
தூக்கத்தை விடவும்
துடிப்பதைதான் அவைகள் அதிகம்
விரும்புகின்றன போலும்.

கண்ணில் விழுந்த தூசியை
முன்பெல்லாம் ஊதி எடுத்தாய்.
இப்போதெல்லாம் ஊசி கொண்டு
எடுக்கிறாய்..

உணவைக்கூட
இதழிலிருந்து இதழிற்கு
தடம் மாற்றினாய்.
ஏன் உணர்வை மட்டும்
மறுத்து விட்டாய்?

எத்தனை காதல் கடந்து வந்தாலும்
உன் இதயம் மட்டும்தான்
என் காதலுக்கான தாஜ்மகால்.

அங்கே எனக்கு
பள்ளியறை வேண்டாம்
கல்லறையாவது
கட்டிக்கொள்ள அனுமதி கொடு

இறக்கவும் விடவில்லை
இருக்கவும் விடவில்லை
என்னதான் வேண்டுமாம்
உன் நினைவுகளுக்கு?

நான் கொடுத்த எல்லாவற்றையும்
திருப்பி கொடுத்தாய்...

ஒன்றைத்தவிர..
அதை மட்டுமாவது
திருப்பிக் கொடுத்துவிடு.

திருப்பிக்கூட தரவேண்டாம்
ஒரே ஒரு முறை
கண்ணிலாவது காட்டிப்போ..
நீண்டநாள் ஆகிவிட்டது அதைப்பார்த்து..
ஆம். அனைவரும்
என்னிடம் கேட்கிறார்கள்.

தயவுசெய்து
தவணை முறையிலாவது
எனக்கு காட்டு

என் சிரிப்பை..

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, March 18, 2011

நீ இல்லா என் வாழ்வில்....

*
ஆதாம்
ஏவாள் சுவைத்த
பாவக்கனி
காதல்!

*

துளிர் துயிலும்
மழைத்துளி பருகவரும்
சின்னஞ்சிறு சிட்டுக்குருவியாய்
என்னிருதயம்
உனைத் தேடி
வரும் அந்நாளில்
காத்திரு காதலோடு!

*

கசப்பு மருந்தருந்திய
குழந்தையின் முகமாய்
இதயம்;
உன்னை காணா நாட்களில்!

*

ஒரு நாள்
மழையோடு;
மற்றொருநாள்
மலரோடு;
இன்னொரு நாள்
இசையோடு என்று
ஒவ்வொரு சந்திப்பின் பிறகும்
ஒவ்வொன்றோடு திரும்புகின்றேன்;
பொத்தி வைக்க இடமில்லாமல் போகும் நாளில்
மொத்தமாக கடத்திச் செல்வேன் உன்னை!

*

உலர்ந்து வெளிறி
உடையும் நிலையிலிருக்கிறது
ரோஜா இதழ்கள்;
பனி கூட உதிராமல்
பத்திரமாய் இருக்கிறது
அதை நீ கை சேர்த்த கணம்!

*

குளித்து வரும்
உன்னில் வழியும்
நீர்த்துளிகள் நினைவூட்டுகின்றன;
மழை தூரிகை
சன்னல் கண்ணாடியில்
வரையும் ஓவியங்களை!

*

தேநீரில்
கரைந்திட காத்திருக்கும்
சர்க்கரைக் கட்டியென
உன்னுள் கலந்திட
படைக்கப்பட்டவள் நான்!

*

உன்
வளையல் சிணுங்கும் ஓசைகளையும்
கொலுசு கொஞ்சும் ஒலிகளையும்
பத்திரப்படுத்துகிறேன்
என் கவிதைகளுக்கான இசைக்குறிப்புகளாய்!

*

உன்னைப் போலவே
அழகாயிருக்கிறது
நம் காதலும்!

*

நீ உறைய – இதயம்
கொத்திக் கொத்தி
கூடு அமைக்கிறது
காதல் குருவி!

*

அதிகாலை எழுந்து
சோம்பல் முறிக்கிறாய்;
எங்கோ மெல்ல
மொட்டு வெடிக்கிறது
ஓர் தாமரை!

*

கோபமாய்
நீ முகம் திருப்பிடும்
கணத்தில்
சட்டென நிகழ்ந்தே விடுகிறது
என் வானில்
ஓர் சந்திர கிரகணம்!

