Followers

திருக்குறள்

Monday, November 29, 2010

பொய்யே சொல்லியிருக்கலாம்

அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும்
உன் பழைய காதல் கடிதமொன்று
தன்னை அழித்துக்கொள்ள

உயிரில்லாமல் தவிக்கிறது.

*

காதலித்து கைவிட்டதற்குப் பதிலாக
காதலிக்கவில்லையென நீ
பொய்யே சொல்லியிருக்கலாம்

*

நீ சொன்னபடியே
உன்னை மறந்துவிடுகிறேன்.
என்னுடன் கலந்துவிடு.

*

என்னை இதயத்தில் சுமந்தாய்.
உன்னை உயிரில் வைத்தேன்.
இதய மாற்று சிகிச்சை எளிது.
உயிர் மாற்று சிகிச்சை?

*

செல்லரித்துப் போன
உனது பழையப் படமொன்று
என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

மண்ணாகவே இருந்திருக்கலாம்!

நம் சந்திப்புகள்
இரவில் வேண்டாமென

நிந்திக்கின்றன…
நம் நிழல்கள்!

*

கதை சொல்கிறேனென சொல்லி
நீ சொல்வதெல்லாம் கதை.
செய்வதெல்லாமோ கவிதை!

*

முகம் துடைத்த
கைக்குட்டையைத் துவைக்காதே.
அழுக்கு படிந்ததைத் துவைக்கலாம்…
அழகு படிந்ததை?

*
பிடித்துவிட

எத்தனிக்கையில்
மறைந்து விடுகிறது

வானவில்.
கூடவே என் வானமும்.
*

என் காதல் கேள்விகளுக்கு

நீயே விடை என்றிருந்தேன்.
நீயோ கேள்விகள் எதுவுமின்றி

என்னிடமிருந்து,
'விடைபெற்றாய்'!

*

களிமண்ணை சிற்பம் ஆக்கினாய்.
பிறகு ஏனோ உடைத்துப் பார்த்தாய்.
மண்ணாகவே இருந்திருக்கலாம்!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, November 25, 2010

இதழ் வரி.....

உதடுகள்
கொடுத்துக்கொண்டே

இருக்க
சோர்ந்து போகிறது
முத்தம்....

*

நீயிறங்கி

குளிக்கும்போது,
நீர்த்தொட்டி – பூந்தொட்டி.
முடிக்கும்போது

தேன்தொட்டி

*

பாறையில் முளைத்தது

பூஞ்செடி.
மொட்டை மாடியில் நீ!
நம் சந்திப்பின் முற்றுப்புள்ளி,
நீ வைக்கும் முத்தப்புள்ளி!

*

நீ
ஓவியமாக்க

வேண்டிய கவிதையா?
கவிதையாக்க

வேண்டிய ஓவியமா?

*

வதைத்தே கொல்லும்
தேவதை நீ!

*

உனக்குள் இருக்கும்

எனக்குள்
நீ எப்போது நுழைந்தாய்?

*
என் இரவு.
நீ கனவு.
என் பகல்.
நீ நினைவு.

*

எங்கு முத்தம்

வாங்கினாலும்,
இதழ்வரிகளில்

செலுத்த வேண்டும்…
இதழ் வரி.

*

உன் பார்வை,
கண்காட்சியா?
மலர்க்காட்சியா?

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

அடர்ந்து கிடந்தது காதல்!


 

என் எழுத்தில்
அடங்க மறுக்கும்
திமிரான கவிதை நீ!

*

என் காதலுக்கு
சிறப்பென்று சொல்லிக்கொள்ள
எதுவுமேயில்லை.
அது வெகு இயல்பானது,
என் சுவாசத்தைப் போல!

*

நீ பேசிய மொழியனைத்தும்
காதலின் தேசியமொழிதான்.

*

நீண்ட பிரிவுக்குத் தயாராகும்போது
உன் விழி திரட்டிய நீர்ச்சொட்டில்
அடர்ந்து கிடந்தது காதல்!

*

நாம் நடந்த பாதையில்
நான் மட்டும் நடக்கையில்
பிஞ்சுக்காற்று தோள்தொட
உன் விரலென்று திரும்பி
ஏமாந்திருக்கிறேன்!

*


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நேசிக்க…நீ மட்டும்தான்!


 

"எனக்கு உன்னைப்போல

கவிதையெழுதத் தெரியாது' என்கிறாய்.

எனக்கும்தான்

உன்னைப்போல

கவிதை பேசத் தெரியாது!

 

*

 

கல்லூரியில் கூட

யாரையும் பார்த்து

தேர்வெழுதியதில்லை...

காதலில் மட்டும்

உன்னைப் பார்த்துதான்

கவிதையெழுதுகிறேன்....

 

*

 

கவிதையெழுதுவதில்

என் விரல்களை

வென்றுவிடுகின்றன

உன் இதழ்கள்!

 

*

 

நீ கையொப்பமிட்டு தரும்

எந்தப் புத்தகமும்

கவிதைப் புத்தகம்தான்!

 

*

 

இப்படி வாசிக்க…

ஆயிரம் கவிதைகள் இருக்கின்றன.

நேசிக்க…நீ மட்டும்தான்!

 
 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, November 24, 2010

அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்? இதோ உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்!

* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. அதனால்தான் ஆள் பாதி ஆடைபாதி என்றார்கள். மாடர்ன் ஆக உடுத்தினாலும்கூட, நேர்த்தியாக உடுத்துங்கள்.

* முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சினைகள்.

* சொந்த குடும்ப விஷயங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள். அட்வான்டேஜ் எடுக்க முன் வருவார்கள்!

* உடன் வேலை செய்தாலும் பர்சனல் செல் நம்பர்களை யாருக்கும் தராதீர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர.

* சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சினைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.

* உயர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் பழிவாங்கும் படலம் உங்கள் வேலைகளில் குறை கண்டுபிடிப்பதில் ஆரம்பிக்கும். அதனால் முடிந்தவரை வேலைகளில் தவறு செய்யாதீர்கள்.

* ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல. அதற்காக எல்லாவற்றுக்கும் கைகொடுப்பது, தொட்டுப் பேசுவது கூடாது.

* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.

* அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல். இவையெல்லாம் நம் அக்கம்பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

* ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மனமெச்சூரிட்டி போன்றவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். ஆனால் பொதுவான ஆண்கள் சமூகம் என்பது பெண்ணை வித்தியாசமான அங்க அவயங்கள் கொண்ட சதைப் பிண்டம் என்றே நினைக்கிறது. ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்கிறானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

* ஆபிஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* ஜல் ஜல் என்று அதிக மணியோசைக் கொண்ட கொலுசைத் தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே.

* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது "நன்றி" என்று ஸ்ட்ரெய்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிருங்கள்.

* யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள். அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.

* அரட்டையில், ஜோக்ஸ் என்ற பேரில் விரச பேச்சுகளை அனுமதிக்காதீர்கள்.

* எந்த ஆணாவது உங்களிடம் தவறாக நடந்து கொண்டால், முதலில் நீங்களே இரண்டொரு முறை எடுத்துச் சொல்லி கண்டித்துப் பாருங்கள். அப்படியும் தொடர்ந்தால் உங்கள் மேலதிகாரியிடம் புகார் செய்யுங்கள்.

* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.

* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.

* விழா, விசேஷம் தவிர உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் செல்லாதீர்கள்.

* ஆண்கள், தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* பெண்களுக்கு தங்கள் விஷயங்களை பகிர்ந்துகொள்ள நட்பு ரீதியிலான பழக்கம் ஆணிடமோ, பெண்ணிடமோ ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் அது அவளது சுயகௌரவத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும். அதுவே பாதிப்புகளை ஏற்படுத்தாது. அதுவே நிலைக்கும்!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷாக இருக்கும்?

How many days will the food items remain fresh in fridge? - Child Care Tips and Informations in Tamil

பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதாமாக கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப் பெட்டியான "பிரிட்ஜ்" என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வாரத்திற்கு ஒரு முறை, கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது. பிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது, அவசியம். இதனால், உணவுப் பொருட்கள், நீண்ட காலம் பிரஷ்ஷாக பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும்.ஒவ்வொரு உணவுப் பொருளும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்த தகவல் இதோ,

பழங்கள்:

திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்
ஆப்பிள்கள் ஒரு மாதம்
சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்
அன்னாசி (முழுசாக) 1 வாரம்
(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்

காய்கறிகள்:

புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்
முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள்
வெள்ளரிக்காய் ஒரு வாரம்
தக்காளி 1-2 நாட்கள்
காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்
காளான் 1-2 நாட்கள்

அசைவ உணவுகள்:

வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்
சமைத்த மீன் 3-4 நாட்கள்
பிரஷ் மீன் 1-2 நாட்கள்
ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள்
பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள்
உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம்
பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள்
சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள்

பால் பொருட்கள்:

பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம்
பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள்
மோர் 2 வாரங்கள்
தயிர் 7-10 நாட்கள்

காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம். இதனால், பணம் வீணாவதும் தவிர்க்கப்படும்.

 
 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

செல்போன் பேசும்போது…


 கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மனிதனுக்கு உடை எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு செல்போனும் அத்தியாவசியமாகிவிட்டது.

சிலர் செல்போன் இல்லையென்றால் தூங்க மாட்டார்கள். எதையோ இழந்தது போல் தவிப்பார்கள்.  முன்பு அவசர தேவைகளுக்கு மட்டும் பேசக் கண்டறிந்த செல்போன் இன்று ஸ்டைலாகவும், அடிமைப்படுத்தும்  அளவிற்கும் மாறிவிட்டது.

