Followers

திருக்குறள்

Friday, November 15, 2013

நான் ஒரு பக்கம்

நீ பறித்து சூட
பூத்திருக்கிறது
என்னுள் காதல்!
*
குடை விட்டெறி!
உன்னில்
நனைந்திடத்தான் பொழிகிறது
மழை.
*
காய்வதேயில்லை!
நீ தந்த
முத்தங்களின் ஈரம்!
*
காதுகளுக்கு
உன் பேச்சிசை!
கண்களுக்கு
உன் பேரழகு!
நாசிக்கு
உன் சுகந்தம்!
தேகத்திற்கு
தொடுகை!
என்ன பாவம் செய்தது
உதடுகள் மட்டும்;
வா!முத்தமிட்டுப் போ!
*
நான் ஒரு பக்கம்
உன் உடைந்த 
கண்ணாடி வளையல் துண்டுகள்
ஒரு பக்கம்!
சமனாகி விடுகிறது
காதல் துலாபாரம்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.