Followers

திருக்குறள்

Monday, November 22, 2010

முத்த மழையில்

உன்
முத்தங்களின்
ஈரங்களும்
அழகாய்
வரைகிறது
நம் காதலை

எனக்காக‌
கவிதை
எழுதிக்கொடு
என்று கேட்டதும்
அழகிய
கவிதைகளை
எழுதி விட்டு
சென்றன‌
உன் உதடுகள்

கடற்கரையில்
நம்மை
பார்த்ததும்
ஆசையாய்
பாதங்களை
ந‌னைக்க வந்த‌
அலைகளையும்
வெட்கம் கொள்ள செய்தன
நம் இதழ்கள்!


தொடக்கமும்
முடிவும்
அறியா
நெடுந்தூரப் பயணம்
காதல்


தூக்கத்தில்
நான் எப்போதும்
சிரித்துக் கொண்டிருப்பதாக‌
தோழிகள்
கேலி செய்கிறார்கள்
அவர்களுக்கு
எங்கேத் தெரியும்
நான் உன்னோடுதான்
சிரித்துக் கொண்டிருக்கிறேன்
என்பது

எத்தனை
முறை
சுவைத்தாலும்
திகட்டாத‌
தித்திப்பு
உன்
முத்தங்கள்


கோடையில்
எல்லோரும்
வாடிக் கொண்டிருக்க‌
நான்
ம‌ட்டும்
குளிர்ந்துக் கொண்டிருந்தேன்
உன்
முத்த மழையில்

தனித் தனித்
செடிகளாய்
வளர்நத‌
நம்மில்
ஒற்றை
மலராய்
காதல்


நம்
விழிகள்
எழுதிய‌
முதல்
கவிதை
காதல்


உன்
கெஞ்சல்களில்
தோற்று விடுகின்ற‌‌ன‌
என்
கொஞ்சல்கள்

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.