Followers

திருக்குறள்

Saturday, March 24, 2012

நீ எழுந்து போன பின்.....

 
அமைதியாய்
என்னைக்கடந்து செல்கிறாய்....
அமர்க்களப்படுகிறது
என் இதயம்.........





தினம் தினம்
அழகை அதிகரித்து கொள்கிறது
நகர பேருந்து
நீ ஏறி வருவதால்..........


 
தங்கச் சரிகையில்
வெள்ளி நிலா!
ஓணத்து பட்டு புடவையில்
நீ!




சிரிக்கிறயா?
என்னை
சிதறடிக்கிறாயா?



உன் விழி
அம்புகள்
என் இதயத்தில் பாய்ந்தன...
உதிரமாக வழிகிறது
காதல்.......




தேர் உலாவால்
விழா ஊருக்கு.....
தேவதை உன் உலாவால்
திருவிழா எனக்கு...



 

உன்னை அலங்கரிப்பதாய்
நினைத்து கொள்கிறாய்
உண்மையில் தங்களை
அலங்கரித்து கொள்கின்றன
அணிகலன்கள்..



கோவிலை சுற்றுகிறாய்...
உன்னை சுற்றுகிறேன்...
நோக்கம் இருவருக்கும் ஒன்றுதான்
அம்மன் அருள்!



தூரத்தில் கடக்கும் போதும்
தூரல்களாய் உன் பார்வை
தளிர்க்கிறது என் காதல்..



உன்னோடு பேச
நான் கற்றுக்கொண்ட
ஒரே மொழி
மெளனம்.
சில நேரங்களில்
பார்வைகள்..


கொடி கட்டுவதற்காக
கொல்லையில் வளர்ந்தது
சாதாரன தென்னை தான்.
ஆனால் உன் தாவனி
காய்ந்ததில் காய்த்தது
அனைத்தும் செவ்விளனியே...

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.