*

பார்வையற்ற மனிதனின்
கைத்தடியாய்
நீ இல்லா என் வாழ்வில்
நின் நினைவுக்குறிப்புகள்!

*

எப்படி பத்திரப்படுத்துவதெனத் தெரியவில்லை
உன் இதழ்கள்
என் மேல் வரைந்த
ஈர ஓவியங்களை!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நீ தந்துபோன....

முத்தம்
நம் ஊடல் முறிவுக்கான
சமாதான ஒப்பந்தம்!

*

உன்னை என்னிடம் புதிதாயும்
என்னை உன்னிடம் புதிதாயும்
தரும் வல்லமை
ஊடலுக்கு பின்னான
அக்கணத்திற்கே வாய்த்திருக்கிறது!

*

ஊடல் முறிவு தருணத்தில்
உன் கண் தங்கும்
ஒற்றை துளி கண்ணீரில்
நதி மூலத்துளியின் தூமை!

*

நம் ஊடலுக்கான
சமாதானத்தோடு வருகிறாய்;
மெல்ல விடிய தொடங்குகிறது
என் மேல் கவிந்த இரவு!

*

நீ தந்துபோன
சில முத்தங்களும்
சில புன்னகைகளும்
போதுமாயிருக்கிறது;
ஊடல் முறித்து
திரும்பும் மட்டும்
என்னை உயிரோடு வைத்திருக்க!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, March 17, 2011

இனிக்கிறாயடி நீ!.....

 
'எனக்காக
உன் காதலை
விட்டுக் கொடு'
என்று கண்ணீரோடு
கையேந்துகிறாய்.....

உன் ஒரு
விழிநீரை நானும்,
மறு விழிநீரை
என் காதலும்,
துடைத்துவிட்டு
விலகினோம்,
கண்ணீரோடு! ........

நொடிகளெங்கும்
உன் நினைவுப்பூக்கள்.
சுற்றி சுற்றி
வருகிறதென் இதயமுள்....

என் வாழ்க்கை
கடிகாரமும்
ஓடிக்கொண்டு
தான் இருக்கிறது!....
உன்னிடமிருந்து
என் மனதை
திசை திருப்பினேன்…
திசையெங்கும் நீ!
 
பழகப் பழக
பாலும் புளிக்குமாம்…
விலகியப் பின்னும்
இனிக்கிறாயடி நீ!.....
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வாடகை வீடு

ஆணி அடித்த
ஒரு சந்தர்ப்பத்தில்
சொல்லால் அறைந்து
அவ்வாணியிலேயே
தொங்க விட்டுச்செல்கிறாய்
என்னை!
 
கொஞ்சம்
வேகமாக பாதம்
பதித்தால்
விரிசல் காண்பதாய்
வாதம் செய்ய
ஓடோடிவருகிறாய்!
 
உன் செல்ல
பிள்ளைபிசாசுகளின்
காட்டுக் கத்தலில்
கழிக்கப்படுகின்றன
என் அமைதி!
 
மொட்டை மாடிக்கான
வழியைக் கூட
உன் வீட்டுக்குள்தான்
ஒளித்து வைத்திருக்கிறாய்!
 
யோசித்துப் பார்த்தால்,
வாடகை மட்டுமல்ல
என் சுதந்திரத்தின்
பெரும் பகுதியை
அடகு வைத்துத்தான்
குடிப்புகுந்திருக்கிறேன்!எ
லி வங்குக்கு
ஒப்பான
உன் வீட்டில்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

சுனாமி என்றால் என்ன?

கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு. சுனாமி என்ற வார்த்தை ஜப்பான் மொழியில் இருந்து தான் வந்தது. இதற்கு துறைமுகம் மற்றும் அலைகள் என்று பொருள். சிறிய உயரமுடைய அலைகள், சுனாமியால் பெரிய அலைகளாக மாறுகின்றன. சுனாமி ஏற்படும் போது கடற்கரையில், அலையின் உயரம் நிலநடுக்கத்தின் அளவுக்கு ஏற்ப இருக்கும். கரையில் இருந்து அதன் உயரத்துக்கு ஏற்ப கடல்நீர், தரைப்பகுதிக்குள் ஊடுருவும். பின், இந்த பெரிய அலைகள் தரையில் பரவிய இடத்துக்கு பின்னே, தொடர்ந்து நீர் அலைகள் வேகமாக முன்னேறிக் கொண்டே இருக்கும். சுனாமி அலைகளின் உயரத்துக்கு ஏற்ப அதன் சேதம் இருக்கும்.சுனாமி அலைகளின் தாக்கத்துக்கு பின், அந்த தரைப்பகுதியில் பெரிய மாற்றம் இருக்கும். இப்படி கடல்நீர் சுனாமி அலையின் மூலம் இடம் பெயர்வதால், முன்னர் நிலப்பகுதியாக இருந்தவை நீராகவும், நீர்ப்பகுதி நிலமாகவும் மாற வாய்ப்புண்டு.

