Followers

திருக்குறள்

Saturday, March 31, 2012

பெண்குழந்தை வேணுமா? இதப் படிங்க!

 

 

 

கருவில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதான்.

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் ஒரு சிலருக்கு பெண் குழந்தையின் மீது விருப்பம் அதிகம். பெண் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்க்கிறீர்களா
? உங்களின் உடல் அமைப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாம்.

பளபளப்பான தோற்றம்

கர்ப்பிணிகளின் சருமமும்
, முகமும் பளபளப்பாக இருந்தாலே கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தைதான் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறக் கேட்கலாம். கர்ப்பிணிகளின் கண்ணக் கதுப்பு ரோஸ், அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் பூரிப்பாய் இருக்குமாம். அதேபோல் கர்ப்பிணிகளின் எடையும் சற்று அதிகமாய் இருக்கும்.

வாந்தி
, மயக்கம்

கர்ப்பிணிகள் அனைவருக்குமே வாந்தி
, மயக்கம் ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் கருவில் உள்ளது பெண்குழந்தை என்றால் அவர்கள் அதிர்ஸ்டசாலிகளாம். ஆம் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது குறைவாகவே இருக்குமாம்.

இனிப்பு உணவுகள்

பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு புளிப்புதான் விருப்பமான உணவாக இருக்கும். ஆனால் பெண் குழந்தையை சுமக்கும் கர்பிணிகளுக்கு இனிப்பு உணவு என்றால் மிகவும் பிடிக்குமாம். கர்ப்பத்தில் உள்ள பெண்குழந்தைக்கு இனிப்பு அதிக விருப்பம் என்பதால் தாய்க்கும் அது விருப்பமான உணவாக உள்ளதாக பிரசவம் பார்க்கும் பெண்கள் கூறுகின்றனர்.

இதயத்துடிப்பு அதிகம்

கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு அதிகம் இருக்கும். ஒரு நிமிடத்திற்கு 140 முறை துடிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 140 ஆக உள்ளதாக சந்தேகமே வேண்டாம் அது பெண் குழந்தைதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.

கர்ப்பிணிகளே உங்கள் உடல் அமைப்பு
, உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை வைத்து ஆண் குழந்தையா, பெண்குழந்தையா என்பதை தெரிந்து கொள்ளுங்களேன்.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

பெண்குழந்தை வேணுமா? இதப் படிங்க!

 

 

கருவில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதான்.

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் ஒரு சிலருக்கு பெண் குழந்தையின் மீது விருப்பம் அதிகம். பெண் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்க்கிறீர்களா
? உங்களின் உடல் அமைப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாம்.

பளபளப்பான தோற்றம்

கர்ப்பிணிகளின் சருமமும்
, முகமும் பளபளப்பாக இருந்தாலே கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தைதான் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறக் கேட்கலாம். கர்ப்பிணிகளின் கண்ணக் கதுப்பு ரோஸ், அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் பூரிப்பாய் இருக்குமாம். அதேபோல் கர்ப்பிணிகளின் எடையும் சற்று அதிகமாய் இருக்கும்.

வாந்தி
, மயக்கம்

கர்ப்பிணிகள் அனைவருக்குமே வாந்தி
, மயக்கம் ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் கருவில் உள்ளது பெண்குழந்தை என்றால் அவர்கள் அதிர்ஸ்டசாலிகளாம். ஆம் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது குறைவாகவே இருக்குமாம்.

இனிப்பு உணவுகள்

பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு புளிப்புதான் விருப்பமான உணவாக இருக்கும். ஆனால் பெண் குழந்தையை சுமக்கும் கர்பிணிகளுக்கு இனிப்பு உணவு என்றால் மிகவும் பிடிக்குமாம். கர்ப்பத்தில் உள்ள பெண்குழந்தைக்கு இனிப்பு அதிக விருப்பம் என்பதால் தாய்க்கும் அது விருப்பமான உணவாக உள்ளதாக பிரசவம் பார்க்கும் பெண்கள் கூறுகின்றனர்.

இதயத்துடிப்பு அதிகம்

கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு அதிகம் இருக்கும். ஒரு நிமிடத்திற்கு 140 முறை துடிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 140 ஆக உள்ளதாக சந்தேகமே வேண்டாம் அது பெண் குழந்தைதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.

கர்ப்பிணிகளே உங்கள் உடல் அமைப்பு
, உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை வைத்து ஆண் குழந்தையா, பெண்குழந்தையா என்பதை தெரிந்து கொள்ளுங்களேன்.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, March 24, 2012

நீ எழுந்து போன பின்.....

