Followers

திருக்குறள்

Thursday, April 14, 2011

எனக்கும் உனக்குமான காதல்


சிறகுகள் இன்றி
பறக்கிறது இதயம்,
உன் உறவு வந்ததால...
 
இத்தனை
வருடங்களில்
இல்லாதமாற்றங்கள்
கடந்த சில நாட்களாய்
நாட்குறிப்பேட்டில்
அழகாய் தெரிகிறது..!

உன்னைப் பற்றிய
நினைவுகள்
மெல்ல கசிகிறது
என் ஞாபக
பெருவேளிகளில்
பாலைவனங்களின்
நீர்வீழ்ச்சியாய்
மனம் தினம் தினம்
மகிழ்ச்சியில்
அலை மோதுகிறது..!
 
இத்தனை நாட்களாய்
முகம் மட்டுமே
காட்டியக் கண்ணாடி
இப்பொழுதெல்லாம்
என்னைப்பார்த்து
ஏதேதோ பேசுகிறது...!
எழுத்தாணி
தீண்டிய காகிதமாய்
மெல்ல வெட்கப்படுகிறது
உனக்காக நான் கிறுக்கிய
வார்த்தைகளெல்லாம் ..!

அலைகளாய்
நீ உதிர்க்கும்
வார்த்தைகளில்
எல்லாம் தினம்
கிளிஞ்சல்களாய்
சிதறிப்போகிறேன்..!

அருகில் இல்லாத
உன் உருவம்
விழி போகும் திசை
எங்கும் பின்
தொடர்கிறது
உடன் வரும்
நிழலாய்...!
எங்கோ தூரத்தில்
கசியும் இசையில்
மெல்லக் துயில்
கொள்கிறது
உன் நினைவுகள..!
உன் நினைவுகளை
எழுதியே
கரைத்துக் கொண்டிருக்கிறேன்
ஆனால் நீயோ
நான் எழுதாத
வார்த்தைகளால்
மீண்டும்
என் இதயத்தை
மெல்ல நிரப்பிக் கொண்டிருக்கிறாய்..!
நுரையீரல் தீண்ட
முயற்சித்து
தோற்றுப்போகும்
சுவாசக் காற்றாய்
உன் மறுத்தலின்
உச்சத்தில்
சிலுவைகளில்
அறையப்பட்டு
மீண்டும் நீள்கிறது
எனக்கும் உனக்குமான காதல் 
உடன் படிக்கைகள் .!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.