Followers

திருக்குறள்

Tuesday, October 5, 2010

மன்னித்து விடுகிறேன்............


 

உன்

கோபங்களை

தாபங்களை

மன்னித்து விடுகிறேன்

முத்தத்தால்

நீ முடிப்பதானால்!

*

புல்லாங்குழல்

அழுவதாகவே

இருக்கின்றது...

நீ வரும் நாட்களில்

மட்டுமே அது

இசையாய் வழிகிறது!

*

மலர் பறிக்கையில்

மேல் விழுந்து

சிலிர்ப்பூட்டும்

பனித்துளியாய்

உன் நினைவு!

*

கை பிரித்து

அவரவர் திசையில்

முன்னேறுகிறோம்...

இன்னும்

பூங்காவில்

முதுகோடு முதுகு

சேர்த்தபடிபேசிக்

கொண்டிருக்கின்றன

இதயங்கள்!

*

என் பார்வைக்கெதிரே

தளிர் இலையொன்று

பழுத்து வர்ணம் மாறி

உதிர்கிறது!

நீ வருகிறாய்

உதிர்ந்திட்ட அவ்விலை

மீளவும் மரம் பொருந்தி

பச்சையாக தொடங்குகிறது!

*

சில முடிகள்

வெளுத்துவிட்டன

தேகம் பலவீனமடைந்து விட்டது

தோல்கள் சுருக்கம்

கண்டுவிட்டன என்றாலும்

என்ன இப்போதும்

காதலின்

குழந்தைகள் நாம்!

*

காதல் பாதையில்

விழி மூடியபடி

பயணிக்கிறேன்

வழிகாட்டியபடி

துணைவருகிறது

உந்தன்

விழியின் ஒளி!

*

உன்னைவிட்டு

பிரிந்து நடக்கும்

தருணங்களில்

என் சவத்தை

நானே சுமந்து

தொடர்கிறேன்!

*

மரணம்

ஒத்த

தூக்கமதிலும்

கேட்டபடியே

இருக்கிறது

உந்தன் விழி

படபடக்கும்

சப்தம்!

*

கொஞ்சினால்

மிஞ்சும்

மிஞ்சினால்

கொஞ்சும்

காதலும்

குழந்தைதான்!
 

 

 



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.