Followers

திருக்குறள்

Wednesday, June 29, 2011

தொலையும் அந்த விளையாட்டில்

முந்தைய நாள் பார்த்த சிற்பம் ஒன்றின் உருவாய்

நேற்றைய இரவின் கனவில் வந்து தொலைத்தாய் நீ

தூக்கம் தொலைத்து கனவுகளில்

தொலையும் அந்த விளையாட்டில்

வழக்கம்போல் இன்று நீயும், நானும்.

வந்ததும்

நொடிகளின் இடைவெளியும் இன்றி

என்னை ஆரத்தழுவி

நெற்றியில் இதழ் பதித்து

பேசத் துவங்கிவிடும் உன்னை

நிறுத்திவிட முயல்வதே இல்லை என் கனவுகள்.

தலையைக் கோதி

உதட்டைச் சுழித்துக் கொண்டு

இம்முறை

நீ சொல்லும் கானல் கதைகளில்

மீண்டும் ஒருமுறை

தொலைந்து மீள்கிறது என் சுயம்.

உன் விரலின் நுனி தொட்டு

வெடித்துச் சிதறி

அறையெங்கும் காதலைக் கொட்டித்தீர்க்கிறது

பிரியங்களின் தொகுப்பை சுமந்து திரியும்

உதிரந்தோய்ந்த என் இதயம்.

எப்படி அவ்வளவு பேசுகிறாய் நீ?

புதிதாய் மாற்றிய உன் முகநூல் போட்டோ துவங்கி

இன்று கொண்டு வந்திருக்கும் கனவு வரை

அவ்வளவும்

என் பிரியங்கள்

எனக்குப் பிடித்தவைகளை

மட்டுந்தான் பேசுகிறாயா?

இல்லை நீ பேசியவைகளின்

 திருட்டுத் தொகுப்புதான் என் பிரியங்களா?

நீ சிந்தும் ஒவ்வொரு முற்றுப்புள்ளியின்போதும்

பதறிவிடுகிறதென் நெஞ்சம்

எங்கே முடித்துவிடுவாயோவென.

என் பதற்றத்தின் ரேகைகள் படித்து

முற்றுப்புள்ளிக்கு

முன்னும் பின்னும் இன்னும் புள்ளிகள் சேர்த்து

பரவசப்படுத்தத் தவறுவதே இல்லை நீ

என் பிரியங்களின் தொகுப்பில்

இன்று புதிதாய் இன்னுமொரு இறகு..

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, June 28, 2011

நீ அருகில்......


இரவில் தூங்கப் போகும்போது
தோடுகளையும், வளையல்களையும்
கழற்றி வைப்பதை போல்
உன் சிறகுகளை
எங்கே கழற்றி வைப்பாய்?



புல்லின் மீதிருக்கும் பனித்துளியை
நினைக்காமல் இருக்க முடிவதில்லை
உன் ஈரம் படிந்த இதழ்களை
பார்க்கும்போதெல்லாம்!



கொஞ்ச நேரம்
பேசாமலிரு!
தொடர்ச்சியான சங்கீதத்தை
என் காதுகள் ஏற்பதில்லை!




சத்தமே எழுப்பாமல்
நீ அருகில் செல்லும்போதெல்லாம்
பட்டுப்பூச்சி பறந்து விடுகிறது

மறுபடியும் தவற விட்டதை
நினைத்து நீ முகம் சுளிக்கிறாய்
தோல்வியிலும் நீ எத்தனை அழகு

தொடர்ந்து முயற்சி செய் என்கிறேன்!
பட்டாம்பூச்சிகள் பறந்து விடும்
என்ற நம்பிக்கையில்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

காத்துக்கிடக்கிறது...

தேவைகள் தீர்ந்து

போகாத தேகத்தில் தாகமென

நீள்கிறது நமக்கான காதல்...!!

  

ஒட்டி வைக்க இயலாத

புன்னகையின சத்தமாய் குவிந்துகிடக்கிறது

 இதழ்கள் எங்கும்   ஒரு சோகம்...!!

  

புரிந்துகொள்ள

இயலாத உரையாடல்களின

தொகுப்புகள் எல்லாம் இன்னும்

உறங்கிக் கிடக்கிறது என் மௌனத்தில்... !!