ஜெட் வேகத்தில் சீறும் சுனாமி : * கடற்பரப்புக்கு கீழ், கண்ணுக்கு தெரியாத சிறிய வடிவத்தில் சுனாமி உருவாகும். கடலின் மேல் பகுதியில் இருக்கும் கப்பலில் கூட, சுனாமி உருவாவதை உணர முடியாது. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே, இந்த சுனாமி மிகப்பெரிய அளவில் உருவாகி, கடல் பரப்பு முழுவதும் வேகமாக பரவும்.
* சுனாமி என்பது ஒரே ஒரு அலையால் மட்டும் ஏற்படுவது அல்ல. அடுக்கடுக்கான பல அலைகளால் உருவாகும். இந்த அலைகள், கடற்பரப்பு முழுவதும் பரவி, கரையை நோக்கி, மணிக்கு 1,000 கி.மீ., வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும். இந்த அலைகளின் வேகம், ஜெட் விமானத்தின் வேகத்துக்கு சமமானதாக, சில சமயத்தில் கூடுதலாக கருதப்படுகிறது.
* சுனாமி அலைகள் கரையை நோக்கி அதிவேகமாக சீறிப் பாய்ந்து செல்லும்போது, கடலுக்குள் இருந்த தண்ணீரின் கணிசமான பகுதி காலியாகி விடும். கடலின் கீழ்ப்பரப்பில் உள்ள பவளப் பாறைகள் கூட, கண்ணுக்கு தெரியும். அந்த அளவுக்கு, தரைப்பகுதி தெரியும்.
* சுனாமி அலைகள் மிகவும் பிரமாண்ட உயரத்தில் வருவதால்தான், அழிவு ஏற்படுவதாக தவறான கருத்து கூறப்படுகிறது. கடலில் உள்ள பெரும்பகுதி தண்ணீர், வெள்ளமென புறப்பட்டு வருவதன் காரணமாகவே அழிவு ஏற்படுகிறது. கடலில் இருந்து வேகமாக வரும் வெள்ளம், அதன் பாதையில் உள்ள அனைத்து பொருட்களையும் துவம்சம் செய்து விடும். இதன்பின், அந்த நீர் வேகமாக கடலுக்கு திரும்பும். சுனாமி அலைகள் கரையை நோக்கி வரும்போது, ஒருசிலர், அதை சமாளித்து தப்பி விட முடியும். ஆனால், சுனாமி அலைகள், கடலை நோக்கி வேகமாக திரும்பும்போது, கடலுக்குள் எல்லாமே அடித்துச் செல்லப்படும்.

உலகில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல்கள் : இதுவரை உலகில் சுனாமி அலைகளின் தாக்குதலால் ஏராளமான உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அவை:
1700, ஜனவரி: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஓரிகன், வாஷிங்டன் மற்றும் கொலம்பியா நகரங்களை பூகம்பம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோளில் 9 புள்ளிகள் இருந்தது. இதனை தொடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.
1730, ஜூலை: சிலி நாட்டில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள்.
1755, நவம்பர்: போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் பலியானார்கள்
1868, ஆகஸ்ட்: சிலியில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள், தென் அமெரிக்காவை தாக்கின. இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்.
1906, ஜனவரி: ஈகுவெடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில் ரிக்டர் அளவில் 8.8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 பேர் சிக்கி பலியானார்கள்
1946, ஏப்ரல்: யுனிமாக் தீவுகளில் ரிக்டர் அளவில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்க, 165 பேர் பலியானார்கள்.
1960, மே: தெற்கு சிலியில் ரிக்டர் அளவில் 9.5 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1,716 பேர் பலியானார்கள்.
1964, மார்ச்: அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் 9.5 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன்காரணமாக அலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள். 128 பேர் சுனாமியில் சிக்கி இறந்தனர்.
1976, ஆகஸ்ட்: பிலிப்பைன்ஸ் நாட்டில் 9.2 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர் பலியானார்கள்.
2004, டிசம்பர்: இந்திய பெருங்கடலில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.
2007, ஏப்ரல்: சாலமன் தீவுகளில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.
2009, செப்டம்பர்: தெற்கு பசிப்பிக் பகுதியில் ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194 பேர் பலியானார்கள்.
2010 ஜனவரி: ஹெய்தியில் ரிக்டர் அளவில் 7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார்கள்.
அக்டோபர்: இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர் பலியானார்கள்.
2011, மார்ச்: ஜப்பானில் ரிக்டர் அளவில் 8.9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியது.

எப்படி சமாளிக்கிறது ஜப்பான்?ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்த நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், அங்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவை பெருமளவில் பயனளித்து வருகின்றன.
* 1952ல் ஜப்பான் வானிலை மையத்தால் (ஜே.ஏ.எம்.,) சுனாமி எச்சரிக்கை சேவை துவங்கப்பட்டது.
*பசிபிக் பிராந்தியத்தில் இயங்கி வரும், ஆறு கண்காணிப்பு மையங்களில் இருந்து நிலநடுக்கம் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை, இந்த எச்சரிக்கை மையம் பெற்று உரிய நேரத்தில் அரசுக்குத் தகவல் அளிக்கும்.
*நிலநடுக்கம் ஏற்பட்ட மூன்றே நிமிடங்களுக்குள் சுனாமி எச்சரிக்கையையும் ஜே.ஏ.எம்., விடுக்கும்.
* அதையடுத்து தேசிய ஒளிபரப்பு நிலையமான என்.எச்.கே., நிலநடுக்கம் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை விரிவாக வெளியிடும்.
* நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில், பொது இடங்களில், அவசர அறிவிப்புக்காக ஒலிப் பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மூலம் மக்கள் உஷார் படுத்தப்படுவர்.
*நிலநடுக்கம் ஏற்பட்டால் மேசைகளுக்கு அடியில் ஒளிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற, முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கு அருகில், நிலநடுக்கப் பாதுகாப்பு மையங்கள் எங்கெங்கு உள்ளன என்று இளைய தலைமுறை
யினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அதேபோல், கடுமையான நிலஅதிர்வைத் தாங்கும் வகையில் அடுக்குமாடிக் கட்டடங்கள், குடியிருப்புகள், வீடுகள் வடிவமைக்கப்படுகின்றன. வழக்கமான செங்கல், மணல் அல்லாமல் ரப்பர், பைபர் போன்றவற்றாலும் வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால் உயிர் மற்றும் பொருள் சேதம் குறைக்கப்பட்டுள்ளது.
* கடுமையான அதிர்வு ஏற்படும்போது, புல்லட் ரயில் சேவைகள் மற்றும் அணு உலைகள் தானியங்கி முறை மூலம், உடனடியாக இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி விடும்.

பசிபிக் கடல் பகுதியில் அச்சத்தில் பல நாடுகள் : ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, நேற்று பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, பயங்கரமான சுனாமி தாக்குதல் நிகழ்ந்தது. இதனால் எச்சரிக்கை அடைந்த அமெரிக்க நிலவியல் நிபுணர்கள், அதன் விளைவு குறித்து ஆராய்ந்தனர். ஜப்பானின் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால், அங்கு புறப்படும் சுனாமி அலை மணிக்கு 500 மைல் வேகத்தில், பசிபிக் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதிகளை 24 மணி நேரத்திற்குள் தாக்கும் என்பதால், அப்பிராந்திய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அலைகளின் உயரம்15 அடி முதல் 21 அடி உயரம் வரை இருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து பசிபிக் பிராந்தியத்தில் உள்ள குவாம், தைவான், ஹவாய், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா, சமாவோ, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஹவாய், வட அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மெக்சிகோ, மத்திய அமெரிக்காவின் நிகரகுவா, தென் அமெரிக்காவின் பெரு, சிலி ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தனர்.இவை தவிர சிறு தீவு நாடுகளான பிஜி, கவுதமாலா, எல் சல்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால், ஹவாய் தீவுக்கு சுற்றுலா வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் உடனடியாக ஆபத்தான கடற்கரைப் பகுதிகளில் இருந்து, உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.ஜப்பானின் வடபகுதியில் உள்ள குரில் தீவுகளில் இருந்து, 11 ஆயிரம் மக்களை ரஷ்ய அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

