Followers

திருக்குறள்

Tuesday, May 24, 2011

தாய் பாசம்..........

     
 
      கொழுத்து நான் நின்றாலும் 
      உன் கண்ணிற்கு மட்டும்
      மெலிந்துப் போனதேனோ;

      கருமை என்று  எல்லோருடைய
      நாவும் என்னை நலம்
      காணும் போது;

      அள்ளி அணைத்து;
      கிள்ளி உரைக்கும்
      உன் நாவு எனை
      அழகு என்பதேனோ;

      புசிக்கும் வயிற்றுக்குப்
      பசிக்கவிட்டாலும்;
      படையெடுக்கும் உன் கரம்
      எனக்காக உணவுத் தேடுவதேனோ;

      அனலாய் காய்ச்சல்
      வந்தாலும் எனை
      அணைத்துக் கொண்டு
      உன் விரல் என் முடிக்கு
      மகுடி வாசிப்பதேனோ;

      சினம் வந்து ;
      தடம் மாறும்
      உன் குணத்தால்;
      தடம் பாதிக்கும் உன் விரல்
      என் முதுகில்;

      வேறு யாரும் எனை
      முறைக்கும் போது;
      கடிக்கும் பார்வையால்
      தடிக்கும் வார்த்தையால்;
      எனக்கு கவசமிடுவதேனோ;

      இனம்புரியாத பாசத்தால்;
      இனம் காக்கும் உன் அன்பு
      இனிப்பதேனோ;

      இனிக்கும் தேனும்
      உனைப்பற்றி  உரைக்கும் போது
      முடிவாய் வருவதேனோ!
 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.