Followers

திருக்குறள்

Monday, December 13, 2010

பெண் குழந்தை.....

 
தலை சுற்றியது
வாந்தி உயிர்
எடுத்தது
கருதான் என்று
முடிவானதும்
வலிகளை ஏற்க
துணிந்தது உடல்....
 
கண் இப்படி
மூக்கு இப்படி
சிரிப்பு இப்படி என
பிஞ்சினை நெஞ்சில்
நிறுத்தியது உருவம்
இல்லாத குழந்தை....
 
ரோஸ் நிற உடையும்
தழுவல் நடையும்
கொஞ்சும் சிரிப்பும்
கொலுசுக் கால்களும்
பெண் குழந்தையே கனவில்....
 
ஆசையாய் காத்திருந்து
வலிகளைப் பொறுத்து
தேவதையைக் கையில்
வாங்கியதும்
வலி மறைந்தது
அதன் அழகில்.....
 
பெண்தானா உனக்கும்
நமக்குத்தான்
கொடுப்பினையே இல்லை
அம்மா சொன்ன போது
வலி அப்போது தெரிந்து
என் பிறப்புக்காய்!.......

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.