பசிபிக் பிராந்தியத்தில் சுனாமி ஏற்படுவது குறித்து, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த பால் கன்னலி கூறுகையில்,"இதுபோன்ற இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளை எதிர்கொள்வதற்கு, ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள வளர்ந்து வரும் நாடுகள் இன்னும் தயாராகவில்லை என்பதுதான் எங்களது பெரும் கவலையாக உள்ளது. இந்த சுனாமி அந்த நாடுகளுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகத் தான் இருக்கும்' என்று தெரிவித்தார்.

பூமிக்கு அருகே சந்திரன் அழிவுக்கு பஞ்சமில்லை : பூமிக்கு அருகே சந்திரன், கடந்த 19 ஆண்டுகளுக்குப் பின், வரும் 19ம் தேதி 2,21,567 கி.மீ., தூரத்தில் வருகிறது. எப்போதெல்லாம் சூரியனுக்கு அருகே சந்திரன் வருகிறதோ, அப்போதெல்லாம் சுனாமி, எரிமலை வெடிப்பு, பயங்கர அழிவுகள் ஏற்படுகின்றன என்று, விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.பூமிக்கு அருகில் சூரியன் இம்முறை வருவதற்கு, "சூப்பர் மூன்' என்று பெயரிட்டுள்ளனர். இதனால், பூமியில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும்; பகல் அதிகமாக இருக்கும். சந்திரன் உருவத்தில் பெரிதாக காணப்படும்.விஞ்ஞானிகள் கணித்ததை போல், ஜப்பானில் சுனாமி கோரம் அரங்கேறியுள்ளது. கடந்த 1947, 1974, 1992, 1995, 2004 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு அருகே சந்திரன் வந்த போதும் இதுபோன்ற கோர சம்பவங்கள் நடந்துள்ளன. 1974 ல் பூமிக்கு அருகே சந்திரன் வந்த போது ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரை புரட்டிப் போட்டது. 1995ம் ஆண்டு ஜப்பான் சுனாமியால் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அணுக்கதிர் வீச்சை தடுக்க ஜப்பானில் அவசர நிலை : ஜப்பானின் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மிக பயங்கரமான நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டன.

எரிமலை வெடிப்பு: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்கள் கழித்து, இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசியா தீவுக் கூட்டத்தில் உள்ள சியாவூ தீவில் உள்ள கரங்கடெங் எரிமலை வெடிக்க துவங்கியுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 5,853 அடி உயரத்தில் உள்ள இந்த எரிமலையில் இருந்து நேற்று நெருப்புக் குழம்பும், புகையும் வெளிப்பட துவங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

