Followers

திருக்குறள்

Saturday, May 26, 2012

மார்கழி ஓவியங்கள்!

விடியும்வரை தூங்கிப்பழகிய உன்னை
மார்கழியில் மட்டும்
விடியலுக்கு முன்னே எழுப்புகிற
உன் அம்மாவுக்குத் தெரியுமா?
மார்கழியில் மட்டும்
உனது கோலத்தில் தான்
சூரியனே கண்விழிக்கிறானென்பது?
 
மார்கழி விரதமென்றால்
அசைவம் உண்ண மாட்டாயா?
பார்வையிலேயே
என்னை விழுங்குவதெல்லாம்
என்ன வகை?
 
நகர்ந்து நகர்ந்து
நீ வரையும்
அரிசிமாவுக் கோலத்துக்கு போட்டியாக,
தொடர்ந்து வந்து
நீர்க்கோலம் வரைகிறது
உனது ஈரக்கூந்தல்!
 
இத்தனை நாட்களாய்
முற்றத்திலமர்ந்து
ஓர் ஓவியனின் நேர்த்தியோடு
உள்ளங்கையில் நீ வரைந்த
மருதாணி ஓவியங்களைப்
பொறாமையுடன் பார்த்துவந்த
நிலத்தின் ஏக்கத்தையெல்லாம்
வண்ணம் கொண்டு
தீர்த்து வைக்கின்றன
உனது மார்கழி ஓவியங்கள்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

முத்தம் போர்த்திவிடு வா…

 
நினைவுகளை தலையணையாக்கி

உறங்கிய நாளில்

கனவெல்லாம்

உன் வாசம்!

*

இதயத்தின் சுவரெங்கும்

நிறைகிறாய்

பின்னிரவின் மீது

பற்றி படர்ந்து விரியும்

மெல்லிசையென!

*

எதிர் எதிர் வந்தபோது

என் நிழலோடு உரசிக் கொண்டதற்கே

வெட்கத்தில் சிவந்துபோகிறது

உன் நிழல்!

*

உயிரெங்கும்

குளிர் ஊசி -

முத்தம் போர்த்திவிடு வா

*

உயிர் பட்டத்தின்

கயிறு

உன் கைகளில் -

பத்திரபடுத்துவதும்;

விட்டுவிடுவதும்;

உந்தன் இஷ்டம்!

*

பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்,

என்னுள்

காதல் இன்று

செல்லாக் காசாகிவிட்டது

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

முத்தம் போர்த்திவிடு வா…

நினைவுகளை தலையணையாக்கி

உறங்கிய நாளில்

கனவெல்லாம்

உன் வாசம்!

*

இதயத்தின் சுவரெங்கும்

நிறைகிறாய்

பின்னிரவின் மீது

பற்றி படர்ந்து விரியும்

மெல்லிசையென!

*

எதிர் எதிர் வந்தபோது

என் நிழலோடு உரசிக் கொண்டதற்கே

வெட்கத்தில் சிவந்துபோகிறது

உன் நிழல்!

*

உயிரெங்கும்

குளிர் ஊசி -

முத்தம் போர்த்திவிடு வா

*

உயிர் பட்டத்தின்

கயிறு

உன் கைகளில் -

பத்திரபடுத்துவதும்;

விட்டுவிடுவதும்;

உந்தன் இஷ்டம்!

*

பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்,

என்னுள்

காதல் இன்று

செல்லாக் காசாகிவிட்டது

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வீட்ல சின்னதா பிரச்சினையா?

வீட்ல சின்னதா பிரச்சினையா? கணவர் கோவிச்சிட்டு ஆபிஸ் போயிட்டாரா? என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்து அலுத்துவிட்டதாக கவலைப் படாதீர்கள். வாழ்க்கையில் சின்ன சின்ன ஊடல்கள் இருந்தால்தான் இரவு நேர கூடல்களில் சில சுவாரஸ்யங்கள் இருக்கும். கணவரை வழிக்கு கொண்டு வர நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.

மெசேஜ் தட்டி விடுங்க

பத்து வருடங்களுக்கு முன்பு வரை செல்போன் பயன்பாடு இந்த அளவிற்கு இல்லை. அப்பொழுது பேஜர் காலம்தான். கணவர் கோவித்துக் கொண்டால் அவரை சமாதானப்படுத்த அதிக அளவில் ஐ லவ் யூ மெசேஜ் அனுப்புவார்களாம். இப்பொழுது அப்படியில்லை செல்போனில் விரல் நுனியில் விளையாடுகிறார்கள். நூறு என்ன ஆயிரம் முறை ஐ லவ் யூ மெசேஜ் தட்டி விடுங்கள். ஒரு கோடி மன்னிப்பு கேளுங்கள். பல லட்சம் முத்தங்களை அனுப்புங்கள். அப்புறம் பாருங்கள் உங்களவருக்கு உங்கள் மீது கோபமாவது வருவதாவது. எப்போதடா ஆபிஸ் முடியும் என்று காத்துக்கொண்டிருப்பார்.

பிடிச்ச கலரு கருப்பு

கருப்பான உடைகள் அனைவருக்குமே ஏற்ற ஆடைகள்தான். அதிலும் மாலை நேரத்தில் கணவன் அலுவலகத்தில் இருந்து வரும்போது மனைவி கருப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தால் போதும் ஆசை அள்ளிக்கொண்டு போகும். செக்ஸ் மூடு எளிதில் ஏற்படும்.

கவர்ச்சியான வெள்ளை

வெண்மை நிறம் நமது உடலமைப்பை அப்படியே கவர்ச்சிகரமாக எடுத்துக்காட்டும். வெண்மை நிற ஆடை அணிந்திருந்தால் அதுவும் அந்த ஆடை கொஞ்சம் மென்மையாக டிரான்ஸ்பரன்டாக இஐந்தால் போதும் உங்களவருக்கு உங்கள் மீது கோபம் வர வாய்ப்பே இல்லை.

குதிகால் உயர செருப்பு

குதிகால் உயர செருப்புகள் கால் அழகை அதிகரித்துக் காட்டும். இது மாதிரியான குதிகால் உயர செருப்புகள் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் கால் அழகைப் பார்த்த உடல் உங்கள் கணவரின் கண்கள் ஆசையில் மின்னுமே.

அழகான பின்புறம்

பெண்களுக்கு பின்புறம் எடுப்பாக அழகாக இருந்தால் அதை விரும்பாத ஆண்களே இல்லை எனலாம். அது பெண்களுக்கு கூடுதல் கவர்ச்சியை தரும். எனவே உங்கள் பின்னழகை மெயிட்டெயின் செய்யுங்கள் உங்களவருக்கு உங்கள் மீதான காதலை அதிகரிக்கும்.

உள்ளாடைக்கு பை

மார்பகத்தை சரியான அளவாக எடுத்துக்காட்டுவது ப்ரா. அதை அணிவது அழகு அதிகரிக்கும்தான் என்றாலும் ப்ரா அணியாமல் இருந்தால் உங்கள் கணவரை எளிதில் அட்ராக்ட் செய்ய முடியுமாம். மாலையில் உங்களவர் அலுவலகம் முடிந்து வரும் போது தலைக்கு குளித்து விட்டு லூஸ் ஹேர் விட்டு அதில் கொத்தாய் மல்லிகை சூடி ப்ரியாய் நைட்டி அணிந்து அவருக்கு வரவேற்பு கொடுங்களேன். அலுவலகத்தில் இருந்து இனிமேல் அவர் லேட்டாகவே வரமாட்டார்.

இன்னைக்கே இந்த ஆலோசனைகளை பின்பற்றிப் பாருங்களேன்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, May 25, 2012

காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!!

 

காதல் என்பது புனிதமானது. அது இருவரின் மனதிலும் தோன்றும். அதுவே ஒருவர் கூறி ஒருவர் ஏற்கவில்லை என்றால் அது ஒருதலைக் காதல் ஆகிவிடும். அப்படி காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் இருக்க முடியுமா என்ன? இதனால் வாழ்க்கை தான் சீரழியும்.

பொதுவாக ஒருதலைக் காதலானது ஒருவர் மற்றொருவரை இம்ப்ரஸ் பண்ணாமல் வராது. அப்படி காதல் வந்து ஒப்புக் கொள்ளவில்லை என்றால் கவலை வேண்டாம். காதல் தோல்வி ஆகிவிட்டது என்று சிலர் தற்கொலை செய்கிறார்கள். அப்படி செய்பவர்கள் மடையர்கள்
, முட்டாள்கள். சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல் என்கின்றனர் நிபுணர்கள்.

வாழ்க்கை என்பது ஒரு முறை தான் வரும். அந்த வாழ்க்கையை ஒரு வரம் என்றும் சொல்லலாம். அப்படி கிடைக்கும் அற்புத வாழ்க்கை சாதாரண விஷயமல்ல. நாம் தான் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே!

மீண்டும் பழைய பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு யாராவது இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். அப்படி புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.

சொல்லப்போனால் காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்ததாக திருமணம்
, குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள். ஆனால் காதலில் தோற்றவர்கள் அந்தக் காதலை வாழ்நாள் முழுவதும் மறக்காமல், மனதிற்குள் ஒரு தாஜ்மகாலைக் கட்டி தோற்றுப்போன காதலை நினைத்து பூஜித்து வருவார்கள்.

ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் ஒரு சுகமான அனுபவமே! காதல் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்கலாம் என்று சிலர் கேட்கலாம். உலகில் காதல் இல்லாத எவரும் இல்லை
, அந்த காதல் சுவாசம் மாதிரி ஒரு நொடியும் நம்மை விட்டு போகாது. அடுத்த காதல் எப்போது வேண்டுமானாலும் வரும். எனவே கவலைப்படாமல் தயாரா இருங்க!

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

புதிதாக திருமணமான பெண்

கூட்டுக்குடும்பங்கள் இன்றைக்கு அருகி வருகின்றன. ஒன்றாய் இருக்கும் குடும்பங்கள் சிதறுண்டு போவதற்குக் காரணம் நாம் பேசும் பேச்சும் நம் செயலும்தான். புதிதாக திருமணமான பெண்கள் கூட்டுக்குடும்பத்தில் உள்ளவர்களுடன் எவ்வாறு பேசுவது என்பது பற்றி நிபுணர்கள் கூறும் ஆலோசனையை கேளுங்களேன்.

பாடி லாங்குவேஜ் என்பது நம்மைப் பற்றி பிறருக்கு உணர்த்தும் உன்னத மொழி. ஒருவரிடம் வார்த்தையால் நாம் பேசுவதற்கு முன்பே நம் கண்
, கை அசைவுகள், அமரும் விதம் போன்றவை நம்மைப் பற்றி அவரிடம் வெளிப்படுத்துகின்றன. இதனைத்தான் 'பாடி லாங்குவேஜ்' என்கின்றனர். புதிதாக திருமணமான பெண் அதிகம் பேசுவதை விட தன்னுடைய உடல்மொழிகளினாலேயே புகுந்த வீட்டு உறவுகளுடன் பினைப்பை அதிகரிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

புன்னகையுடன் பேசுங்கள்

புதிய இடம் புதிய உறவுகள் என திருமணமான பெண்கள் நிறைய புதியவைகளை சந்திக்க வேண்டியிருக்கும். யாராக இருந்தாலும் எதை சொல்வதாக இருந்தாலும் உங்கள் கைகளால் விரித்தபடி புன்னகை தவழ பேசுங்கள். பாடி லாங்குவேஜ் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கே புரியும்!. நாம் மற்றவரிடம் பேசுவதற்கு முன்பே எங்கோ பார்த்துக் கொண்டு
, நகத்தை கடித்துக் கொண்டு, முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு கைகளை கட்டிக் கொண்டு பேசிப் பாருங்கள். உங்கள் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருப்பவர்களும், ஆர்வம் இழந்து விடுவார்கள்.

உறவுகளுடன் பிணைப்பு

புதிய உறவுகளுடன் பிணைப்பை அதிகரிக்க பாடிலாங்குவேஜ் அவசியம். கணவர் வீட்டில் உள்ள பெரியவர்களுடனோ
, அல்லது சிறியவர்களுடனோ கணவருடனோ அல்லது மாமியார், மாமனாருடனோ சரியான பாடி லாங்குவேஜில் பேசிப் பாருங்கள் நீங்கள் சொல்வதை அவர்கள் கண்டிப்பாக கேட்பார்கள்.

குரலை உயர்த்த வேண்டாம்

நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும். நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் உங்கள் மீது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். நகத்தையோ
, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும். பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.

கண்களைப் பார்த்து பேசுங்கள்

மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும். அதேபோல் மற்றவரிடம் பேசும்போது
, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டுகிறது. நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.

பரிவோடு பேசுங்கள்

வீட்டில் இருக்கும் தாத்தா
, பாட்டி போன்ற பெரியவர்களிடம் பரிவோடு பேசுங்கள். அதேபோல் குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பாசத்தோடு பேசவும். உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

கண்ட இடத்திலும் 'காதல்'?... கஷ்டமாயிடப் போகுது ஜாக்கிரதை!!

தாம்பத்ய உறவிற்கு ஏற்ற இடம் படுக்கையறைதான். அதுதான் பாதுகாப்பானதும் கூட. ஆனால் மூடு வந்து விட்டது என்பதற்காக உறவு கொள்வதற்காக சில இடங்களை தேர்வு செய்கின்றனர் சில ஜோடிகள். அவை சில சமயங்களில் வேடிக்கையாகவும், வேதனையாகவும் முடியக்கூடும். எனவே ஆசையோடு சில விசயங்களை செய்வதற்கு முன் இடம் பொருள் ஏவல் போன்றவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். உறவிற்காக படுக்கையறையைத் தவிர எண்ணென்ன இடங்களை தேர்வு செய்கின்றனர் அதனால் என்ன பிரச்சினை ஏற்படும் என்பதையும் விவரிக்கின்றனர் நிபுணர்கள் படியுங்களேன்.

நீச்சல் குளத்தில்

நீச்சல் குளம் நீச்சல் பழக மட்டுமல்ல. தம்பதியர் ஜாலியாக என்ஜாய் செய்யும் இடமும்தான் என்கின்றனர் நிபுணர்கள். தண்ணீரில் ஜாலியாக நடக்கும் இந்த செக்ஸ் விளையாட்டு உற்சாகத்தை அதிகரிக்குமாம். ஆனால் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள் எச்சரிக்கை.

சமையலறை சங்கீதம்

சமைத்துக் கொண்டிருக்கும் போது சட்டென பின்னால் வந்து இருக்கி அணைக்கும் துணைவரை தவிர்க்க முடியாதுதான். அந்த நேரத்தில் ஏற்படும் சந்தோச அணைப்போடு சிலர் சமையலறையிலேயே உறவில் ஈடுபடுவது உண்டு. சமையலும் சந்தோசமும் ஒரே நேரத்தில் நடைபெறும். இது வசதியாக இருக்காது அதேசமயம் ஆரோக்கியமானதும் அல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

தியேட்டரில் ஜாலியாக

இளம் ஜோடிகள் தியேட்டரில் கார்னர் சீட்டில் உட்கார்ந்து படம் பார்ப்பதே ஒரு ஜாலிக்காகத்தான். தியேட்டரில் படம் முடிந்து அனைவரும் வெளியேறிய உடன் உறவுகொள்பவர்கள் இருக்கிறார்களாம். இது உறவு கொள்ள ஏற்ற இடம் இல்லை. கேமரா கண்கள் கண்காணித்துக் கொண்டிருக்கும். அதேபோல் ரவுண்ட்ஸ் வரும் பாதுகாவலர்கள் கையில் சிக்க வாய்ப்புள்ளது.

சோபாவின் நெருக்கத்தில்

வீட்டில் உள்ள சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போதோ
, டிவி பார்க்கும் போதோ உறவு கொள்ளவேண்டும் என்ற ஆசை ஏற்படுவது இயல்புதான். ஜாலியான அந்த இடம் உறவு கொள்ள வசதிபடாது என்றாலும் சற்றே வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்துமாம்.

மாடிப்படியின் அடியில்

மாடிப்படியின் அடியில் சின்னதாய் இருக்கும் இடத்தில் தம்பதியர் சிலர் நெருக்கமாய் உறவில் ஈடுபடுவதுண்டு. இது காதல் உணர்வின் நெருக்கத்தை அதிகரிக்கும். ஆனால் சரியான உறவுக்கு வசதிப்படாது என்கின்றனர் நிபுணர்கள்.

நூலகத்தில் ஒரு ஜாலி

நூலகம் என்பது அமைதியான ஒரு இடம் அங்கே ஒதுக்குப்புறமாய் ஒரு இடம் கிடைத்தால் காதல் ஜோடிகள் விடமாட்டார்களே. தங்கள் ஜாலி வேலையை ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் லைப்ரரி காதலுக்கான இடம் அல்ல என்று கூறும் நிபுணர்கள் அங்கே கேமரா இருக்க வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கின்றனர்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, May 23, 2012

குணத்தைக் கண்டுபிடிக்க புதிய வழி!....

 

ஒருவர் எப்படிப்பட்டவர் என்று அறிய வேண்டுமா? அவரது வாசத்தைக் கொஞ்சம் மோப்பம் பிடித்தாலே போதும் என்கிறார்கள்

ஆய்வாளர்கள்.இதுதொடர்பான ஆய்வை போலந்து நாட்டு ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். அவர்கள் தங்கள் ஆய்வுக்கு உதவிய தன்னார்வலர்களிடம், சிலரின் ஆடை மணத்தை மோப்பம் பிடிக்கச் செய்து, அதன் மூலம் அவர்களைப் பற்றிக் கணிக்கச் செய்தனர்.

அப்போது அவர்களின் கணிப்பு முழுக்க முழுக்கச் சரியாக இல்லாவிட்டாலும், பெரும்பாலும் பொருந்துவதாக இருந்தது. நமக்கு ஒருவரைப் பற்றிய முதல் அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில், காணும், கேட்கும் விஷயங்களுடன், அவரது `வாசமும்' முக்கியப் பங்கு வகிக்கிறது என்கிறார்கள் போலந்து ஆய்வாளர்கள்.

``நாம் ஒவ்வொருவரும் நமது தோற்றத்தின் மூலம் மட்டுமின்றி, வாசத்தின் மூலமாகவும் நம்மை வெளிப்படுத்துகிறோம்'' என்று இந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் ஒருவரான, வுரோகிளாவ் பல்கலைக்கழகத்தின் அக்னீஷ்கா சொரோகோவ்ஸ்கா கூறுகிறார்.

