Followers

திருக்குறள்

Monday, November 22, 2010

வகுப்பறை மேசை

வருடக்கணக்காய்
பேசிய பேச்சுகளை
எல்லாம்
கூடவே
அழைத்து வருகிறது
என்றேனும் வரும்
ஒற்றை
குறுந்தகவல்

பல
இதயங்களின்
கவிதைகளை
சுமந்திருக்கும்
கவிதைப் புத்தகம்
வகுப்பறை மேசை

வேவ்வேறு திசைகளில்
இதழ்களாய்
விரிந்தாலும்
இணைந்தே இருக்கின்றோம்
நட்பு என்னும்
ஒற்றைக் காம்பில்

இன்னும்
உலராமலேயே
இருக்கிறது
கடைசியாய்
நீ
உயிர்தொட்டு எழுதிய
நினைவேடு

கல்லூரி
கடைசி நாள்
பறவைகளின் கூட்டில்
சலசலப்பு


இப்பொழுதும்
கல்லூரிப்
பேருந்தைப்
பார்க்கும் போதெல்லாம்
தேடத் தொடங்கிவிடுகின்றன
தோள்கள்
தலை சாய்த்து
உறங்கிய
தோழியை

பெற்றோர்
இட்ட பெயரும்
அந்நியமாய்த்
தெரிகிறது
தோழிகள்
சூட்டிய
செல்லப் பெயரில்

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.