Followers

திருக்குறள்

Friday, September 9, 2011

தாய்மை...!



அம்மா,
அணுவைச் சிதைத்து 
ஏழ்கடலைப் புகட்டிப் 
பொதுவாய் நின்ற 
ஓர் இன்பக்கொள்கை!
அம்மா...!

உலக வாழ்க்கைக்கு 
அப்பாற்பட்ட ஓர் உண்மை 
உயிர்பெற்று உலவுகிறது 
இவ்வுலகில்...!


அம்மா என்ற மூன்றெழுத்து ,
மனம் என்ற மூன்றில் பிறந்து,
உயிர் என்ற மூன்றில் கலந்து,
தாய்மை என்ற மூன்றில் 
முடிசூடிக்கொள்கிறது,
இவ்வுலக உறவுகளிடம்...!


ஆயிரம்கோடி எழுத்துக்கள் இருந்தும் 
வர்ணிக்க முடியாத வார்த்தைகளால் 
வேயப்பட்ட ஓர் அன்புக்கூரை,
அம்மா...!


ஆண்டாண்டு அழுதுபுரன்டினும் 
ஆண்களுக்குக் கிட்டாத ஓர் 
அரிய உணர்வு,
தாய்மை...!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.