Followers

திருக்குறள்

Wednesday, June 1, 2011

மசக்கை!.....


      ஆண்மைக்கு
      இனிப்புக்கொடுத்து;
      அழுதுக்கொண்டே
      நீ சொன்னாய்
      மசக்கை என்று;
      பிரிந்துச் சென்ற உதடுகளும்
      சுருங்கிப்போன இதயமுமாக நான்!
      
      உறவுகள் குழந்தைக்குப்
      பெயர் தேடிப்;
      பக்கங்களை திண்றுக்கொண்டிருக்க;
      இணையத்திலும்;
      இணைந்த நண்பர்களிடமும்
      பெயர் வேட்டை
      நான் இங்கு நடத்த!
      
      ஆணா!பெண்ணா என
      ஆராய்ச்சி நடக்க;
      அழுதுக்கொண்டே
      நீ சொன்னாய்
      வந்திடுங்க!
      
      சொன்னதும் சோகம் வெடிக்க;
      சிரித்துக்கொண்டே
      ஆறுதல் சொல்வேன் உனக்கு!
      கேட்டுக் கேட்டு
      அலுத்துப்போனாலும்;
      அழுதுக்கொண்டேக்
      கேட்பாய் மீண்டும்!

      ஒட்டியிருக்கும் சோகங்களைப்
      போர்வைக்குச் சொந்தமாக்கி;
      எல்லோரும் உறங்கியப்பின்னே
      எழுந்து அழுதுவிட்டு;
      வீங்கியக் கண்ணைத்
      துடைத்துவிட்டுத்
      தூங்கச் செல்வேன்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.