Followers

திருக்குறள்

Thursday, October 7, 2010

நீ ....




 
என்னையறியாமல்
உறங்கியபோது
நீ வந்தாய் !
இமைகளைத்தாண்டி
வெளியேறியது
கண்கள் ....

***********************
வருகின்ற
அலைகளுக்குத்
திரும்பிபோக
மனசில்லை
கடற்கரையில்
நீ ....


***********************
நீ
பூசிக்கொண்டாய்
புனிதமானது
திருநீறு


*********************
இதுவரை
முடிந்து போன
என்
ஒவ்வொரு
ஜென்மத்தின்
மரணத்தின்
போதும்...
அடுத்த
ஜென்மத்திலாவது
உன்னோடு
வாழ வேண்டும்
என்று
வேண்டிக்கொண்டுதான்
செத்தேன்..


இந்த
ஜென்மத்தில்
முடிவெடுத்து
விட்டேன்
இறப்பதேயில்லை
என்று



************************
உன்னோடு
வாழாத
நாட்களை
வரவுவைக்க
மறுக்கிறது
வாழ்க்கை

 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.