வார்த்தைகளால் ஒருவரை மகிழ்ச்சிபடுத்தவோ, வருத்தபடுத்தவோ முடியும். ஓர் உறவை மலரச் செய்யவோ, கருகச் செய்யவோ இயலும். `ஆண்களும் தன்மையான வார்த்தைகளும்' என்பது அபூர்வமான கூட்டணி. அதிலும் கணவன்மார்கள் மனைவியிடம் சர்வ ஜாக்கிரதையாக வார்த்தைகளை பயன்படுத்தாவிட்டால் சிக்கல்தான்.
எனவே, கணவன்மார்களுக்கு உதவும் விதமாக, அவர்கள் மனைவியிடம் கூறக் கூடாத வார்த்தைகள் இங்கே…
`உன்னோட ரசனை மகா மட்டம்'
`எப்படித்தான் இப்படி ஒரு ரசனையை வளர்த்துக்கிட்டியோ?' என்று ஒருபோதும் கூறாதீர்கள். ஆரம்பத்தில் நீங்கள் அப்படிச் சொல்லும்போது லேசாக முகம் சுளிப்பவர், பின்னர் `பளீரென்று' திருப்பி அடிக்கத் தொடங்குவார். மனைவி `சீரியல்' பார்பது பிடிக்கவில்லையா? சத்தமில்லாமல் அடுத்த அறைக்கு நகர்ந்து விடுங்கள்.
` ரொம்ப குண்டாஆயிட்டே'
எந்த பெண்ணும் தான் குண்டாகி விட்டதா கக் கூறப்படுவதை விரும்ப மாட்டார். மனைவி உடம்பு குண்டாகிக் கொண்டிருந்தாலும் அதை `ஒல்லியாகக் காண வேண்டியது' உங்கள் பொறுப்பு.
`உனக்கு சமைக்கவே தெரியல'
உங்கள் அம்மாவின் கைபக்குவமே தனிதான். அவர் சாதாரணமாக புளி காய்ச்சினாலும் ஊரையே வாசனை தூக்கும்தான். ஆனால் உங்கள் இல்லத்தரசியின் சமையலைத்தான் இனி ஆயூசுக்கும் சாப்பிட்டாக வேண்டும். எனவே பாராட்டாவிட்டாலும், குறை சொல்லாமல் இருப்பது உத்தமம்.
`உங்க குடும்பத்தில எல்லாருமே இப்படித்தானா?'
நாசுக்காக அதிருப்தியை வெளிபடுத்தும் மாமனார், மாமியார், நீங்கள் அணிகிற ஆடை முதற்கொண்டு உரிமையோடு எடுத்து பயன்படுத்துகிற மைத்துனன் என்று உங்களின் மனைவி வீட்டார் ஓர் இனிய (?) இம்சை. அதற்காக, `உங்க வீட்டுல எல்லாருமே இப்படித்தானா?' என்றோ, `உங்க அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாருமே `வித்தியாசமா' இருக் கீங்களே!' என்றோ கடுப்பாய் `கமெண்ட்' அடிக்காதீர்கள்.
`உன்னை விட உன் தங்கச்சி…'
`உன்னைவிட உன் தங்கச்சி அழகு, புத்திசாலித்தனம் எல்லாத்திலயும் ஒரு படி மேலே…' என்று சொல்லித் தொலைக்காதீர்கள். (ஜாலியாக பேசுகிற பாணியில் `உண்மையை'க் கூற நினைத்தாலும்!) சில ஆசைகளை மனசுக்குள்ளே போட்டு பூட்டிக்கொள்வது, குடும்பத்தில் கலவரம் வெடிக்காமல் இருக்க உதவும்.
` எங்க அம்மா மாதிரியே இருக்கே'
பாராட்டுவதாக நனைத்துக் கொண்டு கூட, ` எங்க அம்மா மாதிரியே இருக்கே' என்று கூறிவிடாதீர்கள். அது சுயமாக சூனியம் வைத்துக்கொள்வது மாதிரி. போயும் போயும் `மாமியாருடனா' ஒப்பிடுவது?
`அச்சு அசலாக அவளை மாதிரியே …'
என்னதான் நீங்கள் உங்கள் பழைய காதலியை (இருந்தால்!) பற்றி பக்குவமாக மறைத்துவந்தாலும், `அவளை பற்றிக் கூறு… கூறு…' என்று உள்ளுக்குள் இருந்து ஒரு சாத்தான் கூக்குரலிட்டுக்கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு பலவீனமான தருணத்தில், `நீ அப்படியே அந்த சுதா மாதிரியே இருக்கே…' என்று உளறிவிட்டால்,
கண்ணிவெடி பரப்புக்குள் கால் வைத்தவன் கதைதான்.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment