Followers

திருக்குறள்

Wednesday, June 1, 2011

பள்ளி விடுதி!.......


      உன்னைக் கட்டிப்பிடிக்கும்
      காலங்களில் விடுதியில்
      விட்டுச்சென்றாய்- என்னைப்
      படிப்புக்காக விற்றுச்சென்றாய்!
      
      என் கால்கள் இரண்டும்
      உனக்காக முண்ட;
      கத்தி அழுதேன் நீயோ
      உன் காதை பொத்திச்சென்றாய்;
      விழியால் கதறிச் சென்றாய்!
      
      இருள் சூழ்ந்த இரவில் உன்
      அணைப்பிற்கு ஏங்கி அழுவேன்;
      உன்னால் தலைக்கோதி
      இமைமூட வேண்டிய என்னை;
      கம்புடன் கண்ணை மூடச்சொல்லும்
      விடுதி ஊழியன்!
      
      அழுது அழுது
      அழுத்துப்போன;
      கனத்துப்போன மனம் - இனி
      விடுப்பேக் கிடைத்தாலும்
      விருப்பமில்லை
      வீட்டிற்க்குச் செல்ல!
      
      பழகிப்போனப் பிரிவோ
      எனக்கு மரத்துவிட்டது;
      உங்களைக் காணத் தடுத்துவிட்டது!
      
      விண்ணப்பம் என்று
      ஒன்றுமில்லை;
      விருப்பமிருந்தால செய்யுங்கள்
      அனுப்பி விடாதீர்கள் தம்பியையும்
      பள்ளி விடுதிக்கு!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.