Followers

திருக்குறள்

Monday, February 7, 2011

தனிமை

துயரங்களால்
துவண்டு
கிடக்கிறேன்.

சாய்ந்து கொள்ள
ஒரு தோள் நோக்கி,
என் தேடல்
தொடங்குகிறது.

அம்மா வருகிறாள்.
அவளுக்கே
இதயம் பலவீனம்.
சாய்ந்து கொள்ள
மனமில்லாமல்
நடக்கிறேன்.

நண்பன் வருகிறான்.
மணமான மகிழ்ச்சியோடு.
சாயாமல் நடக்கிறேன்.

காதலி வருகிறாள்.
கையில் திருமண
அழைப்பிதழோடு.

விழுந்து விடாமல்
நடக்கிறேன்.
வழக்கம்போல
தூரத்தில் எ
னக்கானத் தோள்களோடு
காத்துக் கொண்டிருக்கிறது
தனிமை.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.