Followers

திருக்குறள்

Thursday, October 14, 2010

நிராகரிப்பின் வலி....



கண்ணுக்குள் விழுந்துவிட்ட
தூசி நீ.
உன் உறுத்தலும் கூட
உரிமை என்றே எண்ணித்தவிக்கிறது
என் இதயம்.

பூக்கள் பறிக்கும்
சிறுமி என்ற மகிழ்வுடன்
உன் கைகளில் விழுந்து
துடிக்கிறது
என் இதயப்பூ.

தவிர்த்தலுக்கென்றே ஒரு
பார்வை வைத்திருக்கிறாய்
நீ.
தவிப்பதற்கென்றே ஒரு
இதயம் வைத்திருக்கிறேன்
நான்.

நிராகரிப்பின் வலி
உணரவேண்டுமா?
என்னைக் காதலிக்கிறேன்
என்று சொல்.
பதிலேதும் பேசாத மெளனத்தால்
உணர்த்துகிறேன்

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.