Followers

திருக்குறள்

Thursday, November 7, 2013

உனது பிரியத்தின் வாசனை!....


  

 

 

உனது பிரியத்தின் வாசனை
மடித்து வைக்கப்பட்டிருக்கும்
றங்குப்பெட்டியின்
உட்சுவரில் ஒட்டப்பட்டிருக்கும்
கத்தரிக்கப்பட்ட கவிதைகள்
யாருடையவை?

 

 

ஒரு
உடைந்து போன நிலவும்
மீந்த ஒற்றைக்கொலுசும்
பூட்டி வைக்கப்பட்டிருக்கும் 
பேழை
மனசு

 

 

கோழிகள் கூவித்தூங்கின
எனது நாட்கள்.
நான்
உன் தடம் பற்றி நடக்கையில்.
அலையேந்திப் போயிருந்த
உன் காலடிகளைப் 
பின் தொடர்ந்து
அலைகளுக்குள் நடந்து 
கொண்டிருக்கிறது நிலவு

 

 

முகமற்று
ஒளிரும்
உன் புனனகை மட்டுமாய்
அலைந்து கொண்டிருக்கிறது
எனது
தெருக்களில். …. 

 

 

கவனமற்றுச்
சொற்களை
இறைத்தபடியிருக்கிறேன்
தாள்களில்.
விளிம்புகள் மழுங்கிய அலைகளாய்
தவழும் உன் குரலால்….

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.