Followers

திருக்குறள்

Sunday, October 10, 2010

முடிந்துபோகும் நம் பேச்சு!

கரையோரம் துள்ளும்
தங்க மீனாய்
ஆற்றின் ஓரம்
தோழியர் படைசூழ
தண்ணீருக்கு அடியிலும்
மேலுமென கழித்திருப்பாய்
வாரயிறுதி நாட்களை!

 

உனை இருநாள்
காணாமல் போனால்
இருண்டிடும் கண்களென
மனம் பகர
கால் முந்த
எத்தோச்சையாய் வருவதாய்
சமாதானம் சொல்லி
கடந்து நான்
அழகு கடத்திப் போகும்
அந்நாட்களில்
ஒரு புன்முருவல் பகிர்வோடு
முடிந்துபோகும்
நம் பேச்சு!

 

தொட்டுக் கொள்ள
உப்பும் மிளகாயும்
தின்றபின் சுவைக்கூட்ட
ஆற்று தண்ணியுமென
தோழியர்களுடன் நீ
குழுமியிருந்த நாளொன்றில்!

 

வழமைப் போல்
கண் பேசி
கடந்தவனை
இழுத்து நிறுத்தினாய்
'நெல்லிக்காய் சாப்பிடுகிறாயா?' எனும்
கேள்விக் கொக்கியால்!

 

அழகு
களவாட வந்தவன்
கண்கயிற்றாய் கட்டுண்டு
சொன்னேன்
'ம்!' அதுவே
ம் அவ்வளவே பதில்!


அதுவே முதலில் உன்னிடம்
பேசிய சொல்லும் கூட!
ஒற்றை எழுத்தானாலும்
ஓராயிரம் முறை
உயிர் சிலிர்த்திட
அதுவே போதுமானதாயிற்று!

 

இருந்த ஒற்றை
நெல்லிக்காயினை
ஓரக்கடி கடித்து தந்தாய்!

 

நெல்லிக்காய் தின்று
தண்ணீர் குடித்தால்
தொண்டைக்குழி இனிக்குமென்பது
அதுவரை கண்ட அனுபவம்!


ஆனால்
கடித்த பாகத்தின் ஓரம் ஒட்டிய
உன் எச்சில் திவலைகளை குடித்து
உயிரெல்லாம் இனித்தது
அன்று கொண்ட புது அனுபவம்!
 

 

 

 

 

 
 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.