Followers

திருக்குறள்

Tuesday, October 5, 2010

வலி வந்தால் நாம் ஏன் அலறுகிறோம்?

 

 

திடீர்னு வலி வந்தா உடனே நாம ஏன் அலறுகிறோம்?

படம்:sodahead.com

இந்தக் கேள்விய உங்ககிட்ட கேட்டா, உடனே நீங்க "ஆஹா…..இது அவன் இல்லன்னு,  குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டு குடையுற பார்த்திபன பார்த்து தெறிச்சி ஓடுற வடிவேலு" மாதிரி ஓடினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லன்னு நான் நெனக்கிறதுனால, நானே இந்தக் கேள்விக்கு பதில் சொல்லிடுறேன்!

நாம ஒரு சாலையில அவசர அவரமா நடந்து போய்க்கிட்டு இருக்கோம், திடீர்னு ஒரு கல்லுல மோதி நம்ம கால் கட்டைவிரல் நகம் உடைஞ்சி ரத்தம் வரும்போது "சுரீர்" ஒரு வலி வரும் நமக்கு! உடனே நாம, (வலி தாங்க முடியலைன்னா, இடம்,  பொருள், ஏவல் இப்படி எதுவுமே பார்க்காம) "அம்மா……ன்னு" அலறிடுவோம். உடனே நம்மள சுத்தி இருக்குறவங்க என்ன ஏதுன்னு, பதறிடுவாங்க. இல்லீங்களா?  பொதுவா இடம், பொருள் ஏவல்னு எல்லாத்தையும் பார்த்து, இங்கே கத்தலாம்/இங்கே பேசக்கூடாதுன்னு நிதானமா யோசிச்சு உணர்ச்சிகள வெளிப்படுத்துற நாம வலி வந்தா மட்டும் ஏன் அப்படி அலறுகிறோம்?

ஏன்னா, அர்த்தமில்லா மொழியான அலறல், புன்னகை, சில சைகைகள்  (இன்னும் பல உண்ர்ச்சிகள்னு) இப்படி எல்லாமே  பரிணாமம் நமக்கு கொடுத்த ஒரு கருவியாம்! (முக்கியமா, ஊனமுற்றோருக்கு/வாய்பேச முடியாதவர்களுக்கு!). ஒரு நல்ல உதாரணம் சொல்லனும்னா, குழந்தைகளுக்கு தினந்தோரும் சில சிராய்ப்புகள், அடிகள்,  தவறி தாங்களே கீழே விழுதல் இப்படி எதாவது ஒரு பிரச்சினை (பெரியவங்களுக்கு தெரியாம) ஏற்படும். அதிலிருந்து குணமும் அடைஞ்சிடுவாங்க. ஆனா, சில சமயத்துல அழுவாங்கப் பாருங்க…..யப்பா! ஒன்னுமே இல்லாத ஒரு சின்ன விஷயத்துக்கு "ஊரே ரெண்டு படுற மாதிரி பெருங்குறலெடுத்து அழுவாங்க". எப்படி ஓய்ச்சினாலும் ஓயவே மாட்டாங்க!

குழந்தையோட அம்மா/அப்பாவுக்கு முழி பிதுங்கிடும் அவங்கள சமாதானப் படுத்துறதுக்குள்ள. ஆனா, வேடிக்கை என்னன்னா சில/பல பெரியவங்களும் (நாமதான்!) இப்படித்தான் அலறுவாங்களாம் அடிபடும்போது. காரணம் என்னன்னா, ஒரு அங்கீகாரத்துக்காகவாம். அதாவது, "எனக்கு அடிபட்டுடுச்சே…..பாருங்களேன்" அப்படீன்னு உலகத்துக்கு தெரியவைக்கிறதுக்காகவாம்!

கடந்த 2003-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வுல, மக்களில்  "ஹை கெட்டாஸ்ட்ரோஃபைசர்ஸ் (high catastrophizers)" அப்படீன்னு சொல்லக்கூடிய ஒரு சிலருக்கு, "தம்மைச் சுற்றி மக்கள் இருந்தபோது"  (தாங்கமுடியாத வலி காரணமான ) ஏற்பட்ட அலறல்கள் நீண்ட நேரம் நீடித்தது அப்படீன்னு கண்டுபிடிச்சிருக்காங்க! இதிலிருந்து என்ன தெரியுதுன்னா, நாம் (மக்கள்) அலறுவதற்க்கு ஒரு முக்கிய காரணம் "சார்புத்தன்மையையும் (dependency)  அதனால் உருவாகும் ஆதரவான சூழ்நிலையையும் (communal coping)  ஏற்படுத்திக் கொண்டு நம்மை நாமே காத்துக் கொள்ளவே" என்பதாக இருக்கலாம்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்!

அப்பாடா….ஒரு வழியா வலி வந்தா நாம ஏன் அலறுகிறோம்ங்கிறத விளக்கி முடிச்சாச்சுப்பா?!

மக்களே…..இது பத்தி நீங்க எதாவது சொல்ல/கேட்க நெனச்சீங்கன்னா, சிரமம் பார்க்காம ஒரு மறுமொழி எழுதிட்டுப் போங்க. சரிங்களா? :-) ;-) 
 

 



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.