 

 ரணங்களின் உச்சமாய்

கிளிஞ்சலென சிதறிக் கிடக்கிறது

நம் இருவருக்குமான

எதிர்பார்ப்புகள்....!!! 

 

 வார்த்தைகள் பல தொடுத்து

சேர்த்து வைத்த உரையாடல்கள் எல்லாம்

காத்துக்கிடக்கிறது கடிகாரத்தின் பக்கத்தில்

உனது வருகைக்காக..!!!

 

நீ அருகில் இருப்பதில்

இல்லாத மகிழ்ச்சியை

தனிமையில் உன்னை

நினைத்தலின் உச்சத்தில் உணர்கிறேன் .

 

உந்தன் விடை தரும்

பார்வை ஒன்றின் உச்சத்தில்

துடிதுடித்து மெல்ல அமைதி கொள்கிறது

குட்டி இதயம் ஒன்று உள்ளுக்குள்...!!

 

யுத்தம் செய்து சத்தமின்றி

இறந்து போவதை விட

யுத்தமின்றி நித்தம் உன் நினைவுகளில்

கரைந்து போவதில் எனக்கு மகிழ்ச்சியே !

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

தோற்றுக்கொண்டே போகின்றேன்..

உன்னை மறக்க முயற்சிக்கும்

ஒவ்வொரு நிமிடமும்

உன் நினைவுகளால்

என்னை உயிர்ப்பிக்கின்றாய்

 

உன்னுடன் பேசிப்பழகிய

அந்த அழகிய தருணங்களை

என் மனம் எண்ணிப் பார்க்கின்றது

முடியவில்லையடா என்னால்..!!

 

உன்னிடம் மட்டுமே

தோற்றுக்கொண்டே போகின்றேன்..

கண்ணீர் சிந்தும் என் கண்களை விட

உன்னை மறக்க நினைத்தும்

மறக்க முடியாமல் தவிக்கும்

என் இதயதிற்கே வலி அதிகமடா..

 

உன்னை பிரிந்திருக்கும் ஒவ்வொரு நொடியும்

என் அத்தனை நரம்புகளிலும்

வலியை உணர்கிறேன்..

உன் பிரிவு சொல்லும் இந்த வலியை விட

மரணத்தின் வலி கூட பெரிதில்லடா..!!

 

நாட்கள் நகர தொடங்கிவிட்டன ஆனாலும்

உனக்கான தேடல்களும் எனக்குள்

அதிகரிக்க தொடங்கிவிட்டன..

ஒரு நிலையில் உன் நினைவுகளால்

என் சுயநிலையை இழந்திடுவேனோ

என்கிற பயமும் என்னுள் அதிகரித்துவிட்டது..

 

சத்தமின்றி என் மனதோடு

உன்னை மறப்பேன் என்று

செய்துகொண்ட சத்தியமும்

ஏனோ உன் நினைவுகளால்

இன்று செயல் இழந்து போய்விட்டது.!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

மனித உடலில்

• உடலில் மொத்தம் 100 டிரில்லியன் (1 x 1012) ஸெல்கள் உள்ளன, ஒரு சதுர அங்குலத்தில் உள்ள ஸெல்களின் எண்ணிக்கை, 19 மில்லியன் (19 x 106).

• சராசரியாக ஒரு மனித தலையில் 100,000 முடிகள் உள்ளன.

• மனித உடலில் இரத்தம் ஓடும் தமனி, சிரை, நாளங்கள் இவற்றை நீளமாக வைத்தால் அவை 60,000 மைல் நீளம் வரும்.

• பிறந்தது முதல் இறப்பது வரை நம் இதயம் சராசரியாக குறைந்தது 2.5 பில்லியன் தடவைகள் துடிக்கிறது.

• மனித இதயம் உண்டாக்கும் அழுத்தம் சுமார் 30 அடிகளுக்கு இரத்தத்தை பீய்ச்சி அடிக்கப் போதுமானது.

• உடலின் இருப்பதிலேயே உறுதியான தசை, நாக்கு.