உலக மக்கள் தொகையில் 80 சதவிகிதம் பேர் செல்போன் பயன்படுத்துகிறார்கள்.  இந்த ஆண்டு 5 மில்லியன் மக்கள் அகண்ட அலைவரிசை (Broad band)  யின் மூலம் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் வளர்ச்சி  ஒருபுறம் விரிந்து கொண்டே போவது நல்ல செய்திதான்.  உலகத்தை உள்ளங் கைகளுக்குள்  கொண்டு வந்தது இந்த செல்போன்கள் தான்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் செயல் உண்டு என்ற நியூட்டனின் விதிக்கு ஏற்றார்போல், இங்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் செல்போன், பல தீய செயல்களுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப, அளவுக்கு அதிகமாக செல்போன் பேசுவதும், அதைப் பயன்படுத்தும் முறைகளாலும் மனித உடலுக்கு பலவகைகளில் பாதிப்பு உண்டாகும் என்று இன்றைய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

செல்போனில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிரியக்கம்  (Electro Magnetic radiation (EMR)) உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அந்த மருத்துவ விஞ்ஞானிகளின் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.

2 நிமிடம்….

செல்போன் 2 நிமிடம் பேசினால் அதனால் உண்டான மின் காந்த அதிர்வு மூளைக்குச் சென்று அரைமணி நேரம் வரை தங்கியிருந்து அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்கின்றனர்.  மேலும் செல்போனால் உண்டாகும் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள பல ஆலோசனைகளையும் தெரிவிக்கின்றனர்.

செல்போன் பேசும்போது…

செல்போனை தலையிலிருந்து 2 முதல் 7 அங்குலம் வரை தள்ளி வைத்துக்கொள்ள வேண்டும்.  முடிந்தவரை பெரிய ஒலிப்பானை பயன்படுத்தி (loud speaker)  பேசுவது நல்லது. இதனால் மின்காந்த கதிரியக்கத்தின் பாதிப்பு மூளைக்குச் செல்வதை தடுக்கலாம்.

தூங்கும்போது…

நாம் தூங்கும்போது செல்போனை எங்கு வைக்கிறோம்.  தலையணைக்கு அடியிலா அல்லது தலைமாட்டிலா.. செல்போனில் இருந்து வெளிப்படும் மின்னதிர்வுகளின் தூரம் குறைவதால் நம் மூளையை தாக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதனால், தூங்கும்போது, தலைமாட்டில் செல்போனை வைத்து தூங்குவதை தவிருங்கள். அல்லது அணைத்துவிடுங்கள், அல்லது 6 மீட்டர் தூரம் தள்ளி வையுங்கள்.

சட்டைப்பையில்…

//

செல்போனை சட்டைப்பையில் வைக்கும் போது, அது இதயத்தின் மிக அருகில் இருக்கிறது.  நம்முடைய இதய இயக்கம் மின்காந்த அதிர்வுகளால் மாற்றம் அடையக்கூடியது.  எனவே, செல்போன் ஒலிக்கும்போது, அதிலிருந்து வரும் மின்காந்த அதிர்வுகள் நேரடியாக இதயத்தை பாதிக்கிறது.

கீ பேட் வெளிப்பக்கம் இருக்கும்படி வைக்க வேண்டும். அல்லது அணைத்துவிட்டு சட்டைப் பையில் வைக்க வேண்டும். இதயத்துடிப்பு குறைபாடு உள்ளவர்கள் சட்டைப்பையில் வைப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

கால்சட்டை பையில்…

அதுபோல் கால்சட்டைப் பையில் வைத்தால் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவும், பெண்களுக்கு மலட்டுத்தன்மையும் ஏற்படும்.

கருவுற்ற பெண்கள்…

கருவுற்ற பெண்கள் செல்போன் உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.  செல்போனிலிருந்து வெளிவரும் மின்காந்த கதிரியக்கம் கருவில் உள்ள குழந்தையை பெருமளவில் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால்    காதுகேளாமை, வாய் பேச முடியாமல் போவது, உடல் வளர்ச்சி  மனவளர்ச்சி குன்றுதல் போன்ற  பாதிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பயணங்களின் போது…

விமானம், இரயில், பேருந்து பயணங்கள் மற்றும், பெட்ரோல் பாங்கு இருக்கும் இடங்களில் செல்போன் உபயோகிப்பதைக் குறைக்க வேண்டும்.  ஏனெனில் மெட்டல் அதிகம் உள்ள பகுதிகளில் மின்காந்த கதிரியக்க சக்தி அதிகமாகும்.

செல்போனில் பேசுவதற்கு ஹெட்போனை உபயோகிக்கும்போது,  மின்காந்த கதிரியக்கம், நேரடியாக காதுகளையும் மூளையையும் தாக்குகிறது.

குழந்தைகள் மற்றும்சிறுவர்கள்…

15  வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் செல்போன் அதிகம் பயன்படுத்தினால், மூளையில் கட்டி ஏற்படும் அபாயம் உள்ளது. இது மரணத்திலும் கொண்டு போய் விடலாம்.

இளங் குழந்தைகளுக்கு அருகில் செல்போன் பேசுவதோ, வைப்பதோ கூடாது. இதிலிருந்து வெளிப்படும் மின்காந்த கதிரியக்கம் குழந்தைகளின் மென்மையான தசைக்குள் எளிதில் ஊடுருவி உட்சென்று பாதிப்பை ஏற்படுத்தும்.  புற்று நோய் ஏற்படும்  வாய்ப்பும் உள்ளது.

மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க செல்போன் அதிகம் பயன்படுத்துவதை தவிருங்கள்.

பொழுதுபோக்கிற்காக பேசுவதைத் தவிர்த்து தேவைக்கு மட்டும் பேசுங்கள்.  பாதிப்பும் இல்லை.  பணவிரயமும் இல்லை.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

முதுமையில் கூன் விழுவது ஏன்?


 

நாம் ஒவ்வொருவருமே முதுமை என்ற ஒன்றை நோக்கி அன்றாடம் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம்.  முதுமை வந்துவிட்டால் அதில் கூன் விழுதல் நிகழ்வு இயல்பான ஒன்று.  முதுமையில் கூன் விழுதலுக்கு பல காரணங்கள் உள்ளது.  அவற்றில் மிக முக்கியமான ஒன்று முதுகெலும்பு பழுது பாட்டால் (Degeneration of vertebrae)  வருவதாகும்.

முதுகெலும்பு பழுதுபாடு

முதலில் கழுத்துப் பகுதியில் உள்ள முதுகெலும்புகள் (வம்சிகள்) பழுதுபடக் காரணம் தலையில் அதிக பளு தூக்குவது.  மேலும் கவிழ்ந்த நிலையில் நீண்ட நேரம் வேலை செய்வது போன்ற காரணங்களால் கழுத்து வம்சிகள் குறிப்பாக 6வது மற்றும் 7வது (C6,C7) (Cervical vertebrae)  வம்சிகள் பாதிக்கப்பட்டு, சில சமயம் முதுகு எலும்பு தேய்மானம் ஏற்பட்டு அதன் விளைவாக கழுத்து முன்னுக்குத் தள்ளப்பட்டு அதன் இயல்பான ( normal posture) நிலையிலிருந்து மாறி கூன் விழுந்தது போன்ற தோற்றத்தைத் தருகிறது.

இதேபோல் வயது முதிர்ந்த காலத்தில் இடுப்புப் பகுதியில் உள்ள வம்சிகளில் (Lumbar vertebrae) வரும் பழுது மற்றும் தேய்மானம் வழக்கமானது.

குறிப்பாக 4,5 வது இடுப்பு வம்சிகளில் ஏற்படும் பாதிப்பு மிகவும் சாதாரணமான ஒன்று.

பழுதுபாடுகளுக்கான பொதுவான காரணங்கள்


· அதிகப்படியான பளு தூக்குதல்


· இயந்திரங்களில் அதிக நேரம் பணியாற்றுதல்

· அதிகமாக இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை உபயோகித்தல்.

· பொருத்தமில்லாத இருக்கைகளில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தல்

· புகைப்பழக்கம்

· மது, போதைப் பழக்கம்

· மன உளைச்சலுடன் நீண்ட நேரம் பணியாற்றுதல்.

· மிகுந்த கோபம், தாழ்வு மனப்பான்மை

· விபத்தால் முதுகுப் பகுதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருத்தல்.

வம்சிகளின் இடைத்தட்டு பிறழ்ச்சி

பொதுவாக இடுப்பு வம்சிகளில் ஒரு வம்சிக்கும் மற்றொரு வம்சிக்கும் இடையில் இருக்கும், வம்சி இடைத்தட்டானது அடிபடும் போதும், அல்லது மேற்சொன்ன பல காரணங்களினாலும், தான் இருக்கும் இயல்பான இடத்திலிருந்து  விலகி விடுகிறது.

இதனால் மேலும் கீழும் இருக்கும் வம்சிகள் நேரடியாக ஒன்றுடன் ஒன்று உராய்வதால், அது நாளடைவில்  எலும்புத் (Erosion) தேய்மானம் ஏற்பட்டு முதுகெலும்பு அமைப்பு இயல்பான நிலையிலிருந்து (Posture))  விலகி சற்று முன்னோக்கி சாய்ந்து கூன் போன்ற தோற்றத்தைத் தருகிறது.

எலும்புகளின் துணை வளர்ச்சி

சில நேரம் இந்த வம்சிகளுக்கு அருகில் ஒரு சிறு எலும்புத்துண்டு வளர்ந்து (Osteophytes)  அது நாளடைவில் வம்சித் துளை (Inter vertebral foraman) யை சூழ்ந்து வளர்ச்சி அடைவதால் அப்பகுதியில் உள்ள நரம்புகள் அழுத்தப்பட்டு, மிகுந்த வலியை உண்டாக்குகிறது.

