Followers

திருக்குறள்

Thursday, September 1, 2011

முடியாது என்று தெரிந்தும்

நான்
நானாக இருக்க
முக்கியகாரணம்
நீதான்……

………………………………………………

ஜீபூம்பா மாதிரி
நேரங்களும்
நொடிகளும்
நிமிடங்களும் செல்கின்றன…
உன்னோடு நான் பேசுகையில்….
……………………………………………………..

எத்தனை தவறுகள் செய்தாலும்
உன்னிடம் மட்டும், நான்
உண்மையாகவே
இருக்கவிரும்புகின்றேன்…..

……………………………………………………….

முடியாது என்று தெரிந்தும்
விடாமுயற்ச்சியுடன்
என்னையும் அழகு படுத்து
முயற்ச்சிப்பவள் நீதான்….

……………………………………………………
நீ
எனை தொட்ட
நொடிகளில்
லேடிஸ் பிங்கரின் அர்த்தம்
முழுதாய் விளங்கியது…

…………………………………………………..

எதைகண்டு
மயங்கினாய் என்னிடம்?
லேசானநகைச்சுவையும்,
பளிர்சிரிப்பையும் தவிர,
என்னிடம் என்ன இருக்கின்றது???
………………………………………………………..

சில நேரங்களில்
பயங்கர கோபம்வரும்
உன்மீது….

உன்னைஅழ வைக்க
எனது மனம் கணக்கு போடும்…

சாத்தியமில்லாத செயல், என்று
சிரிக்கின்றது…
எனது மனசாட்சி…

…………………………………………………..

மாதத்தில் இரண்டு பீரை
ஒன்றாக குறைத்த சர்வாதிகாரி
நீதான்….

…………………………………………….

நீ
நானாக இருப்பதால்,
நான் நானாக இல்லை…

……………………………………………..
உன்னிடம் மட்டும்
முடியாது என்று தெரிந்தும்…
முடியும் என்று ,
பந்தயம் கட்டுகின்றது
என் இளகிய மனது…

………………………………………………
நீ
என் மடியில்
தலைசாயும் போதுதான்..
பல
கூடுதல் பொறுப்புகள்
நினைவுக்கு வந்து தொலைக்கின்றன….

………………………………………………….

அரைமணிநேரம்
என்வாயில்
அரைபட்ட
சூயிங்கம் கூட
உனக்கு அல்வாதான்….

…………………………………………………….

கண்ணெதிரே
கூடுதல் சுவை சேர்க்கபட்டது
நீ
கடித்து கொடுத்த,
சாக்லெட்டில்…

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.