 
அமைதியாய்
என்னைக்கடந்து செல்கிறாய்....
அமர்க்களப்படுகிறது
என் இதயம்.........





தினம் தினம்
அழகை அதிகரித்து கொள்கிறது
நகர பேருந்து
நீ ஏறி வருவதால்..........


 
தங்கச் சரிகையில்
வெள்ளி நிலா!
ஓணத்து பட்டு புடவையில்
நீ!




சிரிக்கிறயா?
என்னை
சிதறடிக்கிறாயா?



உன் விழி
அம்புகள்
என் இதயத்தில் பாய்ந்தன...
உதிரமாக வழிகிறது
காதல்.......




தேர் உலாவால்
விழா ஊருக்கு.....
தேவதை உன் உலாவால்
திருவிழா எனக்கு...



 

உன்னை அலங்கரிப்பதாய்
நினைத்து கொள்கிறாய்
உண்மையில் தங்களை
அலங்கரித்து கொள்கின்றன
அணிகலன்கள்..



கோவிலை சுற்றுகிறாய்...
உன்னை சுற்றுகிறேன்...
நோக்கம் இருவருக்கும் ஒன்றுதான்
அம்மன் அருள்!



தூரத்தில் கடக்கும் போதும்
தூரல்களாய் உன் பார்வை
தளிர்க்கிறது என் காதல்..



உன்னோடு பேச
நான் கற்றுக்கொண்ட
ஒரே மொழி
மெளனம்.
சில நேரங்களில்
பார்வைகள்..


கொடி கட்டுவதற்காக
கொல்லையில் வளர்ந்தது
சாதாரன தென்னை தான்.
ஆனால் உன் தாவனி
காய்ந்ததில் காய்த்தது
அனைத்தும் செவ்விளனியே...

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

‘கேப்’ விழுந்திருச்சா?..உடனே காரணத்தை கண்டுபிடிங்க!

திருமணமான புதிதில் தம்பதியர் இடையே காற்று கூட புக முடியாத அளவு நெருக்கம் ஏற்படுவது இயல்பு. தம்பதியர் இடையேயான காதல் உணர்வுகள் ஒரு கட்டத்திற்குப் பின் காணமல் போய்விடுகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

மன அழுத்தம்

தம்பதியரை முதலில் தாக்குவது மன அழுத்தம். அது பணிச்சூழல் பற்றியதாகவும் இருக்கலாம், பணம் தொடர்புடையதாகவும் இருக்கலாம். இந்த மன அழுத்தமே தம்பதியரிடையேயான நெருக்கத்தை பிரிக்கும் முக்கிய எதிரியாக உள்ளது. எனவே மன அழுத்தத்தின் அளவை தெரிந்து கொண்டு அது குடும்பத்தை பாதிக்காத அளவு மருத்துவர்களிடமோ, உளவியலாளர்களிடமோ ஆலோசனை பெற வேண்டும். மன உளைச்சல் காரணமாகவும் தம்பதியரிடையே இடைவெளி ஏற்பட காரணமாகிறது.

குடும்ப பிரச்சினை

உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்கள் தம்பதியரிடையேயான உறவுக்கு வேட்டு வைக்கும். தகவல் பரிமாற்றத்தில் புரிந்து கொள்ள இயலாத நிலை, தேவையற்ற விவாதங்களும் குடும்ப உறவுகளை பாதிக்கும்.

போதை ஆபத்து

மது குடித்துவிட்டு போதையில் மிதப்பது, கண்ட போதை வஸ்துக்களை உபயோகித்துவிட்டு உறங்கிப் போவது தம்பதியரிடையே நெருக்கத்தை குறைக்கிறது.

உறக்கக் குறைபாடு

பணிச் சூழல், அதிகாலையில் எழுந்து அலுவலகம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது, உடலில் சோர்வை அதிகப்படுத்திவிடுகிறது. நேரங்கெட்ட நேரத்தில் தூங்கி எழுவது அசதியை ஏற்படுத்துவதால் தம்பதியரிடையே இடைவெளி ஏற்படுகிறது. எனவே சரியான அளவில் பணி நேரத்தையும், ரொமான்ஸ்க்கான நேரத்தையும் திட்டமிடவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

குழந்தை பிறந்திருக்கா?

சிறு குழந்தைகள் பிறந்த சமயமாக இருந்தால் அது தம்பதியரிடையே இடைவெளி ஏற்படும் காலமாகும். எனவே குழந்தைக்கு அதிக நேரம் ஒதுக்குவதோடு, ரொமான்ஸ்சுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

ரொம்ப குண்டாயிட்டோமோ?

