Followers

திருக்குறள்

Thursday, September 1, 2011

யாராலும் தடுக்கமுடியாத நிலையில்…!!!


பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையில்
வாழ்வின் சில குறியீடுகளாக
காதல்…!
தொலைவாகிப்போகும்
புள்ளிகளாக…
ஒரு விளிம்பில் நான்

மறுவிளிம்பில் அவள்

காலங்கள்
கனவாய்ப் போனபின்
நெருப்பில் நின்றுகூட
நீ…
அழக்கூடும்…!
கண்ணீரைப்போலவே
காதலும்
கணத்தின்பாதியில்
உன்…
கண்முன்னே கருகக்கூடும்…!

ஒரு இனந்தெரியாத இராகம்
நரம்புகளில் வீணைமீட்ட
ஒரு மர்மசோகம்
ஓடிவந்து மனசைத்தாக்க
அப்போது…
யார் அழுவார் – உன்
நெஞ்சின் சோகம் தீர்க்க…???

பூக்களுக்கும் முட்களுக்கும்
இடையில்…
சிறியதூரம்தான்
சில சமயங்களில்…
முட்களின் தூரம்வரைத்தான்
உன்னால் பயணிக்கமுடியும்
காயங்களுக்கு நடுவில்
பிரிவுகளும்…
சிலநேரம் வசப்படலாம்
யாருடைய பிரிவையும்
யாராலும் தடுக்கமுடியாத நிலையில்…!!!



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.