Followers

திருக்குறள்

Tuesday, May 31, 2011

காதலித்தால் உடம்புக்கு நல்லது!!

காதலில் ஈடுபடுவோருக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல் வயப்பட்டவர்களுக்கு உடலும், மனமும் நிதானமாகவும், அமைதியாகவும் இருக்குமாம். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றவர்களை விட சிறப்பாக இருக்குமாம்.

சர்வதேச மன நல உடலியல் இதழில் இதுதொடர்பான ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் காதலில் ஈடுபடுவோருக்கு நரம்புகளின் வளர்ச்சியும் சீராக இருக்குமாம். நரம்பு மண்டலம் முழுமையாக செயல்படும், நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை நரம்பு செல்கள் வேகமாக வளர்ச்சி அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதெல்லாம் காதல் வயப்பட்ட ஒரு வருடத்திற்கு மட்டும்தானாம். அதன் பின்னர் பழைய குருடி கதவைத் திறடி கதையாக, 'நார்மல் லெவலுக்கு' காதலர்களின் உடல் ஆரோக்கியம் திரும்பி விடுமாம்.

அதற்காக வருடத்திற்கு ஒரு 'புதுக் காதல்' என்று போகலாமா என்று ஆய்வாளர்கள் கூறவில்லை!

'ஆர்க்யுமென்ட்' ஆரோக்கியத்தைக் கெடுக்கும்!

அதேபோல கடுமையாக சண்டை போடுவதும், வாதிடுவதும் கூட உடல் நலத்தைக் கெடுக்கும் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் கடுமையாக வாதிடும்போது அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்குமாம். சில மணி நேரங்களில் இது சரியாகி விடும். ஆனால் சில வாரங்கள் கழித்து இந்த சம்பவத்தை நினைத்தால் கூட அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்குமாம்.

எனவே யாருடனாவது சண்டை போட்டாலோ அல்லது வாக்குவாதம் செய்தாலோ, கோபமாக பேசினாலோ அந்த சம்பவத்தை அத்தோடு மறந்து விடுவது நமது உடம்புக்கு நல்லது. நினைத்துக் கொண்டே இருந்தால் சிக்கல் நமக்குத்தான்.

பொறாமைப்பட்டாலும் சிக்கல் ..!

அதேபோல பொறாமை உணர்வும் கூட நமது உடம்பைப் பாதிக்குமாம். பொறாமை என்பது பயம், கோபம், பதட்டம் ஆகியவற்றின் கலவை என்கிறார் ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் ஜேன் பிளம்மிங்.

பொறாமை உணர்வு ஏற்பட்டால் அது ரத்த அழுத்தம், இதயப் பதட்டம், அட்ரீனலின் அளவில் மாறுபாடு, சோர்வு, பதட்டம், பய உணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தி உடல் நலனைப் பாதிக்கும் என்கிறார் பிளமிங்.

எனவே, காதலிங்க, சண்டை போடாதீங்க, பொறாமைப் படாதீங்க!
 
 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

ஒரு பேச்சுலரின் கடைசி பக்கங்கள்....


கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா  மச்சான்..இப்பதாண்டா எதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது..

வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது...பொண்டாட்டி முன்னாடி இப்படி சொல்லிட்டு,அவங்க Kitchen  உள்ள போனவுடனே , கையெடுத்து கும்புட்டு தயவு செஞ்சு அந்த தப்ப மட்டும் பண்ணிமாட்டிக்காத மச்சின்னு கெஞ்சற நண்பன்....

 
எவ்ளோ நிம்மதியா இருந்தேன்..கல்யாணத்த பண்ணி வெச்சு என்ன என் புருசனுக்கு அடிமையாக்கிட்டாங்க.என் தோழி ஒருத்தி...

 
தம்பி அடுத்த வருஷம் ஜூன் குள்ள கல்யாணத்த முடிசிரனும்டா..நல்ல பொண்ணு
கிடைச்சுதுன்னா  விட்ற கூடாது.....என் அம்மா..

 

 டேய் கல்யாணத்துக்கு நெறைய செலவாகும்..வழக்கம் போல
பெருந்தன்மையா நீங்களே பார்துகங்கப்பானு சொல்லிட்டு போய்டாத...
மரியாதையா  காச சேர்த்து வை...என் அப்பா..

 

சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா...காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ்
போடலாம்னு நானும் ரெண்டு வருசமா வெயிட் பன்றேனு.... சொல்லிட்டு ...மூதேவி..இதுவும் பண்ணிக்கமட்டேன்குது.எனக்கும் பண்ணி வெக்க மாட்டேன்குதுன்னு மனசுக்குள்ள முனுமுனுக்கற என் தங்கச்சி...

 

கல்யாணம்லாம் சும்மா பிரதர்...வெத்து மேட்டரு...ஒன்னும் இல்ல அதுல...பார்ல சிகரட் ஓசி வாங்குன கடனுக்கு அட்வைஸ் பண்ண வஸ்தாது ஒருத்தர்.