• 2010ல் உங்கள் ஒவ்வொரு இமையும் சுமார் 10,000,000 தடவைகள் மூடித் திறந்தன (ஒவ்வொரு வருடமும்).

• ஒரு இரத்த சிவப்பணு உடலை முழுக்க சுற்றி வர ஆகும் நேரம் 20 நொடிகள்.

• மனிதர்களுள் இடது கைப்பழக்கமுள்ளவர்கள் மொத்தம் 10 சதம் மட்டுமே.

• உடலின் மொத்த எலும்புகளில் நாலில் ஒரு பகுதி பாதத்தில் உள்ளது.

• இளவேனில் காலத்தில் குழந்தைகள் வேகமாக வளருகின்றனர்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

யார் சொன்னது

 

யார் சொன்னது

மிட்டாயெல்லாம் இனிக்குமென்று?

கீழ் வீட்டுக் குழந்தையின்

பிறந்தநாள் மிட்டாய் கசக்கிறது,

மாடிவீட்டு மலட்டுத்தாய்க்கு…

யார் சொன்னது

மிட்டாயெல்லாம் இனிக்குமென்று?
 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, June 3, 2011

மனைவியை காதலியுங்கள்!.....

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, June 1, 2011

கவன ஈர்ப்புத்தீர்மானம்

என் வளையல்களின்
மாநாட்டில்
அவன்
கவன ஈர்ப்புத்தீர்மானம்
ஒருமனதாய்
இருமனதால்
நிறைவேற்றப்பட்டது
**
இனி உடைபடும்
வளையல்களுக்காய்
நீ வருந்தவேண்டாம்
அவை இந்நேரம்
மோட்ஷம் அடைந்திருக்கும்
**
வளையல்
ஏன்டா பிடிச்சிருக்கு??
உன் முத்தத்தின்
சத்தம் மறைக்கும்
ஆயுதம் என்பதாலா??
**
என் உடையாத
வளையல்களுக்கு
முத்தம் தராதே
உடைந்த
வளையல்களின்
சத்தம் தாங்கமுடியவில்லை
**
உன்னிடமிருந்து
உதிர்ந்து விழுந்த
முத்தத்திற்கு
மௌன அஞ்சலி
செலுத்தின
உடைந்த
என் வளையல்கள்
**
உன் மீது
நான் கொண்ட
காதலைப் போலவே
கணக்கிலடங்காதவை
நமக்காக உடைந்த
என் வளையல்களும்
 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

பைத்தியம் தானடா....

 

உன்னிடமிருந்து
எனக்கு வரும்
மெயில்களையும்
நான் அனுப்பும்
பதில்களையும்
சேர்த்து வைக்கும்
நான்....

என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்....

ஆயிரம் சொந்தங்கள்
அருகிலிருந்தும்
என் சுக, துக்கங்களில்
உன் தோள்சாயத்துடிக்கும்
நான்....

நல்லக் கவிதைகள்
நான் தந்தாலும்
நீ சொல்லும் பொய்களை
கவிதை என்னும்
நான்....



தினம் நூறு
தந்தாலும்
சோகத்தின் விளிம்பில்
என்
நெற்றியின் மத்தியில்
தரும் அந்த
ஒரு முத்தத்தை மட்டுமே
சுகிக்க நினைக்கும்
நான்....



நீ இழந்த
நாட்களை
நான் இறந்த
நாட்களென
உணரும்
நான்...


எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....


உன்
வார்த்தையில்
சொன்னால்
பைத்தியம் தானடா..!!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

யாருக்கும் தெரியாமல்....

 
 
உன்னை நேரில் பார்த்து
எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன
அதனால் என்ன
உன்னை நினைத்துப் பார்த்து
ஒரு நொடி கூட ஆகவில்லையே

*************************************

நீ அப்போது குடியிருந்த வீட்டை
ஒருமுறை இப்போது நான் பார்த்தேன்
பாவம்
என்னை மாதிரி உன் ஞாபகத்தோடு
இன்பமாய் வாழத் தெரியவில்லை அதற்கு

