Followers

திருக்குறள்

Tuesday, June 28, 2011

காத்துக்கிடக்கிறது...

தேவைகள் தீர்ந்து

போகாத தேகத்தில் தாகமென

நீள்கிறது நமக்கான காதல்...!!

  

ஒட்டி வைக்க இயலாத

புன்னகையின சத்தமாய் குவிந்துகிடக்கிறது

 இதழ்கள் எங்கும்   ஒரு சோகம்...!!

  

புரிந்துகொள்ள

இயலாத உரையாடல்களின

தொகுப்புகள் எல்லாம் இன்னும்

உறங்கிக் கிடக்கிறது என் மௌனத்தில்... !!

 

 ரணங்களின் உச்சமாய்

கிளிஞ்சலென சிதறிக் கிடக்கிறது

நம் இருவருக்குமான

எதிர்பார்ப்புகள்....!!! 

 

 வார்த்தைகள் பல தொடுத்து

சேர்த்து வைத்த உரையாடல்கள் எல்லாம்

காத்துக்கிடக்கிறது கடிகாரத்தின் பக்கத்தில்

உனது வருகைக்காக..!!!

 

நீ அருகில் இருப்பதில்

இல்லாத மகிழ்ச்சியை

தனிமையில் உன்னை

நினைத்தலின் உச்சத்தில் உணர்கிறேன் .

 

உந்தன் விடை தரும்

பார்வை ஒன்றின் உச்சத்தில்

துடிதுடித்து மெல்ல அமைதி கொள்கிறது

குட்டி இதயம் ஒன்று உள்ளுக்குள்...!!

 

யுத்தம் செய்து சத்தமின்றி

இறந்து போவதை விட

யுத்தமின்றி நித்தம் உன் நினைவுகளில்

கரைந்து போவதில் எனக்கு மகிழ்ச்சியே !

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.