Followers

திருக்குறள்

Wednesday, June 1, 2011

கவன ஈர்ப்புத்தீர்மானம்

என் வளையல்களின்
மாநாட்டில்
அவன்
கவன ஈர்ப்புத்தீர்மானம்
ஒருமனதாய்
இருமனதால்
நிறைவேற்றப்பட்டது
**
இனி உடைபடும்
வளையல்களுக்காய்
நீ வருந்தவேண்டாம்
அவை இந்நேரம்
மோட்ஷம் அடைந்திருக்கும்
**
வளையல்
ஏன்டா பிடிச்சிருக்கு??
உன் முத்தத்தின்
சத்தம் மறைக்கும்
ஆயுதம் என்பதாலா??
**
என் உடையாத
வளையல்களுக்கு
முத்தம் தராதே
உடைந்த
வளையல்களின்
சத்தம் தாங்கமுடியவில்லை
**
உன்னிடமிருந்து
உதிர்ந்து விழுந்த
முத்தத்திற்கு
மௌன அஞ்சலி
செலுத்தின
உடைந்த
என் வளையல்கள்
**
உன் மீது
நான் கொண்ட
காதலைப் போலவே
கணக்கிலடங்காதவை
நமக்காக உடைந்த
என் வளையல்களும்
 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

தமிழ்த்தோட்டம் said...

அருமையான கவிதை பாராட்டுக்கள்

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.