Followers

திருக்குறள்

Thursday, October 14, 2010

குழந்தையிடம்.........

இரண்டு முறை

பிரகாரம்
சுத்திவந்துவிட்டு

கால்வலிக்கிறதென்று
அரச மரத்தில் சாய்ந்து
கால்நீட்டி

அமர்ந்துகொண்டது
குழந்தை...


கோவிலைச் சுற்ற

அழைத்த அம்மாவின்
அழைப்பை நிராகரித்தபடி.....


என்னசெய்வதென்று

புரியாமல்
கெஞ்சிக்கொண்டிருந்தாள்
அம்மா....


குழந்தையிடம்

கெஞ்சுகின்ற
சுகத்தை கடவுளிடம்

கெஞ்சுவதில்
பெறமுடியாதுதான்.......
 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.