ஒன்றாக பிறந்ததில்லை
ஒரு வீட்டில் வளர்ந்ததில்லை………….!
குரல் கூட கேட்டதில்லை
கோபமாய் பேசியதில்லை…………!
முகம் கூட பார்த்ததில்லை
முகவரியும் கேட்டதில்லை……….!
~
சோகம் என்று தோள்
சாய்ந்ததில்லை-இருந்தும்
சோகத்தை சொல்லாமல் விட்டதில்லை………………..!
~
மனதாலே எப்போதும்
வெறுத்ததில்லை………………!
அன்பானா பேச்சுக்கு
எப்போதும் குறைந்ததில்லை……………..!
~
சொந்த அக்காவா என்று
யார் யாரோ கேட்டபோதும்
மெளனம் கொண்டேன் – இருந்தும்
இல்லை என்று என் மனம் நினைத்ததில்லை………….!
~
ஒன்றாக பேசி ஒன்றாக
சிரித்து மகிழ்ந்ததுண்டு……………….!
சண்டை கூட வந்ததில்லை
நம் அன்பானா பேச்சாலே……………..!
~
பொய்யான வார்த்தைகள்
சொன்னதில்லை……………!
மனதாலே சோகங்கள்
வேண்டாம் என்று………..!
~
தொலை தூரத்தில் இருந்தும்
அன்பாலே தொடர்கிறது நம் உறவு……….!
~
சொந்தமாய் ஓர் அக்கா
எனக்கில்லை- இருந்தும்
நீ வந்தபின் நெஞ்சில்
அந்த கவலை இல்லை………….!
~
மனசாலே உறவான நாம்
காலம் உள்ள காலாம் வரை
பிரியாமல் வாழ
இறைவனை வேண்டுகிறேன்………..!
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
No comments:
Post a Comment