Followers

திருக்குறள்

Tuesday, June 28, 2011

தோற்றுக்கொண்டே போகின்றேன்..

உன்னை மறக்க முயற்சிக்கும்

ஒவ்வொரு நிமிடமும்

உன் நினைவுகளால்

என்னை உயிர்ப்பிக்கின்றாய்

 

உன்னுடன் பேசிப்பழகிய

அந்த அழகிய தருணங்களை

என் மனம் எண்ணிப் பார்க்கின்றது

முடியவில்லையடா என்னால்..!!

 

உன்னிடம் மட்டுமே

தோற்றுக்கொண்டே போகின்றேன்..

கண்ணீர் சிந்தும் என் கண்களை விட

உன்னை மறக்க நினைத்தும்

மறக்க முடியாமல் தவிக்கும்

என் இதயதிற்கே வலி அதிகமடா..

 

உன்னை பிரிந்திருக்கும் ஒவ்வொரு நொடியும்

என் அத்தனை நரம்புகளிலும்

வலியை உணர்கிறேன்..

உன் பிரிவு சொல்லும் இந்த வலியை விட

மரணத்தின் வலி கூட பெரிதில்லடா..!!

 

நாட்கள் நகர தொடங்கிவிட்டன ஆனாலும்

உனக்கான தேடல்களும் எனக்குள்

அதிகரிக்க தொடங்கிவிட்டன..

ஒரு நிலையில் உன் நினைவுகளால்

என் சுயநிலையை இழந்திடுவேனோ

என்கிற பயமும் என்னுள் அதிகரித்துவிட்டது..

 

சத்தமின்றி என் மனதோடு

உன்னை மறப்பேன் என்று

செய்துகொண்ட சத்தியமும்

ஏனோ உன் நினைவுகளால்

இன்று செயல் இழந்து போய்விட்டது.!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.