Followers

திருக்குறள்

Sunday, October 2, 2011

புரியாமல் போனது

Actress Anchal In Half Saree

கும்பாபிசேக மேளச்சத்திலும்
அமைதியாய் இருக்கும்
சாமி போல
அடக்கம் உனக்கு

எப்படி
நாதஸ்வர இசைபோல
வாசித்தாய் உன் காதலை

*

அழும் குழந்தையைக்கூட
அழகாய் சிரிக்கவைத்து
புகைப்படம் எடுக்க தெரிந்த
கலைஞன் நான்

எப்படி
உன் அழகான
புன்னகை மட்டும்
புரியாமல் போனது
எனக்கு

*
பொறுக்கவே
முடியவில்லை

என் மறதிகளை

நீ கொட்டித்தீர்த்த
ஞாபகங்கள்

அவ்வளவும்
அளவில்ல பொக்கிசங்கள்

*

பிழையின்றி தமிழ்
எழுத தெரியாத என்னை
கவிஞனாக்கவே வந்து
தொலைத்திருக்கிறது காதல்

*

வெக்கப்படுவதற்காகவே
சேலை கட்டும் பெண்கள்
மத்தியில்

வெக்கத்தையே ஆடையாய்
கட்டியிப்பவள் நீ

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.