திருமணத்தில் பார்த்ததை விட இப்ப ரொம்ப குண்டாயிட்டோமோ என்ற எண்ணம் உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதுவும் கூட இடைவெளிக்கு காரணமாகிறது. உடல் பருமன் காரணமாக ஆண்களுக்கு டெஸ்டோஸ்ட்டிரான் சுரப்பு குறைவதும் தம்பதியரின் இடைவெளிக்கு காரணமாகிறது.

மெனோபாஸ்

பெண்களுக்கு மெனோபாஸ் காலம் வந்தாலே வசந்த காலமே முடிந்துவிட்டதைப் போல உணர்வர். வலி, வறட்சி போன்றவைகளினால் உறவில் ஆர்வமின்மை ஏற்படுகிறது. இதுவும் தம்பதியரிடையே வில்லனாக புகுந்து இடைவெளியை ஏற்படுத்துகிறது.

எனவே தம்பதியர் இருவரும் கலந்து ஆலோசித்து பிரச்சினையின் உண்மை தன்மையை புரிந்து கொண்டு இடைவெளியை குறைக்க முயல வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில் மகிழ்ச்சிப் பூக்கள் பூக்கும்

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

முத்தம் கொடுக்கப் போறியளா?…யோசிச்சுக்குங்க..!

முத்தம் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் ஒரு பெரிய பட்டியலே போட்டுள்ளனர் நம்மவர்கள். உணர்ச்சிகரமான நரம்புகள் உதட்டில் அதிகம். அதனால் தான் உதட்டை தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழுகின்றன. உதட்டை விரலில் தொடுவதை விட உதட்டால் தொடுவதால் அநேக நன்மைகள் விளைகின்றனவாம். அதாவது முள்ளை முள்ளால் எடுப்பது போல உணர்ச்சிகளை உணர்ச்சிகளால் தூண்டுவது. அதே சமயம் முத்தமிடுவதன் மூலம் நோய்கள் பரவுதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

30 வாட்ஸ் மின்சாரம்

ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்டு இதழோடு இதழாக ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளும் முத்தத்தில் இருவர் உடலிலும் 30 வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறதாம். (ஆகா மின்சார உற்பத்திக்கு இப்படி ரொமான்டிக்கான ஒரு வழி இருக்கப்பா..இத விட்டுட்டு எங்கெங்கையோ கரண்ட்டை தேடுறாய்ங்களே..)

மனிதர்கள் தங்கள் உடலில் அதிகமாக உள்ள கலோரிகளை குறைப்பதற்கு என்னென்னவோ உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால் ஆணும் பெண்ணும் சேர்ந்து 15 நிமிடம் தொடர்ந்து கொடுத்துகொள்ளும் இதழ் முத்தத்தில் 30 கலோரிகள் குறைகிறது. இது அரைமணி நேராம் மாய்ந்து மாய்ந்து நடக்கும் நடைபயிற்சிக்கு சமமானது. முத்தம்தான் உடலுறவுக்கான முதல் தூண்டுதல். உதடு பிரியாமல் கன்னத்தில் கொடுக்கும் முத்தத்தைவிட, உதடு பிரிந்து உதடுகளில் கொடுக்கும் முத்தத்திற்கு ஆரோக்கியம் அதிகம்.

முத்தம் மூலம் நோய் பரவும்

அதே சமயம் முத்தம் கொடுப்பதன் மூலம் நோய்கள் பரவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் லயோலா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முத்தம் மூலம் ஹெச்1என்1, சளி, காய்ச்சல், வைரஸ் நோய்களை பரப்புகிறதாம். அதுவும் இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் அதிக அளவிலான இளைய தலைமுறையினர் இந்த நோய்தாக்குதலுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குளிர் காலத்தில் தொற்றுநோய்கள் பரவுவது ஒருபுறம் இருக்கையில் முத்தமிடுவதன் மூலமும், ஜோடியாக ஷாப்பிங்மால், சினிமா தியேட்டர், ஓட்டல்கள் போன்ற இடங்களுக்கு செல்வதன் மூலமும் தொற்றுக்கிருமிகள் எளிதில் பரவி நோய் தாக்குதல் அதிகமாவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காலத்தில் நோய் பரவுவதை தடுக்க சத்தான பழங்கள், டானிக்குகள் போன்றவைகளை உட்கொள்ளலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே உதடுகளை ரெடி செய்வதற்கு முன்பு ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சுக்குங்க..அம்புட்டுதேன்..!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, March 21, 2012

குழந்தைங்களை தனியா விட்டுட்டு போகாதீங்க!