சுனாமி என்ற சொல்லே ஜப்பானியச் சொல்தான்


இரண்டாவது உலகப் போரில் ஜப்பான் எதிர்கொண்ட சிக்கல்களுக்கு இணையானது இப்போது நிலநடுக்கத்தாலும் ஆழிப்பேரலையாலும், அணுஉலை வெடிப்புகளாலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள். இதை ஜப்பான் பிரதமரே வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். ஏறக்குறைய துன்பக்கடலில் மிதக்கிறது ஜப்பான்.ஜப்பானில் நிலநடுக்கம் என்பது புதிதல்ல. அவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்னை. இதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு ஜப்பானியரும் பள்ளிக்கூடத்திலேயே பயிற்றுவிக்கப்படுகிறார். எப்படி உணர்ந்துகொண்டு, எப்படிப் பாதுகாப்பாகப் பதுங்குவது என்பதெல்லாம் அந்த நாட்டில் குழந்தைகளும் அறிந்த விஷயம். நிலநடுக்கத்தால் வானுயர்ந்த கட்டடங்கள் இடிந்து சரிந்ததாகச் செய்திகள் இல்லை. ஒவ்வொரு கட்டடமும் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை. ஆகையால்தான், ஆழிப்பேரலையில் பாதுகாப்புக்காக பலமாடிக் கட்டடத்தின் உச்சியில் நிற்பவர்கள், தங்கள் கட்டடம் கீழே முழுமையாக ஆழிப்பேரலையால் சேதமடைய, அவர்கள் மேலே அப்படியே பாதுகாப்பாக நிற்பதைப் பல தொலைக்காட்சிகளில் காண முடிகிறது. ஆழிப்பேரலையும் அவர்களுக்குப் புதிதல்ல. சுனாமி என்ற சொல்லே ஜப்பானியச் சொல்தான். ஆனால், இந்த முறை 8.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கமும், 10 மீட்டர் உயரத்துக்கு ஆழிப்பேரலையும் எப்போதும் இல்லாத அளவுக்கு இணைந்து வந்துவிட்டது. ஜப்பானின் கடலோரப் பகுதியில், ஆழிப்பேரலை எச்சரிப்பு மணி, வானொலி அறிவிப்புகள், ஊடகங்கள் என மக்களுக்குச் சுனாமி குறித்த எச்சரிக்கை அறிவிக்கப்பட்டதால், பல லட்சம் உயிர்கள் சற்று முன்னதாகவே காப்பாற்றப்பட்டுவிட்டன. இப்போது இயற்கையின் சீற்றம் முடிந்து, அணுஉலையின் சீற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர் ஜப்பானியர்கள். ஜப்பானின் மூன்றில் ஒரு பங்கு மின் தேவையை அணுமின் உலைகள்தான் பூர்த்தி செய்கின்றன. அனல் மின்நிலையமோ புனல் மின்நிலையமோ அமைக்கப் போதுமான இயற்கை வளம் அங்கு இல்லை. அமெரிக்க அணுகுண்டு வீச்சால், கதிர்வீச்சைச் சந்தித்த தைரியத்தாலோ என்னவோ, அந்த நாட்டில் 50-க்கும் மேற்பட்ட அணுஉலை மின்நிலையங்கள் உள்ளன. தற்போது இவற்றில் 11 மின் நிலையங்கள் நிலநடுக்கம் காரணமாக மூடப்பட்டுவிட்டன. ஆனகவா அணுஉலைக்கூடத்தில் உள்ள மூன்று உலைகளும் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் தானாகவே உற்பத்தியை நிறுத்திவிட்டன. ஆனால் மற்ற இடங்களில் உள்ள உலைகள் பெரும்பாலும் 1970-ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டவை. அவை மனிதர்களால் நிர்வகிக்கப்படுபவை.புகுஷிமா அணுமின் நிலையத்தில் முதல் அணுஉலைக்கூடம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவுடன் அதில் கடல்நீரைப் பாய்ச்சி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். இனி அந்த முதல் உலையைப் பயன்படுத்தவே முடியாது. இப்போது மூன்றாவது உலை வெடித்து, உருகிக்கொண்டிருக்கிறது. உலைக் கலன் 15 செ.மீ. கனமுள்ள எஃகு தகட்டினால் மூடப்பட்டுள்ளது. இதுதான் இப்போது உருகிக்கொண்டிருக்கிறது. இது வெடித்தால், ஹைட்ரஜன் அணுவெடிகுண்டு விளைவித்த சேதத்தைக் காட்டிலும் அதிக சேதம் விளையும்.ஏறக்குறைய, இந்த நிலைமை செர்னோபில் அணுஉலைக் கூடத்துக்கு ஏற்பட்டதைப் போன்றதுதான். ஏற்கெனவே, அங்கே கதிர்வீச்சினால் உயிரிழப்புகள் நூற்றுக்கணக்கில் ஏற்பட்டுவிட்டதாகவும், 1.76 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, அவர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்புகள் உள்ளதா என்பதை அறிய ஜப்பானியர்கள் தாற்காலிக முகாம்களில் சோதிப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.உலக நாடுகள் அனைத்தும் ஜப்பானின் நிலைமைக்காகப் பரிதாபப்பட்டாலும், வேதனையைத் தெரிவித்தாலும் அவர்களை வேறு இடங்களுக்கு, தேவைப்பட்டால் வேறு நாடுகளுக்குப் பாதுகாப்பாகச் சிறிதுகாலம் கொண்டுபோய் வைத்திருக்கும் வாய்ப்புகளையும்கூட நல்க வேண்டும். அந்த அளவுக்கு அங்கே நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மின்சாரத்தை நம்பியிருக்கும் ஒரு நாட்டில், அணுஉலை விபத்து காரணமாக தற்போது மின்உற்பத்தி பாதியாகக் குறைந்துவிட்டது. தொழில்துறைக்கு மின்சாரம் அளிக்க முடியவில்லை. வீடுகளுக்கும் மின்சாரம் அளிக்க முடியவில்லை. ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் மின்சாரம் அளிக்க முடியவில்லை. மின்சாரம் கிடைத்தால், தற்போது உருகும் உலைக்கூடத்தில் கருவிகள் செயல்படத் தொடங்கி, நிலைமையை விரைந்து கட்டுப்படுத்திவிடலாம் என்கிறார்கள். அதற்கும்கூட வழியில்லை. 2007-ம் ஆண்டு காஸிவாஸகி அணுமின் நிலையம் (8000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்டது) நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டபோது, அதை இரண்டு ஆண்டுகளுக்கு மூடி வைத்த அனுபவம் ஜப்பானுக்கு உண்டு. இருந்தாலும்கூட, தற்போதைய நிலைமை, எல்லா அனுபவங்களையும் மீறியதாக இருக்கிறது. இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ள எந்தவொரு நாட்டாலும் முடியாது என்பதைத்தான் மீண்டும் இயற்கை நமக்குச் சொல்கிறது. இந்தியாவில் அணுமின் நிலையங்களை தனியார் அமைக்க ஒப்பந்தங்கள் போட்டுள்ளோம். அதற்கான இழப்பீடு குறித்துத்தான் நாம் முரண்படுகிறோம். உயிர்இழப்புகள் குறித்து அல்ல. அணுஉலைக்கூடங்களைப் பொறுத்தவரை இந்தியா ஒருமுறைக்கு நூறுமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.விஞ்ஞானம் மனிதனின் நாகரிக மேம்பாட்டுக்கு உதவி இருக்கிறது என்பது உண்மை. ஆனால், எதுவுமே அளவுக்கு மீறினால் ஆபத்தாக மட்டுமே முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வசதிகளைப் பெருக்கி வாழ்க்கையை வளமாக்குவது சரி. எப்படி, எந்த அளவுக்கு என்பதைப் பொறுத்துத்தான் அதற்கு நாம் என்ன விலை கொடுக்க நேரும் என்பதை இயற்கையின் சீற்றம் ஜப்பான் மூலம் உணர்த்தி இருக்கிறது.பட்டுத் திருந்துவது ஒருவகை. பார்த்துத் திருந்துவதும் ஒருவகை.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, March 7, 2011

