Followers

திருக்குறள்

Tuesday, February 8, 2011

மண்ணாகவே இருந்திருக்கலாம்!

 
உதடுகள்
 கொடுத்துக்கொண்டே இருக்க
 சோர்ந்து போகிறது
 முத்தம்.
 *
 நீயிறங்கி குளிக்கும்போது,
 நீர்த்தொட்டி – பூந்தொட்டி.
 முடிக்கும்போது தேன்தொட்டி
 *
 பாறையில் முளைத்தது பூஞ்செடி.
 மொட்டை மாடியில் நீ!
 நம் சந்திப்பின் முற்றுப்புள்ளி,
 நீ வைக்கும் முத்தப்புள்ளி!
 *
 நீ
 ஓவியமாக்க
 வேண்டிய கவிதையா?
 கவிதையாக்க
 வேண்டிய ஓவியமா?
 *
 வதைத்தே கொல்லும்
 தேவதை நீ!
 *
 உனக்குள் இருக்கும் எனக்குள்
 நீ எப்போது நுழைந்தாய்?
 *
 என் இரவு.
 நீ கனவு.
 என் பகல்.
 நீ நினைவு.
 *
 எங்கு முத்தம் 
 வாங்கினாலும்,
 இதழ்வரிகளில்
 செலுத்த வேண்டும்…
 இதழ் வரி.
 *
 உன் பார்வை,
 கண்காட்சியா?
 மலர்க்காட்சியா?
 *
 நம் சந்திப்புகள்
 இரவில் வேண்டாமென
 நிந்திக்கின்றன…
 நம் நிழல்கள்!
 *
 கதை சொல்கிறேனென சொல்லி
 நீ சொல்வதெல்லாம் கதை.
 செய்வதெல்லாமோ கவிதை!
 *
 முகம் துடைத்த
 கைக்குட்டையைத் துவைக்காதே.
 அழுக்கு படிந்ததைத் துவைக்கலாம்…
 அழகு படிந்ததை?
 *
 பிடித்துவிட எத்தனிக்கையில்
 மறைந்து விடுகிறது வானவில்.
 கூடவே என் வானமும்.
 *
 என் காதல் கேள்விகளுக்கு 
 நீயே விடை என்றிருந்தேன்.
 நீயோ கேள்விகள்
 எதுவுமின்றி என்னிடமிருந்து,
 'விடைபெற்றாய்'!
 *
 களிமண்ணை
 சிற்பம் ஆக்கினாய்.
 பிறகு ஏனோ
 உடைத்துப் பார்த்தாய்.
 மண்ணாகவே
 இருந்திருக்கலாம்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.