Followers

திருக்குறள்

Sunday, October 2, 2011

உன் மடி


எத்தனை முறை
வேண்டுமானாலும்
குழந்தையாகலாம்
உன் மடி கிடைக்கும்
என்றால்

*

சொர்கத்தில் இருக்கும்
என் காதலைத்தான்
உனக்கு கவிதையாய்
தருகிறேன் அதை நீ
தெரிந்தோ
தெரியாமலோ
கிழித்தெறிந்து
சாகடித்துவிடுகிறாய்

*

நான் ஆனந்தக் கண்ணீரை
கவிதையாக்கினாலும் எப்படியோ
வந்து அழுதுவிட்டு போய்விடுகிறாய்
என் வாசகர்களை அழவைக்க

*

என்னை விட்டு போனாலும்
நீ அழுது கொண்டே போனதில்தான்
உணர்தேன் எனக்காகத்தான்
பிரிந்திருப்பாய் என்பதை

*

நீ
பிரிந்தும் சேவை செய்கிறாய்
என் கவிதைகளால்
பல காதலர்களை
சேர்த்து வைக்கிறாயே

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.