Followers

திருக்குறள்

Tuesday, October 5, 2010

என் அன்னைக்கு !!!



 

 


உன் விரல் பிடித்துச் சென்ற பாதைகள்!
உன் சேலையில் முகம் புதைத்த நாட்கள் !
உன் மடியில் கழிந்த தூக்கங்கள் !

எல்லாம் மீண்டும் கிடைக்காதா?

என்றே
ஏக்கம் பிறக்கும் தினமும்!
பலரும் பார்க்க,வியக்க மிகச்
சரியாய் வளர்த்தாய் என்னை !
வாழ்க்கை வாளின் கூர்மைகள்

பலவும் உன்னை குத்தி இம்சித்தும்
எள்ளளவும் அவை எனை அணுகாது
வழி தடுத்தாய் நீ !
தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!
உனக்கென ஓர் லட்சியம் உண்டெனில் அது
என் ஆசைகளை நிறைவேற்றுவதாகத்தானிருந்தது.
உன் ஆசைகள் பலவும்

எரிந்து மட்கித்தான் என் ஆசை மலர்கள் மலர்ந்தன

என்று
முன்பு அறியவில்லை நான் !
நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர்
ஒன்று உண்டென்றால் அது நீதான் !
நீ உணவை பரிமாறி உண்ணவில்லை நான்,

மாறாக
உன் அன்பை பரிமாறினாய் உண்டேன் !

வளர்ந்தேன் !

உலகிலேயே தித்திப்பான கனி எது என்று
எனைக் கேட்டால்

தயங்காமல் சொல்வேன் நீதானென !
ஆம்!

கனி தான் தின்னத் தின்ன
திகட்டாத கனி !

 

 

 



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.