*************************************

ஆனந்தமாய்கூட
என் கண்கள் உன்னை நினைத்து
கண்ணீர் சிந்த விரும்பவில்லை
கண்கள் முழுவதும் நிறைந்திருக்கும்
உன் காட்சியில் ஒன்றே ஒற்றை
அந்தக் கண்ணீர் கரைத்துவிட்டாலும்
பார்க்கும் சக்தியை இழந்துவிடாதா
என் கண்கள்

*************************************

ஒரு குழந்தையைப்போல
உன் அப்பாவிடம் நீ
கொஞ்சி விளையாடியதை
நான் பார்த்ததும்
நாக்கைக் கடித்துக்கொண்டு
முகத்தைத் திருப்பிக்கொண்டாய்
எனக்கும் உன் அப்பாவுக்கும்
தெரியாமல்.
அதை நினைக்கும் போதெல்லாம்
நான்
முகத்தைத் திருப்பிக்கொண்டு
நாக்கைக் கடித்துக் கொள்கிறேன்
யாருக்கும் தெரியாமல்

*************************************

உன்னை நினைத்தபடி
ஓடும் பேருந்திலும் ஏறுகிறேன்
ஓடாத பேருந்திலும்
உட்கார்ந்துவிடுகிறேன்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

தேவதை!........

[saloni+4.jpg]
தேவதை எப்படி இருக்கும்
என கேட்கும் உன் தம்பியிடம்
ரொம்ப அழகாயிருக்கும் என
சொல்லி முடிக்கிறாய் நீ.
உன்னைவிட அழகாய் இருக்க
முடியாதென்று சொல்லாமல்
தவிக்கிறேன் நான்...

தேவதைகளுக்கு சிறகுகள்
இருக்கும் என்று எங்கோ
படித்திருக்கிறேன்..
பொய் சொல்வோர் நிறைய
இருந்திருக்கிறார்கள் போலும்
நீ இங்கே சிறகில்லாமல்
இருப்பதை யாரும்
பார்க்கவில்லையோ

வானத்திலிருந்து
தான் தேவதைகள்
வருமாமே..நீ மட்டும்
எப்படி
எதிர்வீட்டிலிருந்து
வருகிறாய்...

தேவதைகள்
எப்போதுமே புன்னகையோடு
தான் இருக்குமாம்.
நீ மட்டும் காதல் சொன்னால்
ஏன் கோபப்படுகிறாய்.

தேவதைகள் எல்லாம்
காரணமின்றி யாரையும்
துன்புறுத்தாதாம்..
நீ மட்டும்
என்ன என்னை இல்லாமலே
ஆக்கிவிட்டாய்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

திருமணமான ஆண்களை இளம் பெண்கள் விரும்புவது ஏன்?

ளம் பெண்களுக்கு திருமணம் ஆன ஆண் மீது அதிக ஈர்ப்பு ஏற்படுவதாக சொல்லப்படுவது உண்டு. இது ஏன்?

மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருமணமான ஆண் தன்னை கவர என்ன காரணம் என்பதை விளக்குகிறார்.

"நான் பணிக்கு செல்லும் பெண். இப்போது திருமணம் செய்து கொள்ளும் நிலையில் நான் இல்லை. எனவே திருமணமான ஆண் என் விருப்பத்துக்கு சரியான தேர்வு என நினைக்கிறேன். ஏனெனில் அவர் என்னிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளமாட்டார். அவரிடம் பல விஷயங்கள் பிடித்துப் போனாலும் எனக்கு அவர் கிடைக்க மாட்டார் என்பது தெரியும். எனவே அவரிடம் என்னை ஒப்படைக்க வேண்டிய நிர்ப்பந்தம் கிடையாது.

என் அழகைப் பார்த்து தொடர்பு கொள்ளும், பழகும் ஆண் நண்பர்களை எனக்கு பிடிப்பதில்லை. நான் திருமணமான அந்த ஆண் நண்பரை பார்த்ததுமே விரும்பத் தொடங்கவில்லை. ஆனால் அவர் என் விருப்பங்களை அறிந்தவராகவும், எனக்காக நான் விரும்புவதை தரத் தொடங்கியதையும் அறிந்தபோது நான் அவரை விரும்பி விட்டேன். நான் அவரது வலையில் விழுந்து விடவோ, என்னை இழந்து விடவோ நினைப்பதில்லை. அவர் அவரது மனைவியைவிட என்னை அதிகம் விரும்புகிறார். எனவே அவரை என்னால் குறைகூற முடியாது" என்கிறார். இந்த மாதிரியான மனநிலை கொண்ட பெண்களைப் பற்றி டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள்.

