Followers

திருக்குறள்

Tuesday, October 5, 2010

நிரூபணம் செய்தவள் நீ

 

என்னைக் கிள்ளி
எடுத்து
உன் கூந்தலில்
சூடிப்போ!

*************************************************************
நீ எல்லாவற்றையும்
மறைக்கிறாய்.
என்னையும் உன்னுள்.

*************************************************************
ஒவ்வொரு பார்வையிலும்
ஓராயிரம் ரகசியத்தை
உன் விழிகள் சொல்கின்றன.
-சும்மாதான் பார்த்தேன்
என்கிறாய்!என்னையே உன்
பார்வையால் விழுங்கிவிட்டு.

****************************************************************
உன் கடிதங்களை
எதிர்பார்ப்பது கூட
வழக்கமாகி விட்டது.
எப்பொழுதும் நீ
கடிதம் எழுதாத போதும்.

******************************************************************
எனக்கு பிடிக்காததையே
செய்யும்
எனக்குப் பிடித்தமானவள் நீ.

*******************************************************************
உனக்கே என்னை
தெரியவில்லை எனில்
யாருக்குத் தெரிந்து
என்ன பயன்?

**************************************************************
நீ தான் சொன்னாய்
நீ என்னில் பாதி என.
தவறு சகி
நான் உன்னுள் முழுமை.

***************************************************************
எப்போதும் போல் வசந்தம் வருகிறது
பூமி குளிர்கிறது
நீயும் நானும் வேறுவேறு பக்கம்
சுவாசித்தும்.

*****************************************************************
ஆறாதிருந்த ரணத்தின் மேல்
கனல் கக்கும் வேல்
எய்தவள் நீயும் சுகமற்றிருக்க !

*****************************************************************

எனது பிரியத்தின் மீது
மிகப்பெரிய முற்றுப்புள்ளியை
வைத்தவள் நீ!

*****************************************************************
நாவுகள் நிஜம் பேசுமென்பது
நம்பத்தகுந்ததல்ல என்பதை
மறுபடியும் நிரூபணம் செய்தவள் நீ !
 

 

 



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.