Followers

திருக்குறள்

Thursday, November 25, 2010

இதழ் வரி.....

உதடுகள்
கொடுத்துக்கொண்டே

இருக்க
சோர்ந்து போகிறது
முத்தம்....

*

நீயிறங்கி

குளிக்கும்போது,
நீர்த்தொட்டி – பூந்தொட்டி.
முடிக்கும்போது

தேன்தொட்டி

*

பாறையில் முளைத்தது

பூஞ்செடி.
மொட்டை மாடியில் நீ!
நம் சந்திப்பின் முற்றுப்புள்ளி,
நீ வைக்கும் முத்தப்புள்ளி!

*

நீ
ஓவியமாக்க

வேண்டிய கவிதையா?
கவிதையாக்க

வேண்டிய ஓவியமா?

*

வதைத்தே கொல்லும்
தேவதை நீ!

*

உனக்குள் இருக்கும்

எனக்குள்
நீ எப்போது நுழைந்தாய்?

*
என் இரவு.
நீ கனவு.
என் பகல்.
நீ நினைவு.

*

எங்கு முத்தம்

வாங்கினாலும்,
இதழ்வரிகளில்

செலுத்த வேண்டும்…
இதழ் வரி.

*

உன் பார்வை,
கண்காட்சியா?
மலர்க்காட்சியா?

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.