 

கல்யாணம்..கல்யாணம்...கல்யாணம் .....

 

25  27 வது வயசுல ஒரு பிரம்மச்சாரியை  லேசா பயமுறுத்தி அதிகமா பதட்டபடுத்தி கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்த... அப்டி என்னதாங்க இருக்கு இந்த கல்யாணத்துல....

 

முதல் 3 மாதம்... திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு ...பொண்டாட்டிங்க்ற பேர்ல உங்க வீட்டுகுள்ள வருவா...பின்னாடி ஒரு கூட்டமே வந்து விட்டுட்டு போகும்....


பீரோகுள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவங்க  துணிய அடுகிக்குவாங்க‌...உங்க பாத்ரூம்ல அவங்க சோப்பும் ப்ரச்சும் எடத்த புடிச்சுக்கும்...அடுத்த நாள் ஆபீஸ் போகும்போது சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்கன்னு குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே சொல்லுவாங்க‌...ஊர்ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த புள்ளைக்கு இவ்ளோ புடிசிருகேன்னு நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்போம்...  (இது அடிமையாகுதலின் முதல் கட்டம்...)

 

அப்பறம் உங்கள அடிமையாக்கரதுக்கு,உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல நடக்கும்...
(அவங்க  கூட படிச்ச  வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா குடுப்பாங்க‌...)

 

 மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங்
கூட்டிட்டு போவீங்க...அவங்க 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்த
எல்லாத்தையும் அப்பதான் வாங்குவாங்க‌....

அவங்க  வாங்கற நெய்ல் பாளிஷ்க்கும் பாடி ஸ்ப்ரேக்கும் நீங்க தெண்டம் அழுகனும்... கான்டாதான் இருக்கும்...என்ன பண்றது...

அவங்களோட .ஒவ்வொரு சினுங்களுக்கும் கிரெடிட் கார்ட்
கிழிய கிழிய தேய் தேய்னு தேய்ப்போம்...பில்லு எகிர்றது பார்த்து மனசு
பதர்னாலும் உதடு வேற என்ன வேணும் என் செல்லகுட்டிக்குன்னு கேக்கும்.


வீட்டுக்கு விருந்தாளிங்க்ற பேர்ல வந்து  டேரா போன்ற அவங்கப்பன்
விருமாண்டி கிட்ட கூட  பாசமா நடந்துகுவோம்...(எல்லாம் நடிப்புதேன்..
எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன் மாமனார புடிச்சிருக்கு...)கொஞ்சம்
கொஞ்சமா நீங்க நீ யாயிட்டு வருவீங்க...

 

 ஆறு மாசம் ஓடிடும்...

 அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு உமக்கு வாழ்க்கை...அடிமை ஒய் நீரு...

 

பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய கதையடிச்சிட்டு பேசுற‌ சுகம்
அதுக்கப்றம் கனவாவே போய்டும்....எங்க போறோம்,எதுக்கு போறோம்னு தெரியாம எங்கெங்கயோ போன தருணங்கள் மனசுக்குள்ள வெறும்  நினைவுகளா மட்டுமே இருக்கும்...எந்த பொண்ண பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளோ,அப்டி இருப்பாளோங்கற அந்த curiosity சுத்தமா இருக்காது...செகண்ட் ஷோ சினிமா கட் ஆகும்...குஷி ஆனா அடிக்கற பீர் ,தம்
[எப்போவாவது] கட் ஆகும்....நிம்மதியா செலவு பண்ற சுதந்திரம் கட் ஆகும்....

என்ன கொடும சார்   இது....

இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லுறேன்...

 
வாழ்க்கைல சந்தோஷமான தருணம் bachelorlife மட்டும்தான்னு எனக்கு தோனுது..

 
நீங்க என்ன நெனைக்கறீங்க...

இப்படிக்கு bachelor life ஐ ரசித்து ருசித்து
என்ஜாய் பண்ணிகொண்டிருக்கும்...
ஒரு சுதந்திர மனிதன்

 

 
 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

பெண்ணுக்குள் அதிசயம்

ழகில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?

- பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?

- ஆண்கள் எந்த விஷயத்தில் கோட்டைவிடுகிறார்கள்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிஞ்சுக்கணுமா? உளவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில அடிப்படை உண்மைகள் இங்கே…

* பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறாமல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.

* ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.

* குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொல்லிவிட்டு மறந்துவிடுவார்கள்.

* ஆண்களுடைய சிந்தனை, செயல்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக்கும். சுயநலவாதிகள். ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.

* உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.

* ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வேண்டும். கூடுதலாக சந்தோஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வேண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழுதுபோக்கு, நல்ல சந்தோஷம்… இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைவார்கள்.

* பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசைகளையும் ஒளிவுமறைவாக வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்'. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார்கள். ஆசையையும் கொட்டித் தீர்த்துவிடுவார்கள்.

* பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள்.

- சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும்
விதிவிலக்கானவர்களாகவும் இருப்பார்கள்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, May 24, 2011

தாய் பாசம்..........

     
 
      கொழுத்து நான் நின்றாலும் 
      உன் கண்ணிற்கு மட்டும்
      மெலிந்துப் போனதேனோ;

      கருமை என்று  எல்லோருடைய
      நாவும் என்னை நலம்
      காணும் போது;

      அள்ளி அணைத்து;
      கிள்ளி உரைக்கும்
      உன் நாவு எனை
      அழகு என்பதேனோ;

      புசிக்கும் வயிற்றுக்குப்
      பசிக்கவிட்டாலும்;
      படையெடுக்கும் உன் கரம்
      எனக்காக உணவுத் தேடுவதேனோ;

      அனலாய் காய்ச்சல்
      வந்தாலும் எனை
      அணைத்துக் கொண்டு
      உன் விரல் என் முடிக்கு
      மகுடி வாசிப்பதேனோ;

      சினம் வந்து ;
      தடம் மாறும்
      உன் குணத்தால்;
      தடம் பாதிக்கும் உன் விரல்
      என் முதுகில்;

      வேறு யாரும் எனை
      முறைக்கும் போது;
      கடிக்கும் பார்வையால்
      தடிக்கும் வார்த்தையால்;
      எனக்கு கவசமிடுவதேனோ;

      இனம்புரியாத பாசத்தால்;
      இனம் காக்கும் உன் அன்பு
      இனிப்பதேனோ;

      இனிக்கும் தேனும்
      உனைப்பற்றி  உரைக்கும் போது
      முடிவாய் வருவதேனோ!
 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

என்ன நான் சொல்வது?!


 

பிணைந்திருக்கும்
நம் கரங்களுக்குள்
கதகதப்பாய் காதல்!

*

உன் கன்னக்குழியில்
இருக்கிறது
என் ஆயுளின் சாவி!

*

வறண்ட உதட்டை
ஈரப்படுத்துகிறாய்!
அவசரமாய்
ஆயுத்தமாகின்றன
என் இதழ்கள் முத்ததிற்கு!

*

உன் வசவுகளை விட
துயரமானது
கோபமான மெளனம்!

*

நம் தனிமையில்
உன் துப்பட்டாவை
கலைக்கும் காற்றுக்கும்
எனக்கும் என்ன உறவென்றால்
என்ன நான் சொல்வது?!

*

காத்திருத்தல் சுகம்
உனக்காக
எனும்போது!

*

வாழ்க்கையை உருட்டுகையில்
எனக்கு விழுந்த
தாயம் நீ!

*

உன் பேரழகை
அழகாய் சொல்பவையே
கவிதைகள்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நீ நனைந்தபின்......


 

எப்போதாவது
வந்தமரும் குருவிக்கு
காத்திருக்கும் ஒற்றை பனையாகிறேன்;
உனக்காக காத்திருக்கையில்!

*

மேளத்தின் அதிர்வெட்டுகிறது
இதயம்;
தலைகுனிந்து கடந்த நீ
திரும்பி பார்த்து வெட்கி குனியும்
நொடிப் பொழுதில்!

*

பட்டாம்பூச்சி துரத்திய
குழந்தையின் குதூகலத்துடன்
விடிகிறது;
கனவில் உனைக் கண்ட
என் இரவு!

*

முன்னமே சிநேகம்தான்
என்றாலும் நேற்று
நீ நனைந்தபின்
இன்னும் சிநேகமாகிப்போனது
மழை!

*

நீ வர தாமதமாகும்
ஒவ்வொரு நிமிடமும்
அனுபவிக்கத் தருகிறது:
பட்டாம்பூச்சி தொலைத்த
குழந்தையின் அவஸ்தையை!

*

உன் உதடும்
என் உதடும்
சங்கமிக்கும் பொழுதில்
யாருடையது முதல்முத்தம்?

*

நீ
நீருள் இறங்கினாய்;
அழகால் நிரம்பியது
குளம்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

காய்வதேயில்லை!

Indian Village Girl
 
நீ பறித்து சூட
பூத்திருக்கிறது
என்னுள் காதல்!
*
குடை விட்டெறி!

உன்னில்
நனைந்திடத்தான் பொழிகிறது
மழை.

*
காய்வதேயில்லை!

நீ தந்த
முத்தங்களின் ஈரம்!

*
காதுகளுக்கு
உன் பேச்சிசை!
கண்களுக்கு
உன் பேரழகு!
நாசிக்கு
உன் சுகந்தம்!
தேகத்திற்கு
தொடுகை!
என்ன பாவம் செய்தது
உதடுகள் மட்டும்;
வா!முத்தமிட்டுப் போ!
*
நான் ஒரு பக்கம்
உன் உடைந்த
கண்ணாடி வளையல் துண்டுகள்
ஒரு பக்கம்!

சமனாகி விடுகிறது
காதல் துலாபாரம்!


  
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.