மவுனம் சூழ்ந்த
இரவொன்றில் பிரியங்கள்
மறைத்து நீயும், நானும்,
தவற விட்ட
குழந்தையாய் அலைகின்றன,
சமாதானத்துக்கான
சொற்கள்.
நிசப்தம் எரித்து
கண வெளிச்சத்தில்
உன்னை என்னில்
ஆழச் சொருகினாய்,
பொங்கி வழிந்தோடியது
என் ரணத்தில்
வழிந்த உன் கண்ணீர்!
என் குருதியை
அள்ளியெடுத்து
என் வர்ணங்கள்
படர்ந்த உன் உடலைக்
கழுவிக்கொண்டாய்!
மெதுவாக
வெளியேறிச் சென்றாய்
உடைந்து
சில்லுகளாய்ச்
சிதறிக்கிடந்த
நம் காதலின் மேல்!
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment