Followers

திருக்குறள்

Tuesday, October 5, 2010

ச‌ந்திப்போமாக‌!

நிலவின் மடியில்
அமைதியான இரவில்
அருமையான நினைவுகளுடன்
என் பயணம்.

சின்ன சின்ன சந்திப்புகளும்
சட்டென எழுந்த சிரிப்புகளும்
சில்லென ஆனந்தத்தை
என்னுள் விதைத்து செல்கிறது...

ஆங்காங்கே சிதறிக் கிடக்கும்
அற்புத உணர்வுகளையும்
சில்லரையாய் விளைந்த நட்புகளையும்
இங்கே
இட்டும் இடாமலும்
என்னுடன்
விட்டும் விடாமலும்
எடுத்துச்செல்கிறேன்...

எங்கேனும் ஒர் இடத்தில்
என்றேனும் ஒர் நாள்
ச‌ந்திப்போமாக‌!

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.