உண்மை சொன்னால் சிரிக்கிறாய்
பொய் சொன்னால் வெக்கப்படுகிறாய்
இதனால்த்தான் என் உயிர் எழுத்துக்களும்
அடிக்கடி மெய் எழுத்துகளாக மாறுகிறது
*
உன் வெக்கத்தை படம் பிடிக்க ஆசைதான்
என்ன செய்ய இதுவரை என்னை
எடுக்க விட்டதில்லை உன் வெக்கம்
*
நிச்சயமாய் உன் வெக்கத்தை யாரிடமும்
கற்றுக் கொண்டிருக்க மாட்டாய்
ஏனெனில் என்னிடம் மட்டும்தானே
நீ வெக்கப் படுகிறாய்
*
நான் என்னைப் பற்றி சொன்னால்
ரசிக்கிறாய் உன்னைப் பற்றி சொன்னால்
வெக்கப் படுகிறாய் ஆகா உன் வெக்கத்துக்கும்
பழக்கி விட்டாயா உன் சுயநலத்தை
*
நான் மயிலே மயிலே என்று அன்பாய் கூப்பிட்டாலும்
மயில் இறகு போட்டதில்லை ஆனால் நான் ஆசையாய்
உன் பெயரை கூப்பிட்டால் போதும் அடடா
நீ அழகாய் வெக்கப்படுவாய்
*
என்னைக் கண்டதும்
வெக்கப் படுகிறாய்
நீ வெக்கப் பட்டதும்
நான் காணாமல் போகிறேன்
*
என் காதுகள் பொய் சொல்லலாம்
என் கண்கள் பொய் சொல்லாது ஆமாம்
உன் வெக்கம் பேசியதில்லையே
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
No comments:
Post a Comment