உன்னோடு வாழ்வதற்கும்
உன் நினைவோடு வாழ்வதற்கும்
சிறு வித்தியாசம்தான்...
உன்னோடு வாழ்தல்
வரம்.
உன் நினைவோடு வாழ்தல்
தவம்.
அடிபட்டு விழுந்த
பறவையென துடிதுடிக்கிறது
என் சிறகுகள்.
எவ்வித சலனமின்றி
காற்றோடு பயணிக்கிறது
உன் சிறகுகள்.
கடும் கோடையிலும்
ஈரமாகத்தானிருக்கிறது
என் தலைமுடி பற்றி
இழுத்தணைத்து நீ
தந்த ஒற்றைமுத்தம்
நீ பிரிந்த நாளில்
எனக்கென்று ஒரு
பிரபஞ்சம் உருவானது..
அங்கே என்னைத் தவிர
யாருமில்லை.
வேட்டை நாயின்
வாயில் சிக்கிய முயலாய்
இரவு என்னைக்
கவ்விக்கொள்கிறது
உதிரமென வடிகிறது
கண்ணீர்
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment