பட்டாம்பூச்சியின் வண்ணச்சிறகில் கைகள் கோர்த்து அமர்ந்திருக்கிறோம் நாம். வானமெங்கும் சுற்றித்திரிந்த பட்டாம்பூச்சி பூவொன்றின் இதழ்களில் உன்னை இறக்கிவிடுகிறது. பூவுக்குள் ஓடி மறைகிறாய் நீ. பூக்களின் பெயர்க்காரணத்தை உலகிற்கு அறிவிக்கிறேன் நான்! ஓடிவந்து என் கழுத்தைக் கட்டிக்கொண்டு உன் கன்னம் உரச நீ பேசும்பொழுதெல்லாம் விதவித வண்ணங்களாய் என்னுள் பெய்கிறது மழை. உனக்கு பிடித்த மண்வாசத்தில் நீயும் எனக்கு பிடித்த உன்வாசத்தில் நானும் ஒற்றை குடைக்குள் விரல்கள் கோர்த்து மெளனித்து நடக்கிறோம். விரல்களின் ஸ்பரிசத்தில் வலுக்கிறது காதல்மழை. சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் முத்தைப்போல் உன் கன்னக்குழிக்குள் ஒளிந்திருக்கிறது எனக்கான காதல்புன்னகை! |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment