Followers

திருக்குறள்

Thursday, October 7, 2010

அலைந்து கொண்டிருக்கிறது.........


உத்தரவின்றி
உள்ளே வந்து விட்டு
உரிமையோடு
அலையும்
பூனைக்குட்டியைப் போல

 

அறைக்குள்
உலாவிக் கொண்டிருக்கிறது
அவளின் மூச்சு!

 

உறுப்புகளின் உரசல்களுக்கு
ஏங்கித் தவிக்கும்
பருவமாய்

 

ஏதேதோ நினைவுகள்
ஏங்கவைக்கும் கனவுகள்

 

கடமை!
கண்ணியம்!
கட்டுப்பாடு!

 

எங்கோ
எதற்கோ
யாரோ
கூவுகிறார்கள்!

 

உணர்ச்சிகளில்லாப்
புணர்ச்சிகள் போல்
நுகர்வோர்
இல்லாமல்
அலைந்து கொண்டிருக்கிறது
அவள் விட்டுச் சென்ற
மூச்சு!
 

 

 
 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.