Followers

திருக்குறள்

Saturday, November 16, 2013

அலுவலகத்தில் வேலை செய்வதை தவிர்க்க சில புதுமையான யோசனைகள்!!!

உங்களுடைய வேலையிலிருந்து சற்றே கிளம்பிச் செல்லவோ அல்லது அதனை மறக்கவோ ஒரு காரணம் வேண்டும் என்ற நீங்கள் நினைக்கிறீர்களா? ஏதாவதொரு வேலையை நமக்கு தேவையில்லை என்றோ அல்லது செய்ய முடியாது என்றோ நாம் தவிர்க்க நினைப்போம். வேலைக்காக நம்மை நம்பியிருப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே, அந்த வேலைகளை செய்யாமல் தவிர்க்க நமக்கு நல்ல காரணங்கள் தேவைப்படுகின்றன.
வேலையை தவிர்க்க உடல் நலம் சரியில்லை, குடும்ப பிரச்சனைகள் மற்றும் சொந்த காரணங்களை சொல்வது மிகவும் தேய்ந்து போன பழைய காரணங்களில் ஒன்றாகும். ஆனால், இந்நாட்களில் இந்த காரணங்களின் உண்மைகளை எளிதில் கண்டறிந்து விட முடியும். எனவே தான், நாம் புதுமையான யோசனைகளின் துணையைத் தேட வேண்டியுள்ளது. அவை மிகவும் எளிதாக நம்பக் கூடியவையாகவும், மாறுபட்டதாகவும் மற்றும் உண்மையாகவும் இருக்க வேண்டும்.
அலுவலகத்தில் வேலை செய்வதை தவிர்க்க சில புதுமையான யோசனைகள்!!!
அது போன்ற சில யோசனைகளை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம்.
'தெய்வீக அருள் பெற்றவர்' வருகை - நீங்கள் உங்களுடைய பாஸிடம் சென்று தெய்வீகத்தன்மை கொண்ட ஒருவரை பார்க்கச் செல்வதாகவோ அல்லது உங்கள் நகரத்திற்கு வந்திருக்கும் மிகவும் மத நம்பிக்கை உள்ளவரை பார்க்கச் செல்வதற்காக உங்களுடைய சொந்த நகரத்திற்கு செல்வதாகவும் கூறலாம். இந்த காரணம் பெரும்பான்மையான நேரங்களில் சரிவர வேலை செய்யும். ஆனால், உங்களுடைய பாஸுக்கு கடவுளைப் பற்றி அதிக தகவல்கள் தெரியவில்லை என்றால் மட்டுமோ அல்லது நீங்கள் ஒரு நாத்திகர் என்று அவருக்குத் தெரிந்திருந்தாலோ மட்டும் தான் இந்த காரணம் பயன்படாமல் போகும்.
சட்டம் தொடர்பான காரணங்கள் - நம் நாட்டின் சட்ட அமைப்பு பற்றி அனைவருக்கும் தெரியும். நாம் ஒருமுறை போகாவிட்டால் கூட எந்த வேலையும் நடக்காது. எனவே உங்களுடைய சட்ட ரீதியான ஆவணம் சார்ந்த பணிக்கோ, சான்றிதழ் பெறவோ அல்லது வாக்குமூலம் கொடுக்க செல்வதாகவோ காரணம் சொல்லலாம். உங்களுடைய பாஸை சமாதானப்படுத்துவது தான் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை.
கல்யாண வரன் பார்த்தல் - குறிப்பிட்ட வயதுக்கு பின்னர், உங்களுக்கு கல்யாண வரன் பார்க்கும் அறிவிப்புகள் வருவது இயல்பு தான். நீங்கள் இதனை ஒரு சிறந்த காரணமாக சொல்லி வேலை செய்வதை தவிர்க்கலாம். நீங்கள் உங்களுடைய வருங்கால வாழ்க்கைத் துணையை பார்க்கப் போவதாக சொல்லலாம். அடுத்த முறை, அந்த சந்திப்பு எப்படி இருந்தது என்று கேட்டால், 'சரியில்லை' என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லித் தப்பி விடலாம்.
நண்பரின் இறுதிச் சடங்கு - வேலைக்கு செல்வதை தவிர்க்க உங்களுடைய தாத்தா அல்லது சொந்தக்காரர்களை கொல்வது சாதாரண விஷயமாகி விட்டது. இப்பொழுது, இதில் உங்கள் நண்பர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் யாராவது ஒரு நண்பருடன் வெளியில் செல்ல வேண்டியிருந்தால், நண்பரின் இறுதிச் சடங்கிற்கு செல்வதாக சொல்லுங்கள். 'ஒவ்வொரு நண்பரும் முக்கியமானவரே' என்று சொல்வதைப் போல. ஆனால், மீண்டும் அதே நண்பரின் பெயரை சொல்லி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
'உதவி செய்யப் போகிறேன்' - நீங்கள் விபத்தில் மாட்டிக் கொணட ஒரு பெண்ணுக்கு உதவவோ அல்லது வேறொருவருக்கு உதவிக்காக லிப்ட் கொடுப்பதாகவோ சொல்லி உங்கள் வேலையைத் தவிர்க்கலாம். நீங்கள் அனைவருக்கும் உதவி செய்வது பயனுள்ளதாக இருக்கும், அதே வேளையில் வேலை செய்யாமலும் தவிர்க்க முடியும்.
இவையெல்லாம் உங்கள் வேலையை தவிர்ப்பதற்கான, சற்றே வித்தியாசமான மற்றும் விளையாட்டான யோசனைகளாகும். இதே போன்ற பல புதுமையான யோசனைகளை நீங்களும் வைத்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இவையெல்லாம் புதிய யோசனைகள் மற்றும் பழையனவற்றை விட சற்றே திறன் மிக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பது தான் இவற்றின் சிறப்பு.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, November 15, 2013

நீ நனைந்தபின்!....

எப்போதாவது
வந்தமரும் குருவிக்கு
காத்திருக்கும் ஒற்றை பனையாகிறேன்;
உனக்காக காத்திருக்கையில்!
*
மேளத்தின் அதிர்வெட்டுகிறது
இதயம்;
தலைகுனிந்து கடந்த நீ
திரும்பி பார்த்து வெட்கி குனியும்
நொடிப் பொழுதில்!
*
பட்டாம்பூச்சி துரத்திய
குழந்தையின் குதூகலத்துடன்
விடிகிறது;
கனவில் உனைக் கண்ட
என் இரவு!
*
முன்னமே சிநேகம்தான்
என்றாலும் நேற்று
நீ நனைந்தபின்
இன்னும் சிநேகமாகிப்போனது
மழை!
*
நீ வர தாமதமாகும்
ஒவ்வொரு நிமிடமும்
அனுபவிக்கத் தருகிறது:
பட்டாம்பூச்சி தொலைத்த
குழந்தையின் அவஸ்தையை!
*
உன் உதடும்
என் உதடும்
சங்கமிக்கும் பொழுதில்
யாருடையது முதல்முத்தம்?
*
நீ
நீருள் இறங்கினாய்;
அழகால் நிரம்பியது
குளம்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நான் ஒரு பக்கம்

நீ பறித்து சூட
பூத்திருக்கிறது
என்னுள் காதல்!
*
குடை விட்டெறி!
உன்னில்
நனைந்திடத்தான் பொழிகிறது
மழை.
*
காய்வதேயில்லை!
நீ தந்த
முத்தங்களின் ஈரம்!
*
காதுகளுக்கு
உன் பேச்சிசை!
கண்களுக்கு
உன் பேரழகு!
நாசிக்கு
உன் சுகந்தம்!
தேகத்திற்கு
தொடுகை!
என்ன பாவம் செய்தது
உதடுகள் மட்டும்;
வா!முத்தமிட்டுப் போ!
*
நான் ஒரு பக்கம்
உன் உடைந்த 
கண்ணாடி வளையல் துண்டுகள்
ஒரு பக்கம்!
சமனாகி விடுகிறது
காதல் துலாபாரம்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

தொலைக்க நினைத்தாலும்


நீ இல்லாத
பொழுதுகளும்
நன்றாகத்தான்
இருக்கின்றன
இப்போதுதான்
உன்னைபற்றி
அதிகம் நினைக்கிறேன்



நீ ஓடிப்போகலாமா
எனக்கேட்டதும் நான்
தயாராவதற்குள்
என்னைவிட்டு விட்டு
ஓடிப்போனால் எப்படி ?




உன்னை காதலித்ததற்கு
பேசாமல் ஒரு கழுதையை
காதலித்திருக்கலாம் என
கூறுகிறாய்
நானும் உன் நினைவுகளை
சுமந்துகொண்டிருக்கும்
கழுதைதான் !




நான் தாடி வைத்தால்
சகிக்காது என நீதானே
கூறியிருக்கிறாய்
அதற்காகவாவது
என்னிடம் பேசிவிடேண்டி !




பேசிக்கொண்டாவது
இருந்திருக்கலாம்
பேசிக்கொடுத்த
தொல்லையைவிட
உன் நினைவுகளின்
தொல்லை
அதிகமாக
இருக்கிறது.




இனி உன்னிடம்
பேசப்போவதில்லை
என
கூறிவிட்டு நீ மட்டும்
சென்றுவிட்டால் எப்படி
கூடவே உன் நினைவுகளையும்
கூட்டிக்கொண்டு போய்விடு
அவைகளின் அழிச்சாட்டியம்
தாங்கமுடியவில்லை !



ஏன் என்னிடம் பொய்
சொன்னாய் எனக் கேட்டு
சண்டை போடுகிறாய்
நீ அழகாய் இருப்பதாய்
கூடத்தான் சொன்னேன்
அப்போது மட்டும்
ரசித்தாயே !




நிறைய நேரம் கிடைக்கிறது
இப்போதெல்லாம்
நம் நினைவுகளை
அசை போடுவதற்கு
ஊடல் வாழ்க !




தொலைக்க நினைத்தாலும்
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்
ஈரமான
கடற்கரை மணலைப்போலே

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

மழை வரும் நேரம்


முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!
*
நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.
*
மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!
*
பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!
*
இதழெங்கும் தீக்காயங்கள்.
மழைக்காலத்தில் நீ சுட்ட
அனல் முத்தங்களால்…
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

கேட்டதும் கிடைக்கும் !....


அணிகலன் இல்லாத கோபத்தில்
என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
உன் இதழ்கள்.
*
கண்ணில் முத்தமிட வந்தேன்.
இமை ம(ப)றித்துக்கொண்டது.
*
"ஆயிரம் முத்தங்களுடன்,
_____"
என்று கையொப்பமிட்ட கடிதங்கள் போதும்.
ஓர் இதழொப்பம் செய்.
*
கேட்டதும் கிடைக்கும் முத்தம் யாருக்கு வேண்டும்?
உன் முத்தச்சண்டையை விட
முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம்.
*

ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
வெட்கத்துடன் சொல்கிறாய் -
"லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

காதலை வெளிப்படுத்துவதற்கான சில சூப்பர் வழிகள்


அன்பை காண்பிக்க இது பழமையான வழியாக இருந்hலும், எல்லா நேரங்களிலும் விரும்பத்தக்க வழிமுறையாகும். நீங்கள் உங்கள் இதயத்தில் சில எண்ணங்களை யோசித்து, அவளை கவருவதற்கு ஏற்ற சரியான பூங்கொத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
நீங்கள் அவளை எப்போதும் நேருக்கு நேராக பார்க்க முடியாது. பிரிந்திருக்கும் காலமும் உண்டு. அந்த சமயத்தில் அவளுக்கு உங்களது காதலைப் பற்றி, கவிதையாவோ கடிதமாவோ வரைந்தால் அது உங்கள் அன்பை மிகுதி படுத்தும்.
அன்பை வெளிபடுத்தும் காதலனாக நீங்கள் அவளை வெளியே டின்னருக்கோ, குளிர்பானம் அருந்தவோ அல்லது திரைப்படத்திற்கு அழைத்து செல்லவோ திட்டமிடுவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு உங்கள் காதலியை அழைத்து செல்வது உங்கள் காதலை வெளிபடுத்தும்.
உங்களுடைய காதல் நேரங்கள் எல்லாமே வெளியில் தான் நிகழ்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய காதலை வெளிப்படுத்தும் வகையில் டின்னருக்கு அழைத்து, அவளுக்காக நீங்களே சமைத்து தரலாம். இம்முயற்சி அவளின் மேல் நீங்கள் எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறீர்கள் எனபதை விளக்கும்.
இதற்காக முன் கூட்டியே திட்டமிட வேண்டாம். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அவளுடைய அழகை நல்ல முறையில் புகழ்ந்து பேசுங்கள். பொதுவாகவே பெண்கள் அழகாக தோற்றமளிக்க கடும் முயற்சிகளை செய்யவும் மற்றும் உங்களிடம் தங்களை அழகாக காட்டவும் முயற்சி செய்வார்கள், எனவே அவர்களை புகழ்ந்து பேசுவதை மிகவும் விரும்புவார்கள்.
காதல் வெளிப்பாடுகள் அனைத்துமே முன்கூட்டியே திட்டமிட்டு செய்யக் கூடியவைகள் அல்ல. நீங்கள் அவளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அவளை டின்னருக்கு அழைத்துச் செல்லலாம். அவளுக்கு தெரியாமல் பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்தல் அல்லது எதிர்பாராத நேரத்தில் பரிசளித்தல் போன்றவை அன்பை காட்டும்.
உங்கள் காதலி சில சமயங்களில் உங்களின் உதவியையோ அல்லது துணைக்கு ஒருவரையோ தேடலாம். இந்த தருணங்களில் நீங்கள் அவளுடன் இருப்பது உங்கள் அன்பை உறுதியாக்கும் மற்றும் உங்களது அக்கறையையும் காதலையும் வெளிபடுத்தும்.
காதல் மற்றும் அன்பு தொடர்பான வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துங்கள். மிக முக்கியமான தருணங்களில் அவசியம் பயன்படுத்துங்கள். நீங்கள் உண்மையான காதலுடன் காதல் வார்த்தைகளை சொன்னால், அது கண்டிப்பாக வேலை செய்யும்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

என் வாழ்வின் நரகம்!....





ஒவ்வொரு நாளும் உன்னுடைய வீட்டை

கடந்து செல்லும் போது உனது மின் பார்வையில்

இருந்து மீளாமல் செல்ல முடியவில்லை..


ஊரெல்லாம் மின்சார தட்டுப்பாடு...

இவளின் கண்களில் மட்டும் எப்படி

இவ்வளவு பவர்..?

ஐன்ஸ்டீன் வாழும் காலம் நீ இல்லை...

இல்லை என்றால் மின்சாரம் கண்டுபிடிக்காமல்

போய் இருக்க கூடும்...

ஒரு கண்களால் என்னை பார்க்கும் போதே

இப்படி ஆகின்றேனே.. இரண்டு கண்ணால் பார்த்தால்..?


நீ பேசி கேட்டதை விட..உன் கண்கள் பேசி

பார்த்ததே அதிகம் எனக்கு...

உன்னுடன் பேசாத இந்த நாட்கள் என் வாழ்வின் நரகம்!...

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

காதலின்றி வேறில்லை...



0

பட்டாம்பூச்சியின்
வண்ணச்சிறகில்
கைகள் கோர்த்து
அமர்ந்திருக்கிறோம்
நாம்.
வானமெங்கும் சுற்றித்திரிந்த
பட்டாம்பூச்சி 
பூவொன்றின் இதழ்களில்
உன்னை இறக்கிவிடுகிறது.
பூவுக்குள் ஓடி மறைகிறாய்
நீ.
பூக்களின் பெயர்க்காரணத்தை
உலகிற்கு அறிவிக்கிறேன்
நான்!

0

ஓடிவந்து என் 
கழுத்தைக் கட்டிக்கொண்டு 
உன் கன்னம் உரச
நீ பேசும்பொழுதெல்லாம்
விதவித வண்ணங்களாய்
என்னுள் பெய்கிறது மழை.

0

உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை.

0

சிப்பிக்குள் ஒளிந்திருக்கும்
முத்தைப்போல்
உன் கன்னக்குழிக்குள்
ஒளிந்திருக்கிறது 
எனக்கான காதல்புன்னகை!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

ரசிக்க மட்டுமே....

 

 

1.அன்பே ..! உன் அப்பன் என்ன தீவிரவாதியா? புள்ளைய பெத்துவிட சொன்னா அணுகுண்ட பெத்துருக்கான் ..

2.
பாய்சன் குடிச்சாகூட வராத மயக்கம், நீ பக்கத்தில் வந்து பேசும் போது வருகிறது .தயவு செய்து பல் விலக்கு ப்ளீஸ் ..

3.
நான் பயப்படுவதெல்லாம் நீ கட்டும் 5 ருபாய் ராக்கிக்கு அல்ல, நீ அதை கட்டி வாங்க இருக்கும் 500ரூபாய்க்கே..

4.
ஒரு மழை நாளில் உன்னோடு வந்த போதுதான் உன் சுயரூபம் தெரிந்தது.. கொய்யால புல்லா மேக்கப்

5.
என் காதலியே நீ ஒரு மேகம் போல.. நீ விலகி சென்றாய் என் வாழ்கை பிரகாசம் அடைந்தது..

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, November 7, 2013

உனது பிரியத்தின் வாசனை!....


  

 

 

உனது பிரியத்தின் வாசனை
மடித்து வைக்கப்பட்டிருக்கும்
றங்குப்பெட்டியின்
உட்சுவரில் ஒட்டப்பட்டிருக்கும்
கத்தரிக்கப்பட்ட கவிதைகள்
யாருடையவை?

 

 

ஒரு
உடைந்து போன நிலவும்
மீந்த ஒற்றைக்கொலுசும்
பூட்டி வைக்கப்பட்டிருக்கும் 
பேழை
மனசு

 

 

கோழிகள் கூவித்தூங்கின
எனது நாட்கள்.
நான்
உன் தடம் பற்றி நடக்கையில்.
அலையேந்திப் போயிருந்த
உன் காலடிகளைப் 
பின் தொடர்ந்து
அலைகளுக்குள் நடந்து 
கொண்டிருக்கிறது நிலவு

 

 

முகமற்று
ஒளிரும்
உன் புனனகை மட்டுமாய்
அலைந்து கொண்டிருக்கிறது
எனது
தெருக்களில். …. 

 

 

கவனமற்றுச்
சொற்களை
இறைத்தபடியிருக்கிறேன்
தாள்களில்.
விளிம்புகள் மழுங்கிய அலைகளாய்
தவழும் உன் குரலால்….

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.