Followers

திருக்குறள்

Thursday, November 25, 2010

நேசிக்க…நீ மட்டும்தான்!


 

"எனக்கு உன்னைப்போல

கவிதையெழுதத் தெரியாது' என்கிறாய்.

எனக்கும்தான்

உன்னைப்போல

கவிதை பேசத் தெரியாது!

 

*

 

கல்லூரியில் கூட

யாரையும் பார்த்து

தேர்வெழுதியதில்லை...

காதலில் மட்டும்

உன்னைப் பார்த்துதான்

கவிதையெழுதுகிறேன்....

 

*

 

கவிதையெழுதுவதில்

என் விரல்களை

வென்றுவிடுகின்றன

உன் இதழ்கள்!

 

*

 

நீ கையொப்பமிட்டு தரும்

எந்தப் புத்தகமும்

கவிதைப் புத்தகம்தான்!

 

*

 

இப்படி வாசிக்க…

ஆயிரம் கவிதைகள் இருக்கின்றன.

நேசிக்க…நீ மட்டும்தான்!

 
 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.