கணவன் மனைவி இருவர் மட்டுமே நைட் ஷோ சினிமாவுக்கு கிளம்புறீங்களா? குழந்தைகளை கூட்டிச் செல்ல முடியாத சூழ்நிலையில் அவர்களை மட்டும் வீட்டில் தனியே விட்டுச் செல்ல வேண்டியிருக்கும். அப்பொழுது என்னமாதிரியான சங்கடங்கள், சிக்கல்கள் ஏற்படும் என்பதை யாராலும் உணரமுடியாது. எனவே குழந்தைகளை தனியாக விட்டுச்செல்லும்போது என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள்.

அவசரகால தொலைபேசி எண்கள்

தீ போன்ற ஆபத்து காலத்தில் தொடர்பு கொள்ளவேண்டிய அவசர எண்களை குழந்தைகளுக்கு தெரியபடுத்த வேண்டியது அவசியம்.ஒருவேளை உங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ள யாரையாவது நியமித்திருந்தால் அவர்களின் மொபைல் போன்களிலும் அவசரகால எண்களை மெமரியில் சேகரித்த வையுங்கள். வீட்டில் பெரியவர்கள் இருந்தாலும் அவர்களுக்கும் அவசரகால எண்களை தெரிவிப்பது அவசியம்,

வீட்டிற்குள் வைத்து பூட்டவேண்டாம்

குழந்தைகள் தனியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு செல்வது ஆபத்தானது. திடீர் நிலநடுக்கமோ, தீ விபத்தோ ஏற்படும் பட்சத்தில் அவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு செல்வது ஆபத்தானது. அது போன்ற சமயங்களில் பக்கத்து வீட்டுக்காரர்களின் பொறுப்பில் விட்டுச் செல்லலாம்

பயிற்சி அளியுங்கள்

தனியாக இருக்க நேரும்போது தாங்களாகவே கதவை பூட்டிக்கொண்டு வீட்டிற்குள் இருப்பது குறித்தும். சங்கடங்கள் ஏற்படும்போது அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள்.

சமையலறை கதவை பூட்டுங்கள்

வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றாலே குழந்தைகள் சென்று விளையாடும் இடம் சமையலறைதான். எனவே முதலில் சமையலறை கதவை பூட்டுங்கள். குழந்தைகளுக்குத் தேவையான உணவுகளை ஹாட் பாக்ஸ்சில் போட்டு டேபிள் மேல் வைக்கவும். அவர்களுக்கு தேவையான தண்ணீர், நொறுக்குத்தீனி போன்றவைகளை தனியாக எடுத்து வைக்கவும். இதனால் குழந்தைகள் சமையலறைக்கு போக வாய்ப்புகள் எழாது.

தொலைக்காட்சி ரிமோட் கவனம்

தனியாக இருக்கும் தருணங்களில் தொலைக்காட்சியோ, கணினியோதான் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு. பெரியவர்கள் இல்லை என்றால் அவர்கள் இஷ்டம்தான். எனவே கண்டதையும் குழந்தைகள் பார்ப்பதை தவிர்க்கும் வகையில் ப்ளாக் செய்து விடுங்கள். அது குழந்தைகளின் நலனுக்கு பாதுகாப்பானது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

லஞ்சுக்கு அப்புறம், ஆபீஸில் கொட்டாவியுடன் தூக்கம் வருதா...?

 

மதிய சாப்பாட்டிற்கு பின்பு அலுவலகத்தில் பத்துநிடம் உறங்கினால்தான் ஒருசிலருக்கு திருப்தியா இருக்கும். மதிய நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் வரையிலான தூக்கம் மிகவும் நல்லது. அவ்வாறு உறங்கி எழுவதால் இருமடங்கு சுறுசுறுப்புடன் வேலைகளை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூட அதனை வலியுறுத்துகிறார்கள்.

பென்சில்வேனியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் மதிய நேரத்தில் 45 நிமிடம் வரை உறங்கி ஓய்வு எடுப்பவர்களுக்கு இதயநோய் ஏற்படுவது குறைகிறதாம். உயர் ரத்த அழுத்தம் குணமடைவதாகவும் தெரியவந்துள்ளது. எனவே சிறிது நேர தூக்கத்திற்கு பிரச்சனை இல்லை. ஆனால் ஒருசிலர் மதிய உணவு உண்டதுமே உலகத்தையே மறந்து மேஜை மீதே தலை சாய்த்துவிடுவார்கள்.