காச நோயினால் கூன் விழுதல்

50 விழுக்காடு, காச நோயின் காரணமாக முதுகெலும்பு பாதிக்கப்பட்டு அவை பழுதாகி அதன் இயல்பான நிலை மாறி கூன் விழுவதற்கு காரணமாகிறது.

சத்துப் பற்றாக்குறை

வயதான காலங்களில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து போதிய அளவு கிடைக்காமல் போவதால் எலும்புகள் வன்மை குன்றி, மெலிவுற்று (Osteoporosis)  அதனாலும் கூன் விழுவதற்கு காரணமாகிறது.

கூன் விழுவதை தடுக்கும் வழிகள்

கவிழ்ந்த நிலையில் செய்யும் வேலைகளைத் தவிர்க்கலாம்.

சற்று மல்லாந்து படுத்து ஓய்வு எடுக்கலாம்.

வயது முதிர்ந்த காலத்தில் வாதத்தை மிகுதிப்படுத்தும் உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றையும், வாதம்உண்டாக்கும் பருப்பு வகைகளையும் தவிர்க்கலாம்.

அடிக்கடி வெந்நீர் ஒற்றடமிடுதல் நல்லது.

பத்மாசனம், சித்தாசனம், சக்கராசனம், தனுராசனம் போன்ற முதுகெலும்புக்கு வன்மை உண்டாக்கும் ஆசனங்களை மேற்கொள்வது மிகவும் நல்லது.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

மனித உடலைப் பற்றி

 

கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான். 



  • இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் சுருங்கி விரியும்.



  • இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்க பாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை. எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும்.



  • இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.



  • நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சி அணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாக நினைவுகளை வரிசைப்படுத்திச் சேமித்து வைத்து விடுகிறது. 



  • நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும் உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படுகிறது. நான்கு நிமிட நேரம் இவை கிடைக்காமல் போனால், மூளை தனது சக்தியை இழந்து விட்கின்றது.



  • ஆண்களை விட பெண்களுக்குத்தான் புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால் எழுதுபவர்களுக்கு, வலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம்.



  • இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள் ஒரு மூளையின் வேலையைச் செய்ய வேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும்.



  • மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.



  • மனிதனின் மூளை 100 மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில் வைத்திருக்க முடியும்.



  • நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போது ஒருவித இரசாயணக் கிரியை நடத்துகின்றன. இதனால் "டிரான்ஸ்ரெடினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதேபோல் இருட்டினைப் பார்க்கும்போது "ரெடாப்சினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது.



  • உடலில் சராசரியாக 10,000,000,000,000,000,000,000,000,000 அணுக்கள் உள்ளன. அணுக்களின் வளர்ச்சியில்தான் உடலின் வளர்ச்சியே இருக்கிறது. 



  • நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கிறது. இது அவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும்.



  • உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள்தான் வேண்டிய இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன. இதில் இன்னொரு வகையான வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 1,000,000 புதிய சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன.



  • இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு வெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3, 700 முறைகள் இரத்தம் இப்படி வருகின்றது.



  • மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந்து 1,00,000 மைல்கள் வரை பயணம் செய்கிறது.



  • பிறக்கும்போது எலும்புகள் 270 இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.



  • மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடையதாகும். அது சுமார் 36,000 பவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது.



  • தசைகள் 639 தசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்று கூறுகின்றனர்.



  • நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள் வேலை செய்ய வேண்டியிருக்கும்.



  • உடல் நடுங்கும் போது உடலில் ஐந்து மடங்கு உஷ்ணம் பிறக்கிறது.



  • நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறுநீரை வெளியேற்றுகின்றான்.



  • நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால், சராசரியாக 8 அடி வரை வளரும்.



  • மனிதன் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் ஒரு மணிக்கு 36 கிலோ மீட்டருக்கு மேல் ஓட இயலாது.



  • பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை சுவாசிக்கிறது. 16 வயதில் ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கிறான்.


  • மறுமொழிப்பெட்டி:
    தமிழிலும் மறுமொழியிடலாம்
    Loading...

    மகளிர் பக்கம்....

     
    தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்

    எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.

    ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம்
    செய்யும்போது எளிதாக செய்யலாம்

    கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்

    மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும்
    வராது விரிசலும் விடாது

    தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்
    தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்

    பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.

    வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.

    அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்

    இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும்

    கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.

    அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்

    பழைய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது

    மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்

    சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது

    பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.

    உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.

    ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.

    துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்

    நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்

    தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்

    ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்

    நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்

    மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.

    பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது

    நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள்.நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.

    தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.

    மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.

    பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.

    மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.

    நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.

    குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.

    நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்

    தினமும் சிறிது துளசி இலைகளை
    மென்று தின்றால் சுவாசப்பகுதி
    நோய்கள் வராது.

    எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.


    மறுமொழிப்பெட்டி:
    தமிழிலும் மறுமொழியிடலாம்
    Loading...

    Monday, November 22, 2010

    வகுப்பறை மேசை

    வருடக்கணக்காய்
    பேசிய பேச்சுகளை
    எல்லாம்
    கூடவே
    அழைத்து வருகிறது
    என்றேனும் வரும்
    ஒற்றை
    குறுந்தகவல்

    பல
    இதயங்களின்
    கவிதைகளை
    சுமந்திருக்கும்
    கவிதைப் புத்தகம்
    வகுப்பறை மேசை

    வேவ்வேறு திசைகளில்
    இதழ்களாய்
    விரிந்தாலும்
    இணைந்தே இருக்கின்றோம்
    நட்பு என்னும்
    ஒற்றைக் காம்பில்

    இன்னும்
    உலராமலேயே
    இருக்கிறது
    கடைசியாய்
    நீ
    உயிர்தொட்டு எழுதிய
    நினைவேடு

    கல்லூரி
    கடைசி நாள்
    பறவைகளின் கூட்டில்
    சலசலப்பு


    இப்பொழுதும்
    கல்லூரிப்
    பேருந்தைப்
    பார்க்கும் போதெல்லாம்
    தேடத் தொடங்கிவிடுகின்றன
    தோள்கள்
    தலை சாய்த்து
    உறங்கிய
    தோழியை

    பெற்றோர்
    இட்ட பெயரும்
    அந்நியமாய்த்
    தெரிகிறது
    தோழிகள்
    சூட்டிய
    செல்லப் பெயரில்

    மறுமொழிப்பெட்டி:
    தமிழிலும் மறுமொழியிடலாம்
    Loading...

    முத்த மழையில்

    உன்
    முத்தங்களின்
    ஈரங்களும்
    அழகாய்
    வரைகிறது
    நம் காதலை

    எனக்காக‌
    கவிதை
    எழுதிக்கொடு
    என்று கேட்டதும்
    அழகிய
    கவிதைகளை
    எழுதி விட்டு
    சென்றன‌
    உன் உதடுகள்

    கடற்கரையில்
    நம்மை
    பார்த்ததும்
    ஆசையாய்
    பாதங்களை
    ந‌னைக்க வந்த‌
    அலைகளையும்
    வெட்கம் கொள்ள செய்தன
    நம் இதழ்கள்!


    தொடக்கமும்
    முடிவும்
    அறியா
    நெடுந்தூரப் பயணம்
    காதல்


    தூக்கத்தில்
    நான் எப்போதும்
    சிரித்துக் கொண்டிருப்பதாக‌
    தோழிகள்
    கேலி செய்கிறார்கள்
    அவர்களுக்கு
    எங்கேத் தெரியும்
    நான் உன்னோடுதான்
    சிரித்துக் கொண்டிருக்கிறேன்
    என்பது

    எத்தனை
    முறை
    சுவைத்தாலும்
    திகட்டாத‌
    தித்திப்பு
    உன்
    முத்தங்கள்


    கோடையில்
    எல்லோரும்
    வாடிக் கொண்டிருக்க‌
    நான்
    ம‌ட்டும்
    குளிர்ந்துக் கொண்டிருந்தேன்
    உன்
    முத்த மழையில்

    தனித் தனித்
    செடிகளாய்
    வளர்நத‌
    நம்மில்
    ஒற்றை
    மலராய்
    காதல்


    நம்
    விழிகள்
    எழுதிய‌
    முதல்
    கவிதை
    காதல்


    உன்
    கெஞ்சல்களில்
    தோற்று விடுகின்ற‌‌ன‌
    என்
    கொஞ்சல்கள்

    மறுமொழிப்பெட்டி:
    தமிழிலும் மறுமொழியிடலாம்
    Loading...

    நாளைய குறும்புகள்

    உன் குறும்புகளை
    என்னிடம்
    கொடுத்துவிட்டு
    என் வெட்கங்களை
    அள்ளிச் செல்கிறாய்
    இதை வைத்து
    என்னடா
    பண்ண‌ப்போறன்னு
    கேட்டா
    இவற்றை வைத்துதான்
    என்
    நாளைய குறும்புகள்
    என்று
    சிரித்து விட்டு
    போகிறாய்!!!



    உனக்கான
    என் வெட்கங்களும்
    என‌க்கான‌
    உன் குறும்புகளையுகம்
    கொண்டு வ‌ள‌ர்கிற‌து
    ந‌ம‌க்கான‌ காத‌ல்!!!



    கூட்டினாலும்
    பெருக்கினாலும்
    ஒரே விடை
    கிடைப்ப‌து க‌ணித‌த்தில்
    ம‌ட்டும் அல்ல‌
    காத‌லிலும்தான்
    குறும்புக‌ளையும்
    வெட்க‌ங்க‌ளையும்
    கூட்டினாலும்
    பெருக்கினாலும்
    கிடைக்கும்
    ஓரே விடை
    காத‌ல்!!!




    நான்
    உனக்காகவே
    உன்னிடம் ம‌ட்டுமே
    செல‌வு செய்வ‌து;
    என்
    வெட்க‌ங்க‌ளை!



