Followers

திருக்குறள்

Tuesday, October 5, 2010

வெக்கம் பேசியதில்லையே



 

உண்மை சொன்னால் சிரிக்கிறாய்
பொய் சொன்னால் வெக்கப்படுகிறாய்
இதனால்த்தான் என் உயிர் எழுத்துக்களும்
அடிக்கடி மெய் எழுத்துகளாக மாறுகிறது

*

உன் வெக்கத்தை படம் பிடிக்க ஆசைதான்
என்ன செய்ய இதுவரை என்னை

எடுக்க விட்டதில்லை  உன் வெக்கம்

*

நிச்சயமாய் உன் வெக்கத்தை யாரிடமும்
கற்றுக் கொண்டிருக்க மாட்டாய்
ஏனெனில் என்னிடம் மட்டும்தானே
நீ வெக்கப் படுகிறாய்

*

நான் என்னைப் பற்றி சொன்னால்
ரசிக்கிறாய் உன்னைப் பற்றி சொன்னால்
வெக்கப் படுகிறாய் ஆகா உன் வெக்கத்துக்கும்
பழக்கி விட்டாயா உன் சுயநலத்தை

*

நான் மயிலே மயிலே என்று அன்பாய் கூப்பிட்டாலும்
மயில் இறகு போட்டதில்லை ஆனால் நான் ஆசையாய்
உன் பெயரை கூப்பிட்டால் போதும் அடடா
நீ அழகாய் வெக்கப்படுவாய்

*

என்னைக் கண்டதும்
வெக்கப் படுகிறாய்
நீ வெக்கப் பட்டதும்
நான் காணாமல் போகிறேன்

*

என் காதுகள் பொய் சொல்லலாம்
என் கண்கள் பொய் சொல்லாது ஆமாம்
உன் வெக்கம் பேசியதில்லையே

 

  

 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.