இந்த ஆய்வுக்காக ஆய்வாளர்கள் 30 ஆண்களையும், 30 பெண்களையும் தொடர்ந்து 3 நாள் இரவு வெள்ளை டீ-ஷர்ட்களை அணியும்படி கேட்டுக்கொண்டனர். அவர்கள் எந்த வாசனைத் திரவியங்களையும் பயன்படுத்தக் கூடாது, சோப் கூட உபயோகிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த `வாசனை தானக்காரர் களிடம்' இருந்து பெறப்பட்ட டீ-ஷர்ட்களை 100 ஆண்களும், 100 பெண்களும் மோப்பம் பிடித்துக் கருத்துக் கூறுமாறு கேட்கப்பட்டது. பின்னர் அந்தக் கருத்துகளை, டீ-ஷர்ட்களை அணிந்தவர்களிடம் தெரிவித்து, எதெல்லாம் சரி என்று கேட்கப்பட்டது.

அப்போது, சில கணிப்புகள் பொருந்தவில்லை என்றபோதும், சில கணிப்புகள் மிகப் பொருத்தமாக இருந்தன. வாசத்தைக் கொண்டே ஒருவரின் ஆளுமையைக் குறிப்பிடத்தக்க அளவு கண்டுபிடித்து விடலாம் என்பது புதுமையான விஷயமாகக் கருதப்படுகிறது.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!

 

வாரத்தில் 40 மணி நேரத்திற்கும் மேல் உழைப்பவர்களுக்கு மூளை பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் நிபுணர்கள். பணம் சம்பாதிப்பதற்காக இன்றைக்கு அதிக நேரம் உழைக்கும் இளைய தலைமுறையினர் 40 வயதை கடந்த பின்னர் மனரீதியான, உடல்ரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அதிக நேரம் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு டிமென்சியா நோய் வரும் என்று ஏற்கனவே ஆய்வு முடிவு எச்சரித்துள்ளது. இந்த நிலையில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் வாரத்தில் நாற்பது மணிநேரத்திற்கு மேல் வரை வேலை பார்ப்பவர்களுக்கு படிப்படியாக மூளை சுறு சுறுப்பை இழந்து விடும் என்று தெரியவந்துள்ளது. உடல் உழைப்போ
, மூளை தொடர்பான உழைப்போ இரண்டிற்குமே இது பொருந்தும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

40 மணி நேரம் போதும்

சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும். எப்பொழுது பார்த்தாலும் அலுவலகப்பணியையே கட்டி அலுபவர்கள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும். உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும்
, சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு.

வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால்
, அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்றும், நடுத்தர வயதை கடந்த பின்பு தான் இந்த பாதிப்பு தெரிய வரும் என்றும், குறிப்பாக, முளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.

ஜாலியா இருக்கலாம்

இதுகுறித்து மேலும் கூறிய ஆய்வாளர்கள்
, சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை செய்பவர்கள் தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை செய்கின்றனர். இதனால் தான் இவர்கள் எளிதில் சோர்வடைகின்றனர், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதில் இருந்து விடுபடத்தான் விடுமுறை நாட்களை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கழிக்கின்றனர் என்றனர்.

உஷாராகிவிடுங்கள்

உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பணியாட்களை அதிக வேலை பார்க்க வைக்கும் நிறுவனங்கள் இறுதியில் தரம் குறைவான பணியை மட்டுமே அவர்களிடம் இருந்து பெறமுடியும். இதற்கு காரணம் அவர்களின் உடலும்
, மனமும் சோர்வடைந்து விடுவதே என்கின்றனர் நிபுணர்கள். பணியை நேசிப்பவர்களோ, அல்லது பணியாட்களை கசக்கி பிழிபவர்களோ யாராக இருந்தாலும் யாராக இருந்தாலும் 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை பார்ப்பவர்கள் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். இல்லையென்றால் பிரச்சனை உங்களுக்குத்தான்!

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

தாம்பத்ய உறவில் தினம் தினம் புதிய யுக்திகள்..!

 

காதலர்கள் மணிக்கணக்கில் ஸ்வீட் நத்திங்ஸ் பேசுவார்கள். அதேசமயம் திருமணம் ஆன தம்பதியர் அது போல பேசுவார்கள் என்று கூற முடியாது. திருமணம் ஆன மறுநாள் தொடங்கியே அவர்களுக்கு குடும்ப பொறுப்புகள் வந்து விடும். இருவரும் பேசிக்கொள்வதற்கு தனியாக சில மணிநேரங்களைக்கூட ஒதுக்க முடியாத அளவிற்கு சுமைகள் கூடி விடும். எனவே தம்பதியர் தங்களுக்கு என நேரத்தை ஒதுக்கி பேசுங்கள். அப்பொழுதுதான் தாம்பத்ய வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

கூச்சத்தை விடுங்கள்

காதல் வாழ்க்கையில் கூச்சம்தான் முதல் எதிரி எனவே இருவருமே கூச்சத்தை கைவிடுங்கள். தயக்கமில்லாமல் காதல் பாஷைகளை பரிமாறிக்கொள்ளுங்கள். இந்த பேச்சுதான் உங்கள் காதல் உணர்வுகளின் கிளர்ச்சியை அதிகரிக்கும்.

காதலை வெளிப்படுத்துங்கள்

எந்த ஒரு விசயத்தையுமே வெளிப்படுத்தினால்தான் தெரியும். செக்ஸ் விசயத்தில் உங்கள் தேவை என்னவோ அதை தெளிவாக தெரிவியுங்கள். அப்பொழுதுதான் இருவராலும் திருப்தியாக செயல்பட முடியும்.

துணையை புகழுங்கள்

புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. உங்கள் வாழ்க்கைத் துணை உட்பட. எனவே உங்கள் துணையை நன்றாக ரசித்து புகழுங்கள் வெட்கத்தில் முகம் குங்குமமாய் சிவக்கும். உங்கள் மீதான காதல் உணர்வுகளும் அதிகரிக்கும்.

புதிய யுக்திகளை கையாளுங்கள்

ரொமான்ஸ் என்றாலே தினம் தினம் புதிதாய் இருந்தால் உற்சாகம் பற்றிக்கொள்ளும். புதிதாக
, கிரியேட்டிவாக நீங்கள் செய்யும் செயல்கள் உங்கள் துணையை மகிழ்விக்கும். தினந்தோறும் ஒரே மாதிரியாக இருப்பது போராடித்து விடும் அல்லவா? எனவே தாம்பத்ய உறவின்போது புதிய யுக்தியை கையாளுங்கள்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!

உண்ணும் உணவை காலதாமதமாக உட்கொண்டால் உடலில் கொழுப்பு சத்து அதிகமாகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சரியான நேரத்தில் உணவு உட்கொண்டால் மட்டுமே கொழுப்பு சத்துக்கள் எரிக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

சாப்பிட வாப்பா
, சாப்பிட வா என்று அம்மா கெஞ்சிக்கொண்டே இருந்தாலும் காதில் வாங்காமல் இண்டர் நெட், தொலைக்காட்சி என எதிலாவது மூழ்கிப்போய்விடுகிறீர்களா? இது தவறான செயல். நேரத்திற்கு சாப்பிடாமல் இரவில் நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

கொழுப்பு அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சத்து ஏற்படும் என்பதில்லை உண்ணும் உணவை தாமதமாக சாப்பிட்டாலே உடம்பில் கொழுப்பு தங்கி உடல் பருமனாகிவிடும் எனவே உணவை சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக இதை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சால்க் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் இந்திய ஆராய்ச்சியாளர் டாக்டர் சச்சிதானந்தா பாண்டே தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

எலிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் அவற்றுக்கு தாமதமாக தீனி போட்டு சாப்பிட வைத்தனர். அவ்வாறு உணவு தின்ற எலிகளுக்கு கொழும்பு சத்து அதிகரித்து இருந்தது. அதே போன்றுதான் தாமதமாக சாப்பிடும் மனிதர்களின் உடலிலும் கொழுப்பு சத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஓரு குறிப்பிட்ட நேரத்தில்தான் கல்லீரல் மற்றும் குடல் உறுப்புகள் வேகமாக வேலை செய்யும். மற்ற நேரங்களில் அவை அமைதியாக தூக்க நிலையில் இருக்கும். எனவே
, அப்போது சாப்பிடும் போது உணவில் இருக்கும் கொழுப்பு சத்து எரிக்கப்படாமல் அப்படியே உடலில் சேர்ந்து விடுகிறது இதனால் இளம் தலைமுறையினருக்கு உடல் பருமன் ஏற்படுவது தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

எனவே இனிமே சாப்பிடற சாப்பாட்டை சரியான நேரத்துக்கு சாப்பிடுங்க சரியா
?

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

சருமத்திற்கு ஏற்ற குளியல் சோப் எது?