    உன்
    குறும்புகளும்
    தொடரும்
    எனது
    வெட்கங்களும்
    கொணர்கின்றன
    நமக்கான
    காதல்
    மழையை!



    மறுமொழிப்பெட்டி:
    தமிழிலும் மறுமொழியிடலாம்
    Loading...

    மைப்போட்டு பார்க்கலாம்

     
     

    நின்
    அருகாமையில் வேகமாகவும்
    தூரத்தில் மெதுவாகவும்
    சுழல்வதுமாய் உலகம்;
    உன்னால்
    பைத்தியமாகிவிட்டது அதுவும்!

    *

    உன்னில் பாதியாய்
    என்னில் மீதியாய்
    நம்மில்
    முழுதும் காதல்!

    *

    காதலிப்பதற்கு
    நீ இருக்கிறாய்
    என்ற காரணமே
    போதுமாயிருக்கிறது
    நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

    *

    வெகுநாட்கள் கழித்து
    சந்திக்கும் கணத்தில்
    நம் விழி பொங்கும் கண்ணீரில்
    கப்பல்விடக் காத்திருக்கிறது
    காதல்!

    *

    உன்
    கண்மையைக் கொடு;
    மைப்போட்டு பார்க்கலாம்
    உன்னில் தொலைந்த
    என்னிதயத்தை!


    மறுமொழிப்பெட்டி:
    தமிழிலும் மறுமொழியிடலாம்
    Loading...

    மைப்போட்டு பார்க்கலாம்

     

    நின்
    அருகாமையில் வேகமாகவும்
    தூரத்தில் மெதுவாகவும்
    சுழல்வதுமாய் உலகம்;
    உன்னால்
    பைத்தியமாகிவிட்டது அதுவும்!

    *

    உன்னில் பாதியாய்
    என்னில் மீதியாய்
    நம்மில்
    முழுதும் காதல்!

    *

    காதலிப்பதற்கு
    நீ இருக்கிறாய்
    என்ற காரணமே
    போதுமாயிருக்கிறது
    நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

    *

    வெகுநாட்கள் கழித்து
    சந்திக்கும் கணத்தில்
    நம் விழி பொங்கும் கண்ணீரில்
    கப்பல்விடக் காத்திருக்கிறது
    காதல்!

    *

    உன்
    கண்மையைக் கொடு;
    மைப்போட்டு பார்க்கலாம்
    உன்னில் தொலைந்த
    என்னிதயத்தை!


    மறுமொழிப்பெட்டி:
    தமிழிலும் மறுமொழியிடலாம்
    Loading...

    Saturday, November 20, 2010

    என்ன செய்வேன்???????

     
     
    தேவதை தேவை இல்லை
    தெளிந்த உன் அழகு போதும்......

    விரகமே தேவை இல்லை
    உன் விழியும் என் விழியும் போதும்......

    இரவினில் தந்த முத்தம்
    பகலுக்கு மிச்சம் வைப்பேன்......

    பகலுக்கு மிஞ்சி போனால்
    இரவிலும் பாசம் வைப்பேன் .....

    சந்தேகம் துளியும் இல்லை
    இருந்தும் நான்
    சண்டை செய்வேன்!!!!!!

    இரண்டொரு மணித்துளியில்
    மீண்டும் நான் காதல் செய்வேன்!!!!!!

    காதலி நீ கதவடைத்தால்

    இக் கவிதையை நான்
    என்ன செய்வேன்???????

    மறுமொழிப்பெட்டி:
    தமிழிலும் மறுமொழியிடலாம்
    Loading...

    Tuesday, November 16, 2010

    உண்மைக் காதல்


     

    வகுப்பு பதிவில்
    என் பெயரையும் மறந்து
    அவள் பெயருக்காக காத்திருப்பேன்,
    "எஸ் சர் "
    என்ற குரலுக்காக.


    அவ்வளவு கூச்சலிலும்,
    கடைசி வரிசையில் அமர்ந்திருந்தும்,
    மெல்லியதாய் என் காதுகளுக்கு மட்டும்
    கீர்த்தனையாய் இசைக்கும்
    அவள் கொலுசின் ஓசை


    சில நொடிகள் பேச
    கண்ணாடி முன்
    பல மணி நேர ஒத்திகை


    சொந்தமே இல்லாத ஊரிலும்,
    திருமணம்,விசேஷம் என்று சொல்லி
    பேருந்தில் ஏறினேன்
    அவள் போகும் ஊருக்கு
    சேர்ந்து பயணம் செய்ய..


    நாத்திகத்தை நசுக்கி,
    அர்ச்சனை செய்ய வைத்தது,
    அவள் பிறந்த நாள்


    உனைக் காண்பதைத் தடுக்கும்
    விடுமுறை நாட்கள்,
    எனக்கு வெறுத்தே போயின.


    காதலை ஒப்பிக்க காலம் தாழ்த்த,
    வேறு ஊருக்கு இடம் பெயன்றாள் என்னவள்.
    அவளில்லாத நான்,
    ப்ரோசஸர் இல்லாத கணினியாய்
    சாரமில்லாமல் இருக்க,
    காலச் சக்கரம் மெல்ல சுழல ஆரம்பித்தது.


    திடீரன ஒரு நாள்,
    மறுபடியும் கொலுசொலி,
    இம்முறை கீர்த்தனை அல்ல,
    இது சிம்பொனி!


    வகுப்பில் புதுவரவாக ஒரு முள்ளை!
    அடடா...இவள் தான் நமக்காக பிறந்தவள்
    என மனம் சொல்ல
    தொடங்கியது இரண்டாம் இன்னிங்க்ஸ்!


    இப்படி விடலை பருவத்தில்,
    பள்ளிக் காதல்
    கல்லூரிக் காதல்
    அக்கம் பக்கத்துக் காதல்
    கைப்பேசிக் காதல்
    இணையக் காதல்
    என
    அனைத்தையும் காதலித்ததில்
    அன்பு,
    ஆரவாரம்,
    சந்தோஷம்,
    ஆர்ப்பாட்டம்,
    கனவு,
    கொண்டாட்டம்,
    ஏக்கம்,
    வியப்பு,
    எதிர்பார்ப்பு,
    என சகல உணர்ச்சியும் இருந்தது
    காதலைத் தவிர!

    இறுதியில்
    திருமணம் தான்
    உணரவைத்தது
    காதலை!

    உண்மைக் காதல்
    திருமணத்திற்குப் பின்னே
    உணரப்படுகிறது!

     
     

    மறுமொழிப்பெட்டி:
    தமிழிலும் மறுமொழியிடலாம்
    Loading...

    குழந்தைகளை நமக்கு ஏன் பிடிக்கிறது?



    • அடிச்சா திரும்பி அடிக்காது


    • ஒரு ஊர்ல...அப்படின்னு ஆரம்பிச்சு, எவ்ளோ மொக்கை கதை சொன்னாலும் ஆர்வத்தோட கவனிக்கும்

    • நம்மல எதிர்த்து பேசாது


    • கன்னா பின்னான்னு திட்டினாலும், அழுதுட்டு, உடனே சிரித்தபடியே நம்ம கிட்டயே ஓடி வரும்

    • நம்ம அடிக்கிற கூத்தை எல்லாம் வெளியில சொல்லாது


    • என்ன நிறம்,என்ன உடை,என்ன தகுதின்னு பாக்காம, யாராக இருந்தாலும் ஒரே மாதிரி பழகும்


    • பொய் பேச தெரியாது


    • மனசுல பட்டத அப்படியே சொல்லும், உள்ளே ஒண்ணு வச்சிகிட்டு, வெளியில ஒண்ணு பேச தெரியாது


    • நடந்தா விழுந்துடுவோம்னு தெரிஞ்சும், விடாம முயற்சி செஞ்சிட்டே இருக்கும்


    • நெருப்பு சுடும்னு சொன்னாலும், சொல்றத அப்படியே நம்பாம, ஆராய்ந்து கைய வச்சு பார்த்து தான் நம்பும்


    • தமக்கு இஷ்டப்பட்டதை செய்யும், மத்தவங்க சொல்றத பத்தி கவலைப் படாது


    • அம்மா தான் உலகம்னு நினைச்சு வாழும்

     

     

     

     

     
     

    மறுமொழிப்பெட்டி:
    தமிழிலும் மறுமொழியிடலாம்
    Loading...

    அலுவலக அரசியலை சமாளிப்பது எப்படி?

     

    பொதுவாக எல்லாதரப்பு பணியாளர்களும் அலுவலக அரசியலை சந்திக்க நேரிடும், காரணம் அது ஒவ்வொருவரின் உத்தியோக வளர்ச்சியோடு கலந்திருக்கிறது.

    அலுவலக அரசியலில் இருந்து விலகி ஓடுவது என்பது ஒரு நல்ல விசையமாக இருந்தாலும், அது நம் உத்தியோக வளர்ச்சி பாதையில் இருந்து நம்மை தனித்து நிறுத்தி ஒரு மோசமான முடிவையே கொடுக்கும் என்பதுதான் உண்மை.



    எந்த ஒரு விசையத்தையும் ஆக்கத்துக்கும் பயன் படுத்த முடியும், அதே அளவு அழிவுக்கும் பயன் படுத்த முடியும் என்ற தத்துவத்தின் படி, அலுவலக அரசியலை சரியான முறையில் சந்தித்து, முறையாக தீர்வு காண்பதன் மூலம், அதை நம் உத்தியோக வளர்ச்சிப்பாதைக்கு உரமாக பயன்படுத்த முடியும்.

    அலுவலக அரசியலை கையாளும் உங்கள் தனி திறமையை மற்றும் முறையை பொறுத்து, அது நடைமுறையில் உங்கள் வேலை முறையை உயர்திக்கொள்ளவோ அல்லது கெடுத்துக்கொள்ளவோ வழிவகுக்கும்.