இரவு உறக்கம் பாதிப்பு

இத்தகைய உடல் சோர்வு மற்றும் சக்தி குறைவு மதிய நேரம் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மனிதர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமானது. சிலர் தூங்குவதற்கே இரவு 12 ஆகி விடுகிறது. கணக்கில்லாமல் மொபைல் பேசிவிட்டு அதிகாலையில் எழுவதாலும் மதிய நேரத்தில் தூக்கம் வருகிறது.

முன்னிரவு தூக்கம்தான் சோர்ந்துபோயிருக்கும் நமது நரம்புகளை புத்துணர்வு பெறவும்
, உடல் மீண்டும் சக்தி பெறவும் உதவுகிறது. ஆனால் தொடர்ந்து இரவில் தாமதமாக தூங்கி, அதிகாலை எழுந்து வேலைக்கு ஓடுவதால், உங்களது உடலில் உள்ள சக்தியெல்லாம் மதியத்திற்குள் உறிஞ்சப்பட்டுவிடுகிறது . அதன் விளைவே மதிய நேரங்களில் உடல் சோர்வு ஏற்படுகிறது.

உடற்பயிற்சி செய்யுங்கள்

காலை வேளைகளில் அலுவலகம் செல்லும் பரபரப்பில்
, விளையாட்டு அல்லது உடற்பயிற்சிக்கென்று தனியாக நேரம் ஒதுக்கி செலவிடமுடியாது என்பது உண்மைதான் என்றாலும், மாலை நேரத்திலாவது ஒரு முப்பது நிமிடங்களாவது நடைபயிற்சி அல்லது ஜாக்கிங் போன்றவற்றை செய்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். இதனால் மதியநேரத்து சோர்வு ஏற்படாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

லஞ்சுக்கு அப்புறம், ஆபீஸில் கொட்டாவியுடன் தூக்கம் வருதா...?

மதிய சாப்பாட்டிற்கு பின்பு அலுவலகத்தில் பத்துநிடம் உறங்கினால்தான் ஒருசிலருக்கு திருப்தியா இருக்கும். மதிய நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் வரையிலான தூக்கம் மிகவும் நல்லது. அவ்வாறு உறங்கி எழுவதால் இருமடங்கு சுறுசுறுப்புடன் வேலைகளை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூட அதனை வலியுறுத்துகிறார்கள்.

பென்சில்வேனியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் மதிய நேரத்தில் 45 நிமிடம் வரை உறங்கி ஓய்வு எடுப்பவர்களுக்கு இதயநோய் ஏற்படுவது குறைகிறதாம். உயர் ரத்த அழுத்தம் குணமடைவதாகவும் தெரியவந்துள்ளது. எனவே சிறிது நேர தூக்கத்திற்கு பிரச்சனை இல்லை. ஆனால் ஒருசிலர் மதிய உணவு உண்டதுமே உலகத்தையே மறந்து மேஜை மீதே தலை சாய்த்துவிடுவார்கள்.

இரவு உறக்கம் பாதிப்பு

இத்தகைய உடல் சோர்வு மற்றும் சக்தி குறைவு மதிய நேரம் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மனிதர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமானது. சிலர் தூங்குவதற்கே இரவு 12 ஆகி விடுகிறது. கணக்கில்லாமல் மொபைல் பேசிவிட்டு அதிகாலையில் எழுவதாலும் மதிய நேரத்தில் தூக்கம் வருகிறது.

முன்னிரவு தூக்கம்தான் சோர்ந்துபோயிருக்கும் நமது நரம்புகளை புத்துணர்வு பெறவும்
, உடல் மீண்டும் சக்தி பெறவும் உதவுகிறது. ஆனால் தொடர்ந்து இரவில் தாமதமாக தூங்கி, அதிகாலை எழுந்து வேலைக்கு ஓடுவதால், உங்களது உடலில் உள்ள சக்தியெல்லாம் மதியத்திற்குள் உறிஞ்சப்பட்டுவிடுகிறது . அதன் விளைவே மதிய நேரங்களில் உடல் சோர்வு ஏற்படுகிறது.

உடற்பயிற்சி செய்யுங்கள்

காலை வேளைகளில் அலுவலகம் செல்லும் பரபரப்பில்
, விளையாட்டு அல்லது உடற்பயிற்சிக்கென்று தனியாக நேரம் ஒதுக்கி செலவிடமுடியாது என்பது உண்மைதான் என்றாலும், மாலை நேரத்திலாவது ஒரு முப்பது நிமிடங்களாவது நடைபயிற்சி அல்லது ஜாக்கிங் போன்றவற்றை செய்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். இதனால் மதியநேரத்து சோர்வு ஏற்படாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.