Followers

திருக்குறள்

Saturday, May 26, 2012

முத்தம் போர்த்திவிடு வா…

 
நினைவுகளை தலையணையாக்கி

உறங்கிய நாளில்

கனவெல்லாம்

உன் வாசம்!

*

இதயத்தின் சுவரெங்கும்

நிறைகிறாய்

பின்னிரவின் மீது

பற்றி படர்ந்து விரியும்

மெல்லிசையென!

*

எதிர் எதிர் வந்தபோது

என் நிழலோடு உரசிக் கொண்டதற்கே

வெட்கத்தில் சிவந்துபோகிறது

உன் நிழல்!

*

உயிரெங்கும்

குளிர் ஊசி -

முத்தம் போர்த்திவிடு வா

*

உயிர் பட்டத்தின்

கயிறு

உன் கைகளில் -

பத்திரபடுத்துவதும்;

விட்டுவிடுவதும்;

உந்தன் இஷ்டம்!

*

பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்,

என்னுள்

காதல் இன்று

செல்லாக் காசாகிவிட்டது

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.