    நடைமுறை அலுவலக வாழ்கையில் மக்கள் வேலை பளுவையும் மன அழுத்தத்தையும் சகஜமாக சந்தித்து இதை அனுபவ படுக்கிறார்கள்.

    இதில் சிலர் அந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் உடைந்து விடுகிறார்கள், அது அவர்களை "வேலை இழப்பு" அல்லது "வேலை பதவியில்" வளர்ச்சி இல்லாத முடிவில் போய் முடிந்து விடுகிறது.

    மற்ற சிலர் இதில் உண்மையாக பாதிக்காவிட்டாலும், அதன் பாதிப்பு இருப்பது போல் பொய்யாக பெரிது படுத்தி காட்டிக்கொள்வதோடு, அவர்கள் செய்வது மட்டுமே சரி என்பது போல் காட்டிக்கொள்வதன் மூலம் இந்த அரசியலை கையாளுவார்கள்.

    இத்தகைய அழுத்தம் ஒரு பக்கம் இருக்க, அலுவலக அரசியல் என்பது நம்மை மறைமுக இம்சைக்கு உட்படும் நிலைக்கு கொண்டு வந்து விடும்.

    அதன் விளைவே சென்ற பதிவில் பார்த்த "பணியிடங்களில் மேலதிகாரிகள் அல்லது உடன் பணியாற்றுவோரால் ஏளனமாகக் கருதப்படுவது அல்லது தரக்குறைவாக நடத்தப்படுவது" போன்றவையாகும்.

    இப்படி இந்த அலுவலக அரசியலை கையாள குறிப்பிட்ட வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

    கடைசியாக பேசுங்கள்: அலுவலக அரசியல் என்பது பொறுத்துக்கொள்ள முடியாத அல்லது மோசமான விளைவுகளை கொடுக்க கூடியாதாக இருக்கும், குறிப்பாக விவாதிக்கும் போது அல்லது சில விவாதங்களின் போது. அதனால் "யாகாவராயினும் நா காக்க" என்பதை எப்போதும் நினைவில் வைத்து வார்த்தைகளை அடக்குங்கள்.

    உண்மையில் இந்த இடத்தில் மிக எளிதாக உணர்ச்சிகளை தூண்டி அடிக்கடி கோவப்பட்டு திரும்ப வார்த்தைகளை விட்டு சண்டையிட தோணும், ஆனால் எவ்வளவு சீக்கிரமாக நீங்கள் வார்த்தைகளை விடுகிறீர்களோ!, அவ்வளவு வேகமாக நீங்கள் இழப்பது உறுதி.



    உங்களுக்கு நீங்கள் செய்வது அல்லது உங்கள் தரப்பில் சொல்வது மிக சரி என்று பட்டாலும், அதுவே உண்மையாக இருந்தாலும் கூட சரி, கண்டிப்பாக நீங்கள் அனைத்து தரப்பில் அல்லது அனைவர் சொல்லவதையும் கவனமாக கவனிப்பதன் மூலம், நீங்கள் சரியான இடத்தில் சரியான வார்த்தைகளை மட்டுமே பயன் படுத்துகிறீகள் என்று உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்.

    தேவை இல்லாத வார்த்தை விவாதங்களை தவிர்த்து, அந்த பிரச்சனையை சரியான முறையில் வடிவமைத்து வரிசைபடுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம், நீங்கள் உங்கள் கூடுதல் திறமையை அல்லது வழிகாட்டி தலைமை தாங்கும் தன்மையை மற்றவர்களுக்கு உணர்த்த முடியும்.

    எப்போதுமே சிந்தித்து திட்டமிட்டு செயல்படுங்கள்: எந்த ஒரு விசையதையும் செயல் படுத்தும் முன், நீங்கள் அதை பற்றி தெளிவாக சிந்தித்து திட்டமிட்டுதான் செயல் படுத்துகிறீர்கள் என்பதை உறுதி படுத்த வேண்டும், இதில் மிக குறிப்பாக கவனிக்க வேண்டியது "எப்போதுமே" என்பது, ஒரு போதும் அல்லது எந்த விசையதையும் சிந்திக்க மற்றும் திட்டமிடாமல் ஒதுக்கி விட கூடாது.


    அலுவலக அரசியல் மூலம் வர நேரிடும் இழப்பை உங்களிடம் இருந்து ஒதுக்கி வைப்பதற்கு மிக முக்கியம். அரசியல் இழப்பை தவிர்க்க நீங்கள் செய்த அத்தனை தற்காப்பு நடவடிக்கைகளின் நிழலிலேயே நடக்கும் பிரச்சனைகளை மற்றும் வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு செல்ல வேண்டும்.

    மிக சவாலான விசையமாக இருந்தாலும் நீங்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டியது, உங்களுடைய எல்லா நடவடிக்கையும் எல்லா நேரங்களிலும் சரியானதாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே.

    இது அலுவலக செல்வாக்குடன் அதிகாரத்தில் இருக்கும் அலுவலக அரசியல்வாதிகளை சமாளிக்க மிக சிறந்த ஒரு வழியாகும்.

    சாதகமாக நடந்து கொள்ளாதீர்கள்: என்னதான் ஒருவர் அல்லது ஒரு அணி செய்வது சரி என்று உங்களுக்கு பட்டாலும், நீங்கள் அவ்வளவு எளிதாக அதற்கு சாதகமாகி, எதிர் அணி செய்வது தவறென்றோ அல்லது அவர்கள் அதை உணர வேண்டும் என்று முறையிடவோ விவாதிக்கவோ வேண்டாம்.

    உங்களை நீங்களே ஒரு நடு நிலமையாக்கி கொள்வது நல்லது, சம்மந்த பட்ட இருவர் அல்லது இரு அணிகள் பேசிக்கொள்ளட்டும் அல்லது விவாதித்து கொள்ளட்டும்.

    எப்போதும் அலுவலக அரசியலை நேரடியாக எவ்வித தயக்கமும் இல்லாமல் சந்திக்க பழகுங்கள், மேலும் அதை சரியான முறையில் பயன் படுத்தி உங்கள் வழிநடத்தும் திறமையை காட்டும் சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளுங்கள், இது உங்கள் அலுவலக வேலையில் அடுத்த நிலைக்கு செல்ல அல்லது வளர்ச்சிக்கு உதவும்.

    மற்றவர் நெருக்கடியை, உணர்ச்சியை புரிந்து கொண்டு தகுந்த சமயத்தில் உதவுபவராக இருங்கள்: அது யாராக அல்லது எந்த துறையை சார்ந்தவராகட்டும், ஒரு வேலையை முடிக்க முடியாமல் அல்லது அதில் பிரச்சனைகளை சந்திக்கும் போது, நீங்களாகவே முன் வந்து உங்களால் முடிந்த வரை உதவுவது என்பது, உங்களுக்கு அல்லது உங்கள் துறைக்கு சம்மந்தமில்லாதவராக இருந்தாலும், உங்களுக்குள் இருக்கும் ஒரு இடைவெளியை உடைத்து நெருக்கமாக இது வழிவகுக்கும்.

    வேலை இடங்களில் நல்ல ஒரு நட்புறவை வளர்க்க இது மிக சிறந்த ஒரு வழிவகுப்பதோடு, உங்கள் உதவிக்கு நன்றியுடன் இருப்பதோடு, அவர் மனதில் நல்ல ஒரு இடத்தை உங்களுக்காக ஒதுக்கும் படி இது உதவும்.

    உதவுவதற்கு எப்போதும் எழுந்து நிற்க நீங்களாகவே தயாராக இருங்கள்: வருட ஊதிய உயர்வு நேரத்தில் ஒருவரை ஒருவர் முன் விட்டு பின் பேசுவது என்பது பொதுவாக நடக்க கூடிய ஒன்று தான் என்றாலும், சில நேரங்களில் உங்கள் உடன் அல்லது கீழ் வேலை பார்பவர்களே உங்களுக்கு எதிராக திசை திரும்பி பல மனிதாபிமானமற்ற வதந்திகளை பரப்பி உங்கள் பெயரை கெடுக்க முயற்சிக்கலாம்.


    அத்தகைய நேரங்களில் நீங்கள் உறுதியாக நிற்பதோடு மட்டுமில்லாமல், இத்தகைய கீழ்தரமான செயல்களால் நீங்கள் ஒதுங்கிவிட போவதில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதே நேரத்தில் உங்கள் பொறுமையை இழக்காமல் அந்த பிரச்சனையை அல்லது அவர்களை நேரடியாக சந்தித்து ஒரு கட்டுக்குள் கொண்டு வர பழகுங்கள்.

    அவர்கள் உங்களால் இம்சைக்கு உட்படுத்த பட்டு இருக்கும் பட்சத்தில், நிலைமையை விளக்கி சொல்லி இறங்கி வர அதாவது மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். ஆனால் இத்தகைய நேரங்களில் உங்கள் மேல் அதிகாரிகளையும் நீங்கள் இந்த பிரச்சனை வலையத்திற்குள் வைத்திருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

    உங்களை நீங்களே பெருமை படுத்தி கர்வம் கொள்ளாதீர்கள்: ஒரு போதும் வளைந்து கொடுக்காமல் எல்லா சூழ்நிலைகளிலும் மிக துல்லியமாக இருப்பது என்பது, உங்களுக்கு நீங்களே மறைமுக எதிரிகளை வளர்த்து கொள்வதாகும்.

    உங்களுக்கு தெரிந்ததை கற்றுக்கொடுங்கள், தெரியாததை கற்றுக்கொள்ள தயங்காதீர்கள்.

    எல்லா இடங்களிலும் நேரங்களிலும் கனிவாக இருக்க பழகுங்கள், உங்கள் கீழ் வேலை பார்ப்பதால், அவர்களை மட்டமாக பார்க்கவோ மறைமுக இம்சை படுத்தவோ வேண்டாம்.

