Followers

திருக்குறள்

Thursday, October 7, 2010

கோழையாய்த்தான் வாழ்கிறேன்



 

நீ சிரித்துக் கொண்டே
இருந்த உன் நிழல்படம்

அழகான கையெழுத்தோடு
உன் வாழ்த்து அட்டைகள்

எழுத்துக்களை மிச்சம்பிடித்து
 நீ எழுதியனுப்பிய கடிதங்கள்

ஆழமாக அழுத்தி அழகாக
எழுதிய உன் கவிதைகள்

உன் அவசர மின்னஞ்சல்கள்
உன் ஆறுதல் குறுந்தகவல்கள்

இப்படி நீ அனுப்பிய
அத்தனையும் அன்று
 நான் அழித்துவிட்டு
வீரனாய் பெருமை
கொண்டபோதும்

இன்றும் என்னால் உன்னை
என் இதயத்தில் இருந்து
இறக்கமுடியாமல் போவதில்
கோழையாய்த்தான் வாழ்கிறேன்

 

 

 



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.