Followers

திருக்குறள்

Wednesday, October 6, 2010

தப்புக்கள் நான் செய்தால்


 

அன்புக்கு இலக்கணமாய்
இருப்பவளே என் அன்னை………..!

~

பத்து மாதம் கருவறையில்
பத்திரமாய் எனை சுமந்தாய்……!
இன்று பூமியிலும் நான் வாழ
என் உடலுக்கு உயிர் கொடுத்தாய்…………!

~

பசி என்று நான் அழுதால்
உணவூட்டி நீ மகிழ்வாய்…………..!
தாலாட்டி உறங்கவைத்து
தமிழ் உணர்வூட்டி வழர்த்தவளே……..!

~

உன் கை பிடித்து
நடக்க வைத்தாய்…….!
அன்பு என்னும் சோலையிலே
ஆழ வந்த றாணி என்றாய்…….!

~

தப்புக்கள் நான் செய்தால்
திட்டி என்னை அடித்ததில்லை………!
பத்திரமாய் எடுத்து சொல்லி
தப்பையும் திருத்திடுவாய்……….!

~

கண் விளித்து நான் படித்தால்
துணையாக நீ இருப்பாய்………!
சோகம் என்று சோர்ந்தாலும்
அன்பாலே அரவணைப்பாய்………..!

~

கேட்டதெல்லாம் மறுத்ததில்லை
இருந்தும் உன் அன்பை தவிர
வேறு எதுவும் தேவையில்லை……..!

~

உந்தன் மடி வேனும் அம்மா
உறங்கி நானும் நாளாச்சு………..!

~

தாய்மை என்னும் உலகில்
தவமாய் கிடைத்த என் தாயே………..!

~

உன் மகளாய் பிறந்து மீண்டும்
உன் மடியில் தவந்து
உண்மையான உன் அன்பில்
வளர நானும் வரம் கேட்பேன்………!



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.