    எதுவுமே நிரந்தரமில்லாத இந்த உலகில், ஒரு நாள் உங்கள் கீழ் வேலை பார்த்தவர் கூட உங்களுக்கு அதிகாரியாக வரக்கூடும் இல்லையா?

    அதனால் எப்போதும் மற்றவர்களை சமமாக அல்லது உங்களை விட சிறந்தவராக நினைப்பதே சாலச்சிறந்தது.

    நேரத்தை கையாளும் கலையில் சிறப்பாய் செயல்படுங்கள்: எவ்வளவு சரியாக செய்கிறோம் என்பதை விட, அதை எந்த நேரத்தில் செய்கிறோம் என்பதுதான் மிக முக்கியம்.

    இறைவன் நமக்கு இரண்டு காதுகளையும் ஒரே ஒரு வாயையும் கொடுத்துள்ளார், எனவே நாம் அதிகம் கேட்க முடியும், அதே நேரத்தில் குறைவாக பேச வேண்டும். எதையும் கேட்கவோ அல்லது சொல்லவோ மிக பொறுமையாக சரியான நேரத்திற்காக காத்திருங்கள்.

    புதிய நல்ல எண்ணங்களோடு சிறந்த யோசனைகளையும் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். மேல் சொன்னது போல் வதந்திகளை கையாளும் போது, குறிப்பாக மேல் அதிகாரிகளை பற்றி யாரிடமும் மோசமாக பேசுவதை தவிருங்கள்.

    உங்களுக்கான சரியான நேரம் அமையும் போது, துணிவாக மற்றும் தெளிவாக உங்கள் மனதில் உள்ள சிந்தனைகளை நடக்கும் ஆலோசனையுடன் ஒப்பிட்டு, சரியான மற்றும் தேவையான கருத்துக்களை சொல்லுங்கள்.

    மனஉறுதியுடன் இருங்கள்: அலுவலக அரசியலுக்கு பதில் கொடுக்க மிக சிறந்த வழி என்பது, உங்களால் எவ்வளவு சிறப்பாக செயல் பட முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செயல் படுவது மட்டுமே.

    உங்களை நீங்களே நல்ல முறையில் வழிநடத்தி துணிவாகவும், அதே நேரத்தில் உறுதியாகவும் செல்வது என்பது எதிரிகளையும் பொறாமைகளையும் வளர்ப்பதிற்கு பதிலாக எளிதாக மற்றவர்களை கவர்ந்து, உங்கள் வழியை பின் பற்ற வைக்கும்.



    அலுவலக அரசியல் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக இருக்கப்போவது என்பது, நீங்கள் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக அதில் கலந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமைகிறது.

    ஆகவே, எப்போதும் மனதில் வைத்திருங்கள், எது வேண்டுமானாலும் வரலாம் போகலாம், ஆனால் கண்டிப்பாக நாம் என்ன செய்தமோ அது நமக்கே ஒரு நாள் திரும்ப கிடைக்கும்.

    "நாம் என்ன ஆயுத்தை எடுக்க வேண்டும் என்று நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்" என்பது மற்ற இடங்களுக்கு பொருந்தினாலும், அலுவல அரசியலை பொறுத்த வரை, "நாம் கையாளும் முறையை பொறுத்தே, நம் எதிரிகள் கையாளும் முறையும் அமைகிறது"

    எனவே கவலைகளை விட்டு விட்டு, தெளிவாக உங்கள் பாதையில் நீங்கள் செல்லுங்கள், உறுதியாக உங்களுக்கு "வானம் வசப்படும்".

    மறுமொழிப்பெட்டி:
    தமிழிலும் மறுமொழியிடலாம்
    Loading...

    லாபம் பெற எளிய வழிகள்-15

     
    1. அடிக்கடி உண்ணாவிரதமிருப்பவர்களை ஹோட்டலில் வேலைக்கு வைத்தால் ஹோட்டல் முதலாளிக்கு லாபம்
    2. ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை நட்சத்திர ஹோட்டல்களில் குழாய் மெக்கானிக்காக போட்டால் நீரை வீணடிக்காமல் மண்ணெண்ணெய் போல லிட்டர்கணக்கில் மிச்சப்படுத்தலாம்.
    3. கணக்குகாட்டாத பைனான்ஸ் கம்பெனி அதிபர்களை ஓட்டப்பந்தையத்தில் சேர்த்துவிட்டால் கட்டாயம் ஒலிம்பிக்கில் எதிர்காலம் மிகவும் பாதுகாப்பாகயிருக்கும்.
    4. மல்லிகைப்பூ வியாபாரியை இட்லிக்கடையில் வேலைக்கு சேர்த்தால் காய்ந்த இட்லியைகூட மல்லியப்பூ போல பரிமாரி வியாபாரத்தைப் பெருக்கலாம்.
    5. போலி டாக்டர்களை கறிக்கடைகளில் வேலைக்கு வைத்தால் அநாவசிய உயிரிழப்பை தவிர்த்து மக்கள் பிழைத்துக்கொண்டு கறிவாங்க கடைக்கு வருவர்.
    6. கிரிக்கெட்டில் பந்தை உருட்டுவவர்களை ஹாக்கி அணியில் சேர்க்கலாம் ரசிகர்களே!
    7. சிகரெட் அதிகம் பிடிப்பவர்களை எதிரி நாட்டு எண்ணெய் கிணற்றில் வேலைக்கு சேர்க்க பரிந்துரைக்கலாம்.
    8. குடித்துவிட்டு உலருபவர்களை குருவிகளை விரட்ட சோளக்காட்டில் பொம்மை வேலைகொடுக்கலாம்.
    9. அடுத்தவர் மேல வள்ளுவள்ளுயென்று கோபப்படுபவர்களை மிருகக்காட்சியில் காட்சிப்பொருளாக வைத்தால் சமகால மக்கள், குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்யென ஒப்புக்கொள்வார்.
    10. மற்றவர் காசில் தொந்தி வளர்பவர்களை ரயில்மறியல் போராட்டத்தில் படுக்கவைத்து நூதனமாக தண்டபாலத்திற்கு ஆப்பு வைக்கலாம்.
    11. குடித்துவிட்டு வண்டி ஓட்டுவவர்களை டிரைவர் வேலைக்கு வைத்தால் இன்சூரன்ஸ் பணம் அதிகமாககிடைக்க வாய்ப்புள்ளது.
    12. லஞ்சம் வாங்கும் ஊழியர்களை போலீஸ் கார் கழுவும் பணிதரலாம். உழைக்காமல் கையும் தப்பாது, கருப்பு பணமும் பைக்கு சிக்காது
    13. பிட்பாக்கெட் கில்லாடிகளை ஸ்கூலில் வாட்ச்மேனாக சேர்த்தால் ஸ்கூல் டொனேஷனை லாவகமாக பெற்றோரிடமிருந்து பெறலாம்.
    14. நடித்து பிச்சையெடுப்போரை வைத்து மெகா சீரியல் எடுத்தால் தயாரிப்பாளர்களுக்கு செலவு மிச்சம்
    15. குண்டு வைக்கும் தீவிரவாதிகளுக்கு, அண்டை மாநிலத்து அணைப்பகுதியின் அட்ரஸ் கொடுப்பேன்யென மிரட்டினால் நதிநீர் பிரச்சனையே வராது !

    மறுமொழிப்பெட்டி:
    தமிழிலும் மறுமொழியிடலாம்
    Loading...

    தமிழ் சினிமாவுக்கு சில அட்வைஸ்கள்...


    ப்பான்னா விஜயகுமார்தானா..? மாடலை மாத்தவே மாட்டீங்களா..? புதுசா கூத்துப்பட்டரையிலேர்ந்து கௌம்பி வந்த கலைராணியும், 'ஏ யய்யா...'னு அடிவயித்துல கத்தும்போது மனோரமா எஃபக்ட் மனசுல வந்து வந்து போகுது பாஸ்.

    பள்ளப்பட்டியில ஷ¨ட்டிங் எடுத்தாலும் பாரீன் லொக்கேஷன்ல பாட்டு வைக்கிற ஸ்டைல் இன்னும் எவ்வளவு காலத்துக்கு..?

    அது எப்படிங்க... 'அபூர்வ சகோதரர்கள்'லேர்ந்து 'தசாவதாரம்' வரைக்கும் பில்டிங் மேலேருந்து ஹீரோ குதிக்கும்போது கரெக்ட்டா அங்க ஒரு காய்கறி லாரியோ, கீரை லாரியோ வந்து நிற்குது..?

     

    கனவு காணும்போதே 'சொய்ங்'னு கௌம்பி சுவிட்சர்லாந்து பக்கம் போய் ஒரு பாட்டம் டூயட் பாடிட்டு வர்றீங்க. கதைப்பாட்டுக்கும் பாவமா நிற்குது. டான்ஸ் முடிஞ்சதும் கதையை கன்டினியூ பண்றீங்க. அநியாயமா இல்ல..?

    நாற்பது குண்டு பாய்ஞ்சாலும் ஹீரோ கல்லு மாதிரி நிற்குறாரு. அடியாளுங்க பாவம், ஒத்தை புல்லட்டுக்கே புட்டுக்குறாங்க. அவ்வளவு நோஞ்சான்ஸ் எப்படி அடியாளா வந்தாங்கன்னு எனக்கு தெளிவு படுத்துவீங்களா..?

    மிஸ்டர் விவேக்... இன்னும் எத்தனை வருஷத்துக்கு வேலை தேடும் இளைஞராவே வருவீங்க..? அதுவும் எல்லாப் படத்துலயும் அதே யூனிஃபார்ம். ஷேம், ஷேம் பப்பி ஷேம்.!

