Followers

திருக்குறள்

Sunday, October 2, 2011

துணிக் கடையிலாவது


எல்லாரும் வெக்கப்பட
கவிதை எழுதுவார்கள்_ நான்
வெக்கப்படும் கவிதைக்காய்
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்

*

நீ
மட்டும் சேலை கட்ட
நேரம் எடுப்பதில்லை
சேலை உன்னைக்
கட்டுவதால்

*

நீ
கவிதை
படிக்கிறாயா

இல்லை

உன்னைக்
கவிதை
படிக்கிறதா

பார்
மறுபக்கம் போக
பஞ்சிப்படுவதை

*

உன்னைச் சேரும்
ஒவ்வொன்றும்
என்னை
ரசிகனாக்கிறது

இசைக்கும் உன்
கால் கொலுசு முதல்

*

துணிக் கடையிலாவது
என் கையை விடாது
பிடித்துக் கொள்

நீயென்று நினைத்து
நான் பொம்மை கைகளை
பிடித்துவிடுகிறே

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.