இன்று சர்வதேச பெண்கள் தினம்

 

 

ஆண்டுதோறும், மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொருளாதாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பல வகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்குவதற்காகவுமே சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.



* முதன் முதலில் 1909ல் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில் சோஷலிச கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை பார்லிமென்ட் ஏற்று, தேசிய பெண்கள் தினம் கடைபிடிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, பிப்.,28ம் தேதி பெண்கள் தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட் டது.



* பிறகு, கோபன்ஹேகனில் 1910ல் நடந்த சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி விரிவாக பேசப் பட்டது. அப்போது, சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் பல நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.



* இந்த வேண்டுகோளின்படி, பல நாடுகள் 1911ல் மீண்டும் விவாதித்தன. முதன் முறையாக, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 19ம் தேதி கொண்டாட முடிவு செய்யப் பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பல நாடுகளில் அன்றைய தினம், பிரம்மாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.



* அதன்பின், மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் 1913ல் ஒன்று கூடி, மார்ச் 8ம் தேதியை பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தன. இது பற்றி ஐ.நா., சபையில் விவாதிக்கப்பட்டு, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.



* அதன் பின்னரும் பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கு உரிய உரிமை, சலுகை எதுவும் கிடைக்கவில்லை. 1946ல் தான் பெண்கள் ஓரளவு உரிமை பெற துவங்கியுள்ளனர் என்று அங்கீகரித்து, அது முதல் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி, சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.



சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் இச்சமயத்தில், பெண்களின் நிலை எப்படி இருக்கிறது?



ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் பெண்கள் சொந்த காலில் நிற்கும் அளவுக்கு வளர்ந்து உள்ளனர் என்று தான் கூற வேண்டும்.பெண் அடிமைத்தனம் அதிகமாக இருந்த நாடுகளில் கூட, இப்போது போர் முனைக்கு போகும் அளவுக்கு பெண்கள் உயர்ந்து வருகின்றனர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது தானே!கரண்டி பிடித்த கைகள் இன்று கம்ப்யூட்டரில் விளையாடுகிறது. நவீன உலகில் எந்த துறையானாலும், ஆண்களுக்கு சமமாக அதில் புகுந்து சாதிக்க ஆரம்பித்து விட்டனர். இனி, அவர்களது வளர்ச்சியை எந்த முட்டுக் கடைப் போட்டும் தடுக்க முடியாது. ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்று நினைத்து வந்த பல துறைகளில் முதன் முதலாய் தங்கள் காலடி வைத்து ஆண்கள் உலகை ஆட்டம் காண வைத்து வருகின்றனர்.




சர்வதேச பெண்கள் தினம் : இன்று சர்வதேச பெண்கள் தினம். பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பொருளா தாரம், அரசியல் மற்றும் சமூகத்தில் பெண்கள் நிகழ்த்திய சாதனைகளை பாராட்டும் வகையிலும் இன்றைய தினத்தை கொண்டாட வேண்டும். சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் மற்றும் சில நாடுகளில் இந்நாள் அதிகாரப்பூர்வ விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இது போன்று அறிவிக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் தாயார், மனைவி, சகோதரி மற்றும் சக பெண் பணியாளர்களுக்கு ஆண்கள் பரிசுகள் வழங்கி வருகின்றனர். சில நாடுகளில் அன்னையர் தினத் திற்கு சமமாக இத்தினத்தை கடைபிடிக்கின்றனர். உலகில் இன்று பெண்கள் பிரதமராகவும், விண்வெளி வீராங்கனையாகவும், டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும், பைலட்களாகவும், ராணுவ வீரர்களா கவும், விளையாட்டு வீராங்கனைகளாகவும், விளம்பர மாடலிங்காகவும் , தொழிலதிபர்களாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகவும் மேலும் பல துறைகளில் மேம்பட்டவர்களாகவும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.




பெண்களின் சாதனைகள் : இந்திய வரலாற்றில் பெண்கள் பிரதம ராகவும், ஆட்சியாளர்களாகவும், கல்வியில் சிறந்தவர்களாகவும் இடம் பெற்றுள்ளனர். இன்று ஜனாதிபதியாகவும், முதல்வராகவும், சபாநாயகராகவும், எதிர்கட்சி தலை வராகவும் பெண்கள் இருக்கின்றனர். பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்திருப்பதில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா திகழ்கிறது. பெண்கள் ஆண்களுக்கு சமமாக சட்டரீதியான உரிமைகளை பெற்றுள்ளனர். இந்தியாவில் உள்ள நகர்ப்புற பெண்கள் சம அந்தஸ்து பெற்றவர்களாகவும், கல்வி யறிவு உடையவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் கிராமப்புற பெண்களின் வாழ்க்கை தரம் சற்று பின்தங்கியே உள்ளது. பெண் களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளான பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம், பெண் அடிமைத்தனம் போன்றவை தடுக்கப் பட்டுள்ளது. இருப்பினும் பாலியல் கொடுமை, வரதட்சணை, பேறுகால மரணம், தீ விபத்துகளுக்கு ஆளாவது என பெண் கொடுமைகள் இன்றும் தொடர்கின்றன. அரசியல், தொழில், கல்வி, போன்றவற்றில் ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் இன்னும் உயரவில்லை. பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர இன்றைய தினத்தை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.



சாதனை படைக்க பெண்கள் : ஆண்களை விட பெண்களே அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள். பெண்களை குளிரும், உஷ்ணமும் அதிகமாகப் பாதிப்பதில்லை.இயற்கையிலேயே பெண்களுக்கு மனோ பலமும், உடல்பலமும் இருக்கிறது. பெண் குழந்தைகளே ஆண் குழந்தைகளை விட, இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே நடக்கப் பழகி விடுகின்றன; விரைவில் பல் முளைப்பதும் பெண் குழந்தைகளுக்குத் தான்.வார்த்தைகளை சுத்தமாக உச்சரிப்பதும் பெண் குழந்தைகள் தான். பெண்களுக்குத் தான் புத்திக்கூர்மை அதிகம் என்கிறது விஞ்ஞான ஆய்வு முடிவு.



"எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி!'

- பாரதியார்

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.