    ரிலீஸாகி நாலு நாள் ஓடுனாலே, 'மெஹா ஹிட்', 'சூப்பர் ஹிட்'னு நீங்க பண்ற அளப்பரை இருக்கே... நிஜமாவே சூப்பர் ஹிட் ஆகுற படத்தை என்னன்னு சொல்றதுங்க..?

    'இது வித்தியாசமான கதை' இந்த வார்த்தையைக் கேட்டாலே அடிவயித்துல ஆஃப்பாயில் வேகுது. முதல்ல நீங்க நார்மலான படம் எடுங்க சாமி.

    நாங்கல்லாம் தளபதி இல்லாம, கேப்டன் இல்லாம, ஸ்டார்கள் இல்லாம அல்லாடுறோம்னு என்னைக்காவது உங்கக்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணமா..? நீங்க பாட்டுக்கும் கூச்சமே இல்லாம பட்டங்களைப் போட்டுக்குறீங்க..? அதுக்கு நாம தகுதியான ஆளான்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா..?

    திருந்துங்கடே.... part-2


    மறுமொழிப்பெட்டி:
    தமிழிலும் மறுமொழியிடலாம்
    Loading...

    காலேஜ் கோட்வேட்ஸ்


     சுந்தரா டிராவல்ஸ்- காலேஜ் பஸ்

    கோழிப் பண்ணை- பெண்கள் கல்லூரி

    சேவல் பண்ணை- ஆண்கள் கல்லூரி

    ஜக்குபாய், ஒண்டிப்புலி- பெண்கள் பக்கம் திரும்பியே பார்க்காத பையன்

    வாட்டர் ஃபால்ஸ்- ஜொல்லு பையன்

    வாக்கிடாக்கி- நடந்துகொண்டே செல்போனில் பேசுபவர்கள்

    பி.ஜே.பி.- பயங்கர ஜொள்ளு பார்ட்டி

    எய்ட்ஸ்- அரியர் இன் டிஃபரன்ட் சப்ஜெக்ட்

    கரண்ட் புராஜக்ட்- தற்போதைய லவ்வர்

    டாட்நெட்- மாடர்ன் பிஹர்

    ஜாவா- வளவளன்னு பேசுற பொண்ணுங்க

    சி++, எஸ்.எஃப்.- சப்பை பிஹர்

    ரெஸ்ட் ரூம்- லைப்ரரி

    கூர்கா- பிரின்ஸிபல்

    சண்முகமணி- பேராசிரியர்கள்

    பல்ப், செடி- படிப்பாளிகள்

    சுண்டல்- எஸ்.எம்.எஸ்.

    என்கொயரி- மௌன விரதம்

    கண்ணகி- நிறைய பசங்களை ரூட் விடும் பொண்ணுங்க.

    டி.வி.டி- சீன் பார்ட்டி

    பஞ்சாயத்து ஆபீஸ்- பைக் ஸ்டாண்ட்

    தியேட்டர்- செமினார் ஹால்

    டைட்டானிக்- சரக்கு அடிக்கும் பையன்கள்

    தளபதி- ஹெல்ப் பண்ணும் பேராசிரியர்

    நெட்வொர்க்- நிறைய பேரு கூட பேசுற பசங்க, பொண்ணுங்க

    சுவிட்ச்- அடிக்கடி லவ்வரை மாத்துற பொண்ணுங்க

    ஆவின்- சின்சியரா படிக்கிறவங்க

    6.2- உயரமா இருக்குறவங்க

    எலிக்குட்டி- அப்பாவி பையன்கள்

    குருவம்மா- கிராமத்து ஸ்லாங்கில் பேசும் பொண்ணுங்க

    எல்லைச்சாமி- பசங்களை தொடர்ந்து வாட்ச் பண்ணும் பேராசிரியர்

    மாமியார்- ஹெச்.ஓ.டி-யிடம் அடிக்கடி கம்ப்ளைண்ட் பண்ற மேடம்

    ம்யூட்- ரொம்ப அமைதியா இருக்குறவங்க

    எஃப்.எம்.- எப்பவும் போன்ல பேசுறவங்க

    சோடா- அடிக்கடி கோபப்படுற பேராசிரியர்

    சோப்பு- தம் அடிக்கும் பையன்கள்

    அறிந்தும் அறியாமலும்- எக்ஸாம்

    ஜெராக்ஸ்- போட்டுக்கொடுக்கும் மாணவர்கள், பேராசிரியர்

    விருமாண்டி- கண்டிப்பான பேராசிரியர்

    மறுமொழிப்பெட்டி:
    தமிழிலும் மறுமொழியிடலாம்
    Loading...

    ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்!


     

    தைப் படிக்க வரும் நண்பர்களே! நீங்க ரொம்ப மனசு நொந்து படிக்க வந்தது தெரியுது.

    டிஸ்கி - இதை படித்து முயற்சி செய்து அடி வாங்கினால் நான் பொறுப்பு இல்லை

    1. ரொம்ப நல்லவனா நீங்க ஹி ஹி... கண்டிப்பா பொண்ணுங்களுக்கு உங்கள புடிக்காது.

    'நான் ரொம்ப நல்லவன் மச்சான். ஆனா, என்னை ஒரு பொண்ணு பார்க்க மாடிங்கது ... அவன் ஒரு பொறுக்கி ஆனா அவன் பின்னாடி ஓர பொண்ணுங்க மச்சான்' என்று சொல்வதை கேள்வி பட்டிருப்பிங்க.

    காரணம்..?

    பொண்ணுங்களுக்கு ரொம்ப நல்லவனா இருந்தா பிடிக்காது...

    நீங்க நல்லவனா இருந்தா அவங்க யார தான் திருத்துவாங்க? அவங்களுக்கு எம்ஜிஆர் பாதி நம்பியார் பாதி வேணும்... ரொம்ப குறும்புத்தனம் இருக்கணும் கொஞ்சம் லொள்ளு இருக்கணும்.

    2. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொல்ற எந்த பையனையும் பொண்ணுங்களுக்கு பிடிக்காது...

    யோசிச்சி பாருங்க... ரொம்ப அழகா இருக்கிற பொண்ணுங்க ரொம்ப ரொம்ப கம்மி அப்படி இருக்கும் போது அந்த பொண்ணு முன்றாவது படிக்கும் போதே பசங்க என்னோட ஆளு டா அவ... இப்படி future figure ஆக இருக்கும் போதே புக் செஞ்சி
    அப்புறம் ஸ்கூல், காலேஜ் என்று பல தடைகளை தண்டி வரும் பொண்ணுங்களிடம் நீங்க அதைபோல 'நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க' என்று சொன்னால், நீங்க கண்டிப்பாக நூறோட நூத்திஒண்ணு:-)

    அதுக்காக, 'நீங்க அசிங்கமா இருக்கீங்க' என்று சொலி அடி வாங்கிடாதீங்க...

    சும்மா ஜாலி பண்ண 'ஹே நீ இன்னிக்கு இந்த டிரஸ் சும்மா அழகா இருக்க...'

    அந்த பொண்ணு நன்றி சொல்லும்போது... நான் தான் அடிக்கடி பொய் சொல்லுவேன்னு உனக்கு தெரியாதா ஹி ஹி:-)

    3. நம்ம பொண்ணுங்க மட்டும் இல்லை. உலகத்துல உள்ள எல்லா பொண்ணுங்களுக்கும் பிடிச்ச ரொம்ப பிடிச்ச விஷயம் நகைச்சுவை ... (மொக்கை இல்லை)

    பொண்ணுங்க பொதுவாவே சுமாரான ஜோக்குக்குக் கூட விழுந்து விழுந்து சிரிப்பாங்க... நல்ல காமெடி பண்ணனும், அதுவும் அவங்கள புண்படுத்தாம...

    உங்க அப்பா அப்படியே விரும்பாண்டி கணக்கா, எங்க ஊரு அய்யனாரு மாதிரி மீசை வச்சி இருக்காரு அப்படின்னு அவங்க அப்பாவ பத்தி அவங்க கிட்ட காமெடி பண்ண கூடாது... நீங்க நல்ல ஃபிரெண்ட்ஸ் ஆகுற வரைக்கும்.

    ஃபிரெண்ட்ஸ் ஆயிட்ட அப்புறம்... 'கொரில்லா எப்படி இருக்காரு' என்று கூட கேட்கலாம். அதுக்கும் கேக்க பிக்க என்று சிரிப்பார்கள்... (நான் சொல்லி இருக்கேன்) அப்புறம் உங்க அப்பாவ பத்தி தான் சொன்னேன் என்று சொல்லி கலாய்க்கலாம்...

    4. பொண்ணுங்க நம்மள மாதிரி அழகை பார்த்து காதலிப்பதோ, விரும்புவதோ கிடையாது. சூப்பர் ஃபிகரும், சுமாரான பையனும் சுத்துறத நிறைய பார்த்து இருப்பீங்க. காரணம்... உளவியல்!

    அவியல் இல்லை பாஸ்... உளவியல்!

    இப்படி நமக்கு ஒரு பொண்ண பார்த்தா... அதுவும் அழகான பொண்ண பார்த்த உடனே ஒரு கெமிஸ்ட்ரி.. ஃபிசிச்ஸ்.. அதாங்க சும்மா உச்சங்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும் சும்மா சர்ர்ர்ர் ஒரு பீலிங் வரும் பாருங்க... அது மாதிரி பீலிங் பொண்ணுகளுக்கு அழகான பசங்கள பார்த்தா வராது..

    அவங்களுக்கு பசங்களோட body language பார்த்தா சும்மா ஒரு ஃபீலிங் வரும்... சும்மா சூப்பரா பேசுறது, ஸ்டைல் உங்க பாடி, கை, கால் அசையற விதம் அவங்களுக்கு ஒரு ஃபீலிங் கொடுக்கும்...

    அதுக்காக அவங்க முன்னாடி காமெடி பண்ற மாதிரி அடிக்கடி சீவுறது, ஸ்டைல் பண்ணுறது, பந்தா பண்றது.. கண்டிப்பா புடிக்காது.