சோப் என்பது அழகை அதிகரிக்க உதவும் சாதனமாக இன்றைக்கு விளம்பரப்படுத்தப்படுகிறது. சந்தையில் தினந்தோறும் புதிது புதிதாய் சோப்புகள் குவிகின்றன. இதில் எந்த சோப் நல்ல சோப் என தேர்வு செய்வதில் குழம்பித்தான் போகின்றனர் அனைவரும். சிலர் 'பேபி சோப் உபயோகித்தால் சருமம் மிருதுவாகும்' என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ வாசனையான சோப்பே சிறந்தது என்கிறார்கள். உண்மையில் எதுதான் நல்ல சோப் என்று ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பண்டைய காலங்களில் சோப் என்பது பயன்படுத்தப்படவில்லை. இயற்கையான பொருட்களை பயன்படுத்தியே தேய்த்து குளித்து வந்தனர். பின்னர் சிகைக்காய் அறிமுகமானது. மெல்ல சோப் என்ற பொருள் அழுக்கும் நீக்கும் சாதனமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சந்தையில் இன்றைக்கு எண்ணிலடங்காத பிராண்டு சோப்புகள் வந்து விட்டன. அவற்றில் வாசனையான சோப் என்று பார்த்து வாங்குவதை விட நமது சருமத்திற்கு ஏற்ற சோப் எது என்பதை பார்த்து வாங்கவேண்டும்.

சருமத்தின் தன்மை

பிறந்த குழந்தைகளுக்கு சருமத் துவாரங்கள் இருக்காது. அவர்களுக்கு பேபி சோப்தான் பெஸ்ட். வளர்ந்தவர்களுக்கு சருமத் துவாரங்கள் இருக்கும். அவர்கள் பேபி சோப் உபயோகிப்பது உகந்ததல்ல.

சருமம் ரொம்பவே வறண்டிருந்தால்
, மாயிச்சரைசர் உள்ள சோப் நல்லது. 40 வயதுக்கு மேலானவர்கள் மாயிச்சரைசர் உள்ள சோப் உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கு அதை உபயோகித்தால் சருமத்தில் வட்ட வட்டமாக மச்சம் மாதிரி வரும். சருமத்தின் தன்மை தெரியாமல் மூலிகை கலந்த சோப்புகளையும் உபயோகிக்க வேண்டாம். அத்தகைய சோப்புகள் ஆன்டிசெப்டிக்காக செயல்பட்டாலும், சருமத்தை கருப்பாக்கி விடலாம்.

ஃபேஸ் வாஷ்

சோப்புகளில் ஆரம்ப பி.ஹெச் பேலன்ஸ் அளவே 7.5 அல்லது 8 ஆக இருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் வாசனை அதிகமுள்ள சோப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டாம்.சோப்புக்கு பதில் ஃபேஸ் வாஷ் நல்லது. நமது முகத்தின் பி.ஹெச் பேலன்ஸ் 5.5. ஃபேஸ் வாஷின் பி.ஹெச் பேலன்ஸ் 6. இரண்டும் கிட்டத்தட்ட இணைந்து போவதால் சருமத்துக்கு நல்லது.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

ஊடலில் பிறக்குமே காதல்..

டல் என்பது, உயிரோட்டமுள்ள ஒரு பொய்க்கோபம். ஆனாலும் தம்பதிகளும், காதலர்களும் ஊடல் என்பதை எதுவரை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு வரையறை உள்ளது.

சட்டென்று மாறக்கூடிய ஒன்றாகவும், கோபத்தை தொடர்ந்து செயலில் காட்டாத ஒன்றாகவும் ஊடல் இருத்தல் அவசியம் என்கிறது இலக்கியம். ஒரு குழந்தையின் கோபம் போன்று மிகவும் மென்மையாக இருக்கவேண்டும். அதுவே ஊடலுக்கு அழகைத் தரும்.

மணவாழ்க்கையைப் பொறுத்தவரை சிறு சிறு கோபங்கள் மற்றவர் மனதை புரிந்து கொள்ள உதவும். ஆழ்மனதில் தோன்றும் அன்பு உரிமையாக மாறி, அந்த உரிமை தவிர்க்கப்படும்போது சிறு சிறு கோபங்களாக வெளிப்படும். இந்த கோபத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மனதில் சேர்த்து வைத்துக் கொள்ளக்கூடாது. சேர்த்துவைத்தால் அதுவே வேறுவிதமாக மாறி, கருத்து வேறுபாட்டிற்கு காரணமாகி விடும். தம்பதிகள் மனதில் ஏற்படும் ஊடலை இணக்கமான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வது நல்லது. ஊடல் பிரச்சினைக்குள் மூன்றாவது நபரை இடையில் வர அனுமதிக்கக்கூடாது. அனுமதித்தால் அது அவர்களுக்குள் இருக்கும் காதலை காலியாக்கிவிடும்.