"ஒரு பெண் திருமணமான ஆணால் கவரப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. பெரும்பாலும் அவர் பாதுகாப்பானவர் என்பது முக்கியமான காரணம். ஒரு பெண் எவ்வளவு விரும்புகிறாரோ அந்த அளவுக்கு ரகசியம் பாதுகாப்பவராக திருமணமான ஆண் இருக்கிறார். இன்னும் சில பெண்கள், திருமணமானவர் எல்லை மீறுவதை உணர்வு ரீதியான ஊக்கமருந்தாக நினைக்கிறார்கள்.

திருமணமான ஆண்கள் எப்போதும் இந்த மாதிரியான பெண்களை காதலுடன் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. இதுவும் கூட பல பெண்களை கவர்ந்து விடுகிறது. தனிமையில் வாழும் அதிக வயதுடைய பெண்கள் பலர் இதுபோன்ற திருமணமான ஆண்களின் உறவை விரும்புகிறார்கள். அவர்கள் திருமணமான ஆண்களைப் பார்த்ததும் அதிகமாக விரும்பத் தொடங்கி விடுகிறார்கள். அவர்களுக்கே எப்படிப் போகிறோம், இது எங்கே போய் முடியும் என்பது தெரிந்தாலும் அவர்களால் இந்த ஈர்ப்பிலிருந்து வெளிவர முடிவதில்லை" என்கிறார் மும்பையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் கெர்சி பி.சாவ்டா.

டாக்டர் அஞ்சலி சாப்ரியா, "பெண்கள் உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பை விரும்புவதால் தான் திருமணமான ஆண்களை விரும்புகிறார்கள்" என்கிறார். இதுபற்றி அவர் கூறுகிறார் "தனிமையில் இருக்கும் பெண்கள்தான் அதிகஅளவில் திருமணம் ஆன ஆண்களை விரும்புகிறார்கள். திருமணமானஆண்கள் பெண்களின் உணர்வை புரிந்தவர்களாகவும், அதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். பொருளாதார ரீதியிலும் `செட்'டில் ஆக வேண்டும் என்ற உணர்வுடையவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த இரண்டையுமே பெண்கள் விரும்புவார்கள். எனவே திருமணமான ஆண்களை பெண்களுக்கு எளிதில் பிடித்துப்போகிறது.

திருமணமாகாத வாலிபனை இந்த விஷயங்களில்தான் திருமணமானவர் மிஞ்சிவிடுகிறார். மேலும் அவர் எல்லா விஷயங்களிலும் பெண்ணின் விருப்பங்களை தொடர்ந்து வருபவராக இருக்கிறார். இதுவும் பெண்களை மிகவும் கவர்ந்து விடுகிறது. சில பெண்கள், தங்களை விரும்பும் ஆண் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து கவனித்துக் கொள்வதை எதிர்பார்க்கிறார்கள். தங்களின் சுதந்திரத்தையும், தனி மதிப்பையும் அவர்கள் விரும்புகிறார்கள்.

இந்த எதிர்பார்ப்பு திருமணம் ஆன ஆண்களிடம் நிறைவேறுவதுபோல் தெரிவதால் பெண்கள் அவர்களை அதிகமாக விரும்புகிறார்கள்" என்றார்.

எப்படி இருந்தாலும் திருமணமான ஆண்களை, திருமணம் ஆன பெண்ணோ, திருமணம் ஆகாத பெண்ணோ விரும்புவது சரியில்லை. எப்போதுமே அது ஆபத்தானது.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

பள்ளி விடுதி!.......


      உன்னைக் கட்டிப்பிடிக்கும்
      காலங்களில் விடுதியில்
      விட்டுச்சென்றாய்- என்னைப்
      படிப்புக்காக விற்றுச்சென்றாய்!
      