    நீங்க நீங்களா இருங்க... எதார்த்தமா இருங்க. ஏன்னா, அவங்க ரொம்ப புத்திசாலி!

    5. எனக்கு லவ் என்றல் சுத்தமா பிடிக்காது என்று சொல்லுங்க... உங்கள ரொம்ப பிடிக்கும். அதுக்கு அப்புறமா ஃப்ரெண்ட்ஸ் ஆகி லவ் பண்றது வேற விஷயம்...

    பொண்ணுங்க பசங்க கிட்ட பேசுறத தவிர்கறதே இந்த விஷயத்துனால தான்.

    அவங்க அப்பா, அம்மா க்ளோஸ் பிரெண்ட்ஸ் என்று எல்லாரும் லவ்வுக்கு எதிரி...

    'எனக்கு லவ் பிடிக்காது ஒன்லி ஃபிரெண்ட்ஷிப்' என்று நல்லா பேசி புரிஞ்சிகோங்க...

    அப்புறம் சினிமால வர்ற மாதிரி 'ஐ லவ் யூ' எல்லாம் சின்ன பசங்க, ஸ்கூல் பசங்க தான் சொல்லுவாங்க... அப்படி சொல்ல தேவையில்லை. ஒரு தருணத்துல நீங்க இல்லாம அந்த பொண்ணும், அவங்க இல்லாம நீங்களும் இருக்க முடியாது தெரிஞ்சு அதுவே லவ் என்று மாறிடும்...

    எக்ஸ்ட்ரா டிப்ஸ் :

    மொத மொத பார்க்கிற பொண்ணுங்க்கிட்ட நான் பேசுற வசனம்

    "நீங்க ரொம்ப படிப்ஸோ?"

    "ஏன் கேக்குறீங்க?"

    "இல்லை உங்க பின்னாடி ஒரு பெரிய ஒளி வட்டம் தெரியுதே அதான் கேட்டன்."

    :-) சிரித்து விட்டு, "நாங்க ரொம்ப படிப்ஸ் இல்லை" என்று பதில் வரும் :-)


    மறுமொழிப்பெட்டி:
    தமிழிலும் மறுமொழியிடலாம்
    Loading...

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...

    1. இந்த sales repலாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க...???

    2. எல்லா டிவி சானல்லயும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்டுறுக்காங்க ? (பெரிய கொடுமை என்னனா... ஆபிசில எங்க bossஅ பர்த்தா எனக்கு ரோபோ சங்கர் நெனப்பு வந்து சிரிச்சிர்றேன்...)

    3. டெலிபோன்ல நம்பர்கள் மேலிருந்து கீழ இருக்கு கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழிருந்து மேல இருக்கு???

    4. மூக்கிலிருந்தும் வாயில்லிருந்தும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா?? (அத உடனே எல்லாரும் ஏன் செஞ்சு பார்க்குறாங்க?)

    5. flightlaயோ இல்லை நம்ம ரேஞ்சுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிழைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா?? (நாம தான் ஊருக்கு போய்ச்சேரலையே?? )

    6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்?

    7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா???

    8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே... பரிசுனாலே அது இலவசம் தானே.... இல்லயா??

    9. Numberஐ ஏன் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம்?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???

    10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை?

    11. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு போலீஸ் போகிறதே... அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?

    12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??

    13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றாங்களே... நாய் என்னைக்கு வேலை செய்திருக்கு... ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்... இல்லையா???

    14. கண்ணு பெருசா இருக்குறவங்களுக்கு கண்ணு சிரியதாக இருப்பவர்களை விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???


    மறுமொழிப்பெட்டி:
    தமிழிலும் மறுமொழியிடலாம்
    Loading...

    (ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்..!

    1. ஆபீஸில் சும்மா உட்கார்ந்திருக்கும் போது பாஸூடைய கையெழுத்தைப் போட்டுப் பழகலாம். ஃப்யூச்சரில் உதவும்.

    2. வெளியில் போய் நின்று கொண்டு போகிற வருகிற வண்டிகளை எண்ணிக்கொண்டிருக்கலாம்.

    3. உங்கள் வைரி யாரேனும் இருந்தால் அவரது வண்டியின் பெட்ரோல் டேங்கில் கொஞ்சமாக சர்க்கரை போட்டு வைக்கலாம்.

    4. நெட் கனெக்ஷ்ன் இருந்தால் சீரியல், சினிமா கதைகளை படித்து வைக்கலாம். வீட்டுக்குப் போய் டி.வி பார்க்கும் நேரம் மிச்சம்.

    5. கடிகாரத்தைத் தூக்கிப் போட்டு ஒரே அடி... அதுதான் உண்மையிலேயே நேரத்தைக் கொல்வது.

    6. பல்லிடுக்குகளை நாக்கினால் துழாவி ஏதேனும் உணவுத்துணுக்கு மாட்டுகிறதா என்று பார்க்கலாம், மாட்டினால் அதை மென்று கொண்டு இருக்கலாம்.

    7. இன்டர்வியூவுக்காக வந்திருக்கும் ஏதேனும் ஒரு பிகரை பிக்கப் பண்ண டிரை பண்ணலாம். அவர் இன்டர்வியூவுக்காக வந்திருப்பதால் கண்டிப்பாக சிரித்துப் பேசுவார்.

    8. கார்ட்டூன் போட்டுப் பழகலாம். முக்கியமாக உயரதிகாரிகளை. ஆனால் அந்தப் பேப்பர் அவரது கைகளில் மாட்டாமல் பார்த்துக்கொள்வது அதி முக்கியம்.

    9. கண்களை மூடியபடி பகல் கனவு காணலாம், ஸ்கூல் நாட்களில் கணக்கு, பெளதீகம், ஹிஸ்டரி முதலிய வகுப்புகளில் செய்தது போல. கனவில் நமீதா, ரம்பா வகையறாக்களை வரவழைத்தல் நலம்.

    10. கேஸ் எப்படி ஃபார்ம் ஆகிறது, கொட்டாவி, ஏப்பம் முதலியவை எப்படி உருவாகின்றன போன்றவற்றை யோசிக்கலாம்.

    11. காபியைத் கை தவறிக் கொட்டி விட்டு ஹவுஸ் கீப்பிங் பையனிடம் அவன் தான் கொட்டி விட்டதாக வம்பிழுக்கலாம். இன்னொரு காபி கொண்டு வரச்சொல்லலாம். (ஆனால் இதை வீட்டில் முயற்சிக்கக் கூடாது.)

    12. பேப்பரில் ஏரோப்ளேன், ராக்கெட் முதலிய கைவினைப் பொருட்களை செய்து பழகலாம். யார் அதிக தூரம் விடுவது என கொலீக்குடன் போட்டி வைக்கலாம். ஆனால், வேலை பார்க்கும் யார் மேலாவது மோத விட்டு பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.

    13. இஷ்ட தெய்வத்தின் மேல் பாடல் எழுதலாம். இஷ்ட தெய்வம் இல்லையா? பிடித்தவர்கள் மேல் எழுதலாம். கானா எழுத முயற்சித்தால் நிறைய எழுத முடியும்.

    14. ரெஸ்ட் ரூமுக்குப் போய் முகத்தை அஷ்ட கோணலாக ஆக்கி அழகு பார்க்கலாம். செல்போன் கேமரா இருந்தால் படம் பிடித்தும் வைக்கலாம்.

    15. எல்லாவற்றையும் விட எளியதான ஒரே வழி தூக்கம்.

    16. தொந்தியை வருடிக்கொடுப்பது போன்ற சிறு சிறு தேகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    17. கேஃபடேரியாவில் / கேன்டீனில் கூட்டம் அதிகமாக இருந்தால் ஸ்நாக்ஸை ஆர்டர் செய்ய குறுக்கு வழிகளை யோசிக்கலாம்.

    18. வேறு யாராவது எழுதிய ஈ.மெயிலில் தப்பு கண்டுபிடிக்கலாம். முடிந்தால் அவரிடமே சொல்லி வெறுப்பேற்றலாம்.

    19. யாரையாவது கம்பெனி சேர்த்துக் கொண்டு உங்கள் ஃப்ளோர் (தளம்) தவிர மற்ற ஃப்ளோர்களுக்கு ஒரு விஸிட் போய் வரலாம். லிஃப்டை தவிர்த்து படிகளில் நடந்து போனால் நேரமும் அதிகமாகும், அரட்டையும் அதிகமாகும்.

    20. வீட்டிலுள்ள சுட்டிகளின் கம்ப்யூட்டர் கேம்ஸை கொண்டு வந்து டவுன்லோடு செய்து வைக்கலாம். போரடிக்கும் நேரங்களில் விளையாட உதவும்.

    21. தொடக்கூடாத ஏதேனும் ஒரு பட்டனை தட்டிவிட்டு கம்ப்யூட்டரை ஹேங் செய்யலாம். சிஸ்டம் டிபார்ட்மெண்ட் ஆட்களை வரவழைத்தால் ஒரு முழு நாளையும் ஓட்டலாம்.

    22. ஏதாவது ஒரு மியூஸிக் சேனலுக்கு போன் செய்து பிடித்த பாடல் கேட்கலாம். அதை உங்கள் சுபீரியருக்கு டெடிகேட்-டும் செய்யலாம்.

    23. உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாருக்காவது போன் செய்து (ஆபீஸ் போனிலிருந்து தான்) நலம் உசாவலாம். முன்னதாக போன் உரையாடல் ரெக்கார்ட் ஆகிறதா என்பதை மட்டும் செக் செய்து கொள்வது உசிதம்.

     

    மறுமொழிப்பெட்டி:
    தமிழிலும் மறுமொழியிடலாம்
    Loading...

    நெஞ்சார்ந்த நன்றிகள்......

    அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
    பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.