ஊடல் என்பது ஒருவர் மனதை, பிடித்தமான இன்னொருவர் புரிந்து கொள்ள உதவி செய்யும் என்பது உண்மைதான். ஆனால் அந்த ஊடல் வெகுகாலம் நீண்டு விடக்கூடாது. ஊடல் இல்லாமல் மணவாழ்க்கை இல்லை என்பதால் இந்த ஊடல் முக்கியத்துவம் பெறுகிறது.

ஊடல் இல்லாத மண வாழ்க்கை ரசனை குறைந்தது. இயந்திரமயமானது. இதனை யாரும் ரசிக்க முடியாது. காதல் திருமணமானாலும், பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணமானாலும் அங்கே ஊடலுக்கு இடமுண்டு.

ஏன் இதைப்பற்றி இவ்வளவு தூரம் பேச வேண்டும்? ஏதாவது ஒரு தருணத்தில் வாழ்க்கையில் சிக்கல் தலைதூக்கும்போது இந்த ஊடல் நினைவுக்கு வந்து அவர்களிடையே அன்பை பலப்படுத்தும். வாழ்க்கையில் ஒன்றாக இருந்த இன்ப நாட்களை நினைவுபடுத்தி மீதமுள்ள நாட்களை மகிழ்ச்சியாக்க உதவும்.

"தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமையா? உடனே விவாகரத்து'' என்ற அவசரத்தில் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அவர் களுக்குள் ஊடலும், கூடலும் இல்லாமல் இருப்பதுதான். விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மையையும், விளக்கம் அளிக்கும் பொறுமையையும், அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் தன்மையையும் ஊடல் உருவாக்கும்.

வயதான தம்பதிகளுக்கு இடையில் ஏற்படும் ஊடல் அவர்களுடைய அன்பை பலப்படுத்த உதவும். குளிருக்கு கதகதப்பான நெருப்பைப் போன்றது ஊடல் என்று பெர்சியன் கவிஞர் கூறுகிறார். அந்த நெருப்பை வளரவிட்டு வேடிக்கை பார்க்கக்கூடாது. ஊடலும் அப்படித்தான். அதன் எல்லைக் கோட்டுக்குள் நிறுத்திவிட வேண்டும். இந்தப் பொறுப்பு தம்பதிகள் இருவருக்கும் இருக்கிறது. அதை வளரவிட்டு வன்மத்தை வளர்த்துக் கொள்ளக்கூடாது. ஊடல் என்ற தென்றல் திசை மாறி சூறாவளியாகிவிடாமல் பார்த்துக்கொள்வது தம்பதிகளின் தலையாய பொறுப்பு.

குடும்பத்தில் மட்டுமல்ல, அலுவலகம், பொது இடங்களிலும் சின்னச்சின்ன கோபம் தவிர்க்க முடியாதவை. அதை மென்மையாக வெளிப்படுத்தும்போது பெரும்பாலும் சரி செய்யப்பட்டு விடும்.

வெளிப்படையாக பேசுவதாக நினைத்துக் கொண்டு ஒருவரைப் பற்றி மற்றவர் வேண்டாத விஷயங்களை வெளியே சொல்லும்போதுதான் சிக்கலை வலிய வரவழைத்துக் கொண்டவர்களாகிறோம். இதிலும் சிலர் உங்களிடம் வாய் வார்த்தையாக எதையாவது பிடுங்க முயற்சிப்பார்கள். அவர்கள் தந்திரமாக உங்களிடம் பேசி மற்றவரைப்பற்றி அறிய முற்படும்போது, கூடுமானவரை அதை தவிர்ப்பது நல்லது.

உங்களுடைய விளையாட்டுத்தனமான கோபத்தை விபரீதமாக மாற்றக்கூடிய சக்தி உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு இருக்கிறது. அது நாளடைவில் வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தி முடிவில் உங்களுக்கே சிக்கலை உண்டு பண்ணிவிடும். உங்களுடைய மகிழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம். கோப தாபங்களை யாரிடமும் சொல்லி விடக்கூடாது. அது ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கோணத்தில் புறப்பட்டு கடைசியில் விபரீத அர்த்தம் கொள்ளப்பட்டு உங்களையே பதம் பார்த்து விடும்.

***

வயதான தம்பதிகளுக்கு இடையே கூட ஊடல் ஏற்படும். அது அவர்களுடைய வாழ்க்கையின் அன்பையும், உரிமையையும் கூட்டுகிறது. தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் லேசாக கோபம் கொள்வது, விளையாட்டு ஊடல். ஏதோ உள்அர்த்தம் இருப்பதாக நினைத்துக்கொண்டு கோபிப்பது கற்பனை ஊடல். மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கவும் இந்த ஊடல் பயன்படுகிறது. இதற்கு சிலர் தவறான அர்த்தங்களை கற்பிக்க முயற்சி செய்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.