      என் கால்கள் இரண்டும்
      உனக்காக முண்ட;
      கத்தி அழுதேன் நீயோ
      உன் காதை பொத்திச்சென்றாய்;
      விழியால் கதறிச் சென்றாய்!
      
      இருள் சூழ்ந்த இரவில் உன்
      அணைப்பிற்கு ஏங்கி அழுவேன்;
      உன்னால் தலைக்கோதி
      இமைமூட வேண்டிய என்னை;
      கம்புடன் கண்ணை மூடச்சொல்லும்
      விடுதி ஊழியன்!
      
      அழுது அழுது
      அழுத்துப்போன;
      கனத்துப்போன மனம் - இனி
      விடுப்பேக் கிடைத்தாலும்
      விருப்பமில்லை
      வீட்டிற்க்குச் செல்ல!
      
      பழகிப்போனப் பிரிவோ
      எனக்கு மரத்துவிட்டது;
      உங்களைக் காணத் தடுத்துவிட்டது!
      
      விண்ணப்பம் என்று
      ஒன்றுமில்லை;
      விருப்பமிருந்தால செய்யுங்கள்
      அனுப்பி விடாதீர்கள் தம்பியையும்
      பள்ளி விடுதிக்கு!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

மசக்கை!.....


      ஆண்மைக்கு
      இனிப்புக்கொடுத்து;
      அழுதுக்கொண்டே
      நீ சொன்னாய்
      மசக்கை என்று;
      பிரிந்துச் சென்ற உதடுகளும்
      சுருங்கிப்போன இதயமுமாக நான்!
      
      உறவுகள் குழந்தைக்குப்
      பெயர் தேடிப்;
      பக்கங்களை திண்றுக்கொண்டிருக்க;
      இணையத்திலும்;
      இணைந்த நண்பர்களிடமும்
      பெயர் வேட்டை
      நான் இங்கு நடத்த!
      
      ஆணா!பெண்ணா என
      ஆராய்ச்சி நடக்க;
      அழுதுக்கொண்டே
      நீ சொன்னாய்
      வந்திடுங்க!
      
      சொன்னதும் சோகம் வெடிக்க;
      சிரித்துக்கொண்டே
      ஆறுதல் சொல்வேன் உனக்கு!
      கேட்டுக் கேட்டு
      அலுத்துப்போனாலும்;
      அழுதுக்கொண்டேக்
      கேட்பாய் மீண்டும்!

      ஒட்டியிருக்கும் சோகங்களைப்
      போர்வைக்குச் சொந்தமாக்கி;
      எல்லோரும் உறங்கியப்பின்னே
      எழுந்து அழுதுவிட்டு;
      வீங்கியக் கண்ணைத்
      துடைத்துவிட்டுத்
      தூங்கச் செல்வேன்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

உன் விடுமுறைக்காக!

     
      விழிகளில் நீர்
      கோர்த்துக்கொண்டு;
      வழிகளைப் பார்த்துக்கொண்டு;
      உனக்காகக்
      காத்துக்கொண்டிருக்கிறேன்;
      
      அறையினில் வந்தால்
      உன் நறுமணத்தால்;
      நசுங்கிப்போகும் என் மனம்;
      நீ இல்லையென்றாலும்
      எதிரொலிக்கும் உன்
      குரல் ஒலி பிரம்மையாக!
      
      சந்தோஷங்களை உன்
      செவிகளுக்கு எடுத்துச்செல்ல;
      இடையில் தரகராகத்
      தொலைப்பேசி!
      திறந்துவிடும் உதடுகளால்;
      பளிச்சிடும் பற்கள்;
      உன் அழைப்பைக்கண்டு;
      
      துண்டிக்கக் காத்துக்கொண்டிருக்கும்
      தொலைப்பேசி இருப்பால்;
      இருப்புக்கொள்ளாது என்
      மனம் உன் அழைப்பை
      வெறுத்துத் தள்ளாது!
      
      பணம் எடுக்க
      ரணம் கொடுத்துப்;
      பயணம் சென்றாய்;
      இளமைத் தவித்து;
      கனவை இறுக்கிப்பிடித்து;
      மனைவி உனக்காக;
      உன